Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்- ஈகை-Giving ,-La charité- 221 - 230



வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221

வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும் . பிறருக்குக் கொடுப்பதெல்லம் பயனை எதிர்பார்த்துத் தருவதாகும் .

எனது கருத்து:

சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை ஒண்டையுமே எதிர்பாக்காமல். வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை இதை சிலபேர் இந்த்க் காலத்தில செய்யினம் ஆனால் காணாது.

Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense.

Donner aux pauvres, c’est faire la charité; il est de a nature de tous les autres dons de n’être faits qu’en vue d’un profit, que l’on en attend dans la suite. 

நல்லாறு எனினும் கொளல்தீது ; மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. 222

நல்ல அறச்செயலுக்காக என்றாலும் பிறரிடம் யாசித்துப் பெறுவது தீமையே. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

எனது கருத்து:

ஏழை எழியவைக்கு குடுக்கிறதுக்கு மற்றவையிட்டை வாங்கி குடுக்கிறது அழுகல் பழக்கம் . தங்கடை சொந்தக்கையாலை குடுகிறதுக்குப்பேர்தான் உண்மையான கொடை. இந்தக் கொடையாலை சொர்க்கம் கிடைக்காட்டிலும் கஸ்ரப்பட்டவைக்கு உதவி ஒத்தாசையா இருக்கிறது தான் உண்மையான வாழ்க்கை .

Though men declare it heavenward path, yet to receive is ill;Though upper heaven were not, to give is virtue still.

Mendier est mauvais, bien qu’il y en ait qui prétendent qu’il conduit à la bonne voie dans ce monde. Donner est bien, bien qu’il y en ait qui prétendent qu’il ne fait pas obtenir le paradis.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள. 223

'யான் வறியவன் ' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் சொல்வதற்கு முன் அவனுக்கு உதவும் பண்பு நற்குடியிற் பிறந்தவர்க்கே உண்டு .

எனது கருத்து:

சிலபேரைப் பாத்தியள் எண்டல் எந்த நேரமும் தங்களைப்பற்றி புறட்டணியம் சொல்லிக் கொண்டிருப்பினம் . ஆரும் ஐஞ்சைப்பத்தை தங்களிட்டை கேட்டுப்போடுவங்கள் எண்டு. ஆனால் சிலதுகள் என்ன கஸ்ரம் எண்டாலும் அதை வெளீல காட்டாமல் கஸ்ரப்பட்துகளுக்கு உதவிசெய்வினம். உயர் குடிப்பிறப்பில பிறந்த ஆக்களை இப்பிடித் தான் ஒருத்தர் கணிக்கிறது .

'I've nought' is ne'er the high-born man's reply; He gives to those who raise themselves that cry.

Ne pas proférer les paroles déshonorantes. ‘‘Je n’ai rien’’ et donner à ceux qui les ont dites: tous les deux actes ne se rencontrent que chez l’homme de bonne famille.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. 224

உதவி பெற்ற பிறகு அதைப் பெறுபவனுடைய முகம் மலராவிடில் . ஒருவன் செய்யும் தானமும் யாசித்தலைப் போல் துயரத்தைத்தான் தரும் .

எனது கருத்து:

இதிலை நான் கொஞ்சம் ஐயனோடை பிழையா இருக்கிறன். ஒருத்தருக்கு குடுக்கக் குடுக்க திறுத்தி இல்லையெண்டால் குடுக்கிறவர் ஏன் கவலைப்படவேணும்? அவரும் தன்னால முடிஞ்ச உதவியளைத் தானே செய்யலாம் .

The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright.

Avoir pitié, ne cause pas la joie jusqu’au moment où l’on voit le visage épanoui du pauvre qui a obtenu (l’aumône).

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 225

தவம் செய்வோர் பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையடைவர் . அவ்வலிமையானது பசியைத் தம் ஈகைத் திறத்தால் நீக்குவோருடையை வலிமைக்குப் பிற்பட்டதேயாகும் .

எனது கருத்து:

வரியம் முன்னூத்து அறுபத்தைஞ்ஞு நாளும் விரதம் கிடக்கிறம் பேர்வழி எண்டு கடவுளை கும்பிடாமல் பசிக்கிது எண்டு வாறவனுக்கு வயிறு குளிரப்பண்ணி அனுப்பிறதுதான் உலகத்திலேயே பெரிய கொடை .

'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain.

Le mérite des hommes fermes á souffrir la faim, ne vient qu’après le mérite de celui qui apaise la faim d’autrui. 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226

ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும் ; அதுவே பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

எனது கருத்து:

பசிக்கிது எண்டு வாறவன்ரை வயிறைக் குளிரைப் பண்ணிறது தான் காசுபணம் உள்ளவையின்ரை உணமையான சேமிப்பு வங்கி . பேந்து உங்களுக்கொரு கஸ்ரம் எண்டு வந்தால் ஆரும் உதவி செய்வினமல்லோ.

Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure.

Apaiser la faim déchirante des pauvres, est le moyen de mettre sa propre richesse en sécurité.

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. 227

பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை .

எனது கருத்து:

எல்லாருக்கும் குடுத்து சாப்பிட்டியள் எண்டால் உங்கள பஞ்சம் பட்டினி வாட்டாது .ஆரும் கைகுடுத்துக் கொண்டுதான் இருப்பினம்.

Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel.

La cruelle maladie appelée faim n’afflige pas celui qui est accoutumé à partager ses repas, avec les hôtes.

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழுக்கும் வண் கணவர். 228

தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் இரக்கமில்லாதவர்கள் ,பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள் .

எனது கருத்து:

தான் குடுத்து ஏழையின்ரை முகத்திலை சிரிப்பை பாக்கிறவன்தான் உண்மையான மனிசன் .கஞ்சாப்பியள் தங்கடை சொத்துபத்துகளை பதக்கி பதுக்கி வைப்பினம் .ஆனால் அவையின்ரை முகத்தில சந்தோசம் இருக்காது.

Delight of glad'ning human hearts with gifts do they not know.Men of unpitying eye, who hoard their wealth and lose it so?

Ce sont ceux qui sont dépourvus de la grâce qui thésaurisent et perdent ensuite leur fortune. Ils ne connaissent donc pas le bonheur éprouvé par ceux qui donnent ? 

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். 229

ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளிக்காமல் தான் மாத்திரம் உண்பவன் நிலை யாசிப்பதிலும் கீழாகும்.

எனது கருத்து:

மற்றவனுக்கு குடுக்கிறதாலை தங்கடை தேட்டம் எல்லாம் அழிஞ்சு போகும் எண்டு தாங்களே சாப்பிடறவையின்ரை நிலமை பிச்சை எடுத்து சீவிக்கிறவைய விட கேவலமானது ஐயன் ரென்சனாய் போய் சொல்லுறார்

They keep their garners full, for self alone the board they spread;'Tis greater pain, be sure, than begging daily bread!

Manger solitaire afin de remplir (son trésor) cause une douleur plus aigue que mendier.

சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை. 230

யாசகர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவ முடியாத நிலை வந்தால் துக்கத்தை அளிக்க வல்ல மரணமே சிறந்ததாகும் .

எனது கருத்து:

வாழ்க்கையில ஒருத்தன் செத்துப்போறதுதான் பெரிய துன்பம் ஆனால் ஒருத்தனுக்கு ஒண்டையும் குடுக்கேலாத நிலமை வந்தால் இருக்கிறதிலை பிரையோசனமில்லை கண்டியளோ .

'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give!

Il n’y a rien de plus cruel que mourir. Il vaut mieux mourir qu’être impuissant à donner.


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம