Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல் தவம்-Penance-La penitence- 261-270

 

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை 
அற்றே தவத்திற்கு உரு.261

தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிருக்கு துன்பம் செய்யாதிருத்தலும், ஆகிய இவையே தவத்திற்கு இலக்கணமாகும் .

எனது கருத்து:

ஒருத்தர் தனக்கு வாற எந்தக்கஸ்ரத்தையும் தாங்கித்தரிக்கிற குணமும் , முக்கியமாய் மற்றவனுக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கிறது தான் உண்மையான தவம் எண்டு ஐய்யன் சொன்னாலும் , ஒருத்தன் எவ்வளவு தூரத்துக்கு துன்பத்தை தாங்கலாம் எண்டதையும் சொன்னால் நல்லாயிருக்கும் .

To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'.

Le propre de la pénitence, c’est de supporter ses propres douleurs et de ne pas faire souffrir un autre être doué de vie.

தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அவம் அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது. 262

தவநெறிக்கு ஏற்ற வாய்ப்பு உடையவர்க்கே தவமும் கை கூடும்.தவப்பயன் இல்லாதவர்கள் அதனை மேற்கொள்வது வீண் முயற்சியாகும் .

எனது கருத்து:

மனம் ஒரு குரங்கு பாருங்கோ. அதை கட்டுக்குள்ளை கொண்டுவந்து , எதிலையும் இரும்பு மாதிரி உறுதியா இருக்கிறவைக்குத்தானாம் தவத்தின்றை பெருமை கிடைக்கும். இதுகளை செய்யமுடியாதவை தவமே செய்யத்தேவையில்லை எண்டு இப்பத்தையான் சாமிமாரை நினைச்சு அப்பவே ஐயன் சொன்னாரோ தெரியாது .

To 'penitents' sincere avails their 'penitence'; Where that is not, 'tis but a vain pretence.

La pénitence profite à ceux qui l’ont faite (dans les existenses antérieures) et ne réside réellement qu’en eux; l’entreprendre pour la première fois, est un effort inutile. 

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி , மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். 263

சிறந்த தவசிகளுக்கு உணவு அளித்து உதவுவதற்காக இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்

எனது கருத்து:

துறவியளுக்கு உதவி செய்யிறம் எண்டதுக்காக நாங்கள் செய்யவேண்டிய தவ ஒழுக்கத்தை ஒருக்காலும் மறக்க்க் கூடாது எண்டு ஐயன் சொல்லியிருக்கிறார் . ஆனால் இப்ப எங்கடை மதுரை ஆதினம் நித்தியானந்தாக்கு உதவி செய்யிறன் பேர்வளி எண்டு கோமாளிக் கூத்தாடி ஆப்பு இழுத்த குரங்காய் அல்லோ நிக்கிறார் .

Have other men forgotten 'penitence' who strive To earn for penitents the things by which they live?

Les autres (qui mènent la vie familiale), dans le désir de donner à ceux qui ont renoncé au monde: nourriture, médicaments et hospitalité, semblent avoir oublié de faire eux-mêmes pénitence ! 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். 264

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவவலிமையினால் கைகூடும்.

எனது கருத்து:

நெஞ்ஞில தில்லும் ஒழுக்கமான ஆக்களாய் இருந்தால் நினைச்ச மாத்திரத்தில எதிரியளை வீழத்தவும் , நட்புகளை காக்கலாம் எண்டு சொன்னால் , இப்பவும் சரி அப்பவும் சரி ஏன் சண்டையில ஆயுதங்கள் வந்தது ?

Destruction to his foes, to friends increase of joy. The 'penitent' can cause, if this his thoughts employ.

Si les pénitents désirent ruiner leurs ennemies et enrichir leurs amis, ils réalisent leur désir, par la puissance de leur pénitence.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம்
ஈண்டு முயலப் படும். 265

தவத்தினால் வேண்டிய பயன்களை வேண்டியவாறே அடைய முடியுமாகையால் செய்வதற்குரிய தவத்தை செய்ய இல்லறத்தானும் முன் வரலாம்

எனது கருத்து:

தான் நினச்சதை தவத்தால செய்யமுடியும் எண்டதால இல்லறத்தில இருக்கிற ஆக்களும் தவம்செய்ய முன்னுக்குவரவேணும் எண்டு ஐயன் சொல்லுறார் .சரி.... ஒருகதைக்கு ஒருத்தன் தான் நினைச்சதை தவத்தாலை செய்யலாம் எண்டால் , உலகம் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சந்தோசமாய் எல்லோ இருக்கவேணும்? ஏன் இப்பிடி நாறிப்போய் கிடக்கு?

That what they wish may, as they wish, be won, By men on earth are works of painful 'penance' done.

Parce que, si l’on s’y efforce, l’on obtient tous les mérites que l’on désire pour l’autre monde, on doit s’efforcer de faire pénitence, dans ce monde même.

தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றுஅல்லார்
தவம்செய்வார் ஆசையுள் பட்டு. 266

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையை செய்கின்றவர் ஆவார் . மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவார் .

எனது கருத்து:

மனசை அடக்கினவன் உலகத்தை ஆளுவான் எண்டு பெரிசுகள் சொல்லுவினம் . இதுக்கு மாறா நடக்கிறவை தேவையில்லாத வேலையள் பாத்து தங்கடை சீவியத்தை முடிப்பினம்.

Who works of 'penance' do, their end attain, Others in passion's net enshared, toil but in vain.

Ceux qui font pénitence font leur devoir; les autres se laissent prendre dans le piège des désires et font leur propre malheur.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவர்களைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும் .

எனது கருத்து:

இதுக்கு எங்கடை சனங்களைத்தான் சொல்லவேணும். 

The hotter glows the fining fire, the gold the brighter shines; The pain of penitence, like fire, the soul of man refines.

Plus la flamme du feu est violente, plus brillant devient l’éclat de l’or qui y est fondu. De même, plus aigues sont les souffrances causées par les austérités, plus brillante devient la sagesse des pénitents. 

தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும். 268

தவ வலிமையினால் " தான் "என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும் .

எனது கருத்து:

எவன் ஒருத்தன் தன்ரை உயிரிலை பாசம் வைக்காமலும் நான் எண்ட மண்டைக்கனம் கூடாமலும் இருக்கிறானோ , அவனை உலமே கையெடுத்து கும்பிடும் . அப்பிடி பாத்தால் இண்டைக்கு ஒருத்தரையும் சொல்லேலாது .

Who gains himself in utter self-control, Him worships every other living soul.

Tous les autres êtres vénèrent celui qui a réussi à faire de sa vie, son propre bien, grâce à sa pénitence.

கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269

தவத்தின் மூலமாக ஆத்ம வலிமை பெற்றவர்களுக்கு யமனை வெல்லுதலும் கைகூடும் .

எனது கருத்து:

உண்மை!சத்தியமான சொல்லு ........ 

E'en over death the victory he may gain, If power by penance won his soul obtain.

Celui qui excelle dans la puissance, qui provient de la pénitence peut même réussir à triompher de Y aman (dieu de la mort).

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். 270

உலகில் ஆற்றல் இல்லாதவர்கள் பலராக இருக்கக் காரணம் யாதெனில் தவம் செய்பவர் சிலராகவும் , தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பது தான் .

எனது கருத்து:

பொறுத்தார் பூமியாழ்வார் எண்டு சொல்லுவினம் . ஆனா ஒருத்தரும் பூமி ஆளேலை . ஏன் எண்டால் சனத்திட்டை பொறுமை குறைஞ்சாக்கள் கூடவாயும் பொறுமை கூடினாக்கள் குறைவாயும் இருந்தால் எப்பிடியுங்கோ பூமியாழ்வினம் ?

The many all things lack! The cause is plain, The 'penitents' are few. The many shun such pain.

La cause de l’augmentation du nombre des nécéssiteux est le petit nombre de ceux qui font pénitence et le grand nombre des non pénitents.


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம