Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்-புலான்மறுத்தல்-The Renunciation of Flesh-Abstinence de chair- 251- 260


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.251

தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்கமுடியும் ?

எனது கருத்து:

உயிர்வதையை எல்லாரும் சொல்லியிருக்கினம் .ஆனால் ஆர்தான் கேக்கினம் ? எங்கடைசனம் வேள்வியிலையே கொடிகட்டிபறந்ததுகள் ? ஆனால் அதிலை சாகிற உயிருகளுக்கு வாய்மட்டும் இருந்தால் அதுகள் என்னபாடுபடுங்கள் எண்டு யோசிக்கிறேலை . கேவலம் தாங்கடை தசை வளர்றதுக்காக வாய்பேசாத பிராணியளை பிடிச்சுக் கொண்டு சாப்பிடுகிற சனத்திட்டை இரக்ககுணம் ஏதாவது வரும் எண்டு நினைக்கிறியளே ? அரக்ககுணம்தான் வரும் .

How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own?

Comment celui qui mange la chair d’un autre être animé, pour engraisser la sienne, peut-il se laisser gagner par la miséricorde. 

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றவருக்கு இல்லை . அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத்தின்பவருக்கு இல்லை.

எனது கருத்து:

பொருள்பண்டம் சேக்கிறது பெரிய வேலையில்லை. அதை வைச்சுக் காப்பாத்திறதுதான் கெட்டித்தனம் . அப்பிடைப்பட்டவையைத் தான் உடையார் எண்டு சொல்லுவினம். அதைமாதிரி இறைச்சி தின்னிற ஆக்களிட்டை இரக்கம் எண்ட சிறப்பே இருக்காது .

No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate.

Les bienfaits de la richesse n’existent pas pour ceux qui ne la cultivent pas; ainsi que les bienfaits de la miséricorde n’existence pus pour ceux qui mangent la chair.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253

ஓர் உயிரின் உடலைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் இரக்கமற்றுக் காணப்படும் .

எனது கருத்து:

ஆயுதங்களை வைச்சிருக்கிறவையிட்டைப் போய் என்ரை உயிரைக் காப்பாத்துங்கோ எண்டு சொன்னால் இரங்குவினமோ? அதுமாதிரித்தான் இறைச்சி சாப்பிடுறைவையிட்டையும் இரக்கத்தை எதிர்பாக்கேலாது .

Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find.

Le cœur de celui qui mange avec goûte la chair d’un autre être animé ne se tourne pas vers la miséricorde, tout comme le cœur de celui qui a en main une arme meurtrière.

அருள்அல்லது யாதுஎனிற் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.254

கொல்லாமையே அருள் ஆகும் . ஓர் உயிரைக் கொல்லுதல் அருள் இல்லாத தன்மையாகும் . அதன் ஊனைத் தின்னுதல் அறன் இல்லாத செயலாகும் .

எனது கருத்து:

ஒருத்தரிட்டை இரக்கம் இருக்குது எண்டிறதை அவர் ஒரு உயிரை கொல்லாமல் இருக்கிறதை வைச்சுத்தான் கணிக்கிறது. அதிலும் பாவமான வேலை இறைச்சியைத் தின்னுறது .

'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';To eat dead flesh can never worthy end fulfil.

Qu’est ce que la miséricorde? C’est ne pas vers tuer. Qu’est ce qui n’est pas miséricorde? C’est tuer. Donc, manger la chair qui provient du meurtre n’est pas vertueux

உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

புலால் உண்ணும்பழக்கும் பெருகிக்கொண்டே போனால் பிராணிகள் உயிரோடு வாழும் நிலையே அரிதாகிவிடும் .ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது .

எனது கருத்து:

இதில எனக்கு சரியா உடன்பாடு இல்லாமல் கிடக்கு இயற்கை ஒரு சமனிலையை வைச்சிருக்கு . புலாலை உண்ணாமல் விட்டால் எல்லாம் குளம்பி போடுமல்லோ ?

If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again.

La vie des êtres dépend donc de la vertu, appelée abstinence de la chair. Si quelqu’un en mange, l’enfer (qui l’a devoré), n’ouvrira plus la bouche pour le prix.

தின்னல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.256

புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருத்தால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

எனது கருத்து:

எந்தச்சாமியும் தனக்கு அதைத்தா இதைத்தா எண்டு சனத்தைக் கேக்கேல . சனம்தான் விசர்பத்தி கோயில்வளிய கூத்தாடுதுகள். அதில இந்த வேள்வியும் ஒண்டு. எவ்வளவு வாய்பேசாத உயிருகளை கொல்லினம். இவையை நிப்பாட்டினால் ,வெட்டின பிராணியளின்ரை இறைச்சிகளை விக்கிறதுக்கும் ஆக்கள் இருக்கமாட்டினம் .

'We eat the slain,' you say, by us no living creatures die;Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?

Si le monde ne tue pas pour manger la chair, il n’y aura personne qui en vende, pour en toucher le prix.

உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின். 257

ஆராய்ந்து பார்த்தால் புலால் என்பது உயிரினங்களின் புண் என்பது நன்கு புலனாகும். இதை உணர்ந்து புலாலை உண்ணலாகாது .

எனது கருத்து:

ஒருத்தற்றை கையிலை கொஞ்சம் ஆழமாய் வெட்டுங்கோ . தசை பிஞ்சு தொங்கும் .அதை புண் எண்டிறம் . புண் ஆற மருந்து கட்டிறம். இதைப்போலைதான் ஒரு வாய்பேசாத உயிரை வெட்டி சாப்பிட வெளிக்கிட்டால் அதுவும் புண்தான். ஆராவது புண்ணை சாப்பிடுவானோ? 

With other beings' ulcerous wounds their hunger they appease;If this they felt, desire to eat must surely cease.

La viande est la plaie d’un autre être. Ceux qui en connaissent l’impureté doivent s’en abstenir.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவுடையோர், உயிர் வழிவந்த உடலை ஒருபோதும் உண்ணமாட்டார்கள் .

எனது கருத்து:

உங்கடை உடம்பிலை வெட்டுக்காயம் வரேக்கை இல்லாத கடவுளையெல்லாம் கூப்பிட்டு வலியில கத்திறியள் . அதே மாதிரித்தான் வய்பேசாத சீவனுகளை உங்கடை சாப்பிட்டுக்காக வெட்டேக்கை என்ன பாடுபடுங்கள் ??ஒழுங்கான படிச்ச பண்பான ஆக்கள் ஒருக்காலும் இந்த வேலையளைச் செய்து இறைச்சியை சாப்பிடமாட்டினம் .

Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave.

Les sages qui se sont délivrés de l’Illusion et de l’Ignorance ne mangent pas la viande, d’où s’est échappée la vie d’un être. 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.259

பலவேள்விகளைச் செய்வதால் கிடைக்கும் பலனை விட, புலால் உண்ணுதலைக் கைவிடுவதால் வரும் பலன் மிகவும்உயர்ந்ததாகும் .

எனது கருத்து:

ஆயிரம் அறுபத்தெட்டு வேள்வியள் செய்து சாமியைக் கும்பிடுறதை விட , ஒரு உயிரைக் கொண்டு அதின்ரை இறைச்சியை சாப்பிடாமல் இருக்கிறதே திறமான விசையம் கண்டியளோ .

Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share.

Ne pas manger la chair d’un être dont on a enlevé la vie vaut mieux que faire mille sacrifices en ‘répandant du beurre clarifié sur le feu.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.260

கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

எனது கருத்து:

ஐயன் அந்தக்காலத்தில இருந்த நிலமையில சரியாத்தான் சொல்லியிருக்கிறார் . ஆனால் இண்டைக்கு நிலைமை அப்பிடியே கிடக்கு ? எத்தின சாமிமார் இருக்கினம்? அவையின்ரை வண்டவாளங்களெல்லாம் ஒவ்வண்டாய் வருகிது. இவையளும் தாங்கள் தான் கடவுளின்ர அவதாரம் எண்டெல்லாம் புலுடா விடுகியினம் . இவையளையும் இந்த உயிருகள் எல்லாம் கைஎடுத்து கும்பிடுதோ எண்டு ஒரு கேள்வி எனுக்குள்ள வருகிது .

Who slays nought,- flesh rejects- his feet before All living things with clasped hands adore.

Tout être animé vénère, les mains jointes, celui qui ne tue pas et qui a renoncé à la chair.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம