Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல் கூடாவொழுக்கம்-Inconsistent Conduct-Bonne conduite-De la conduite qu’on de doit pas tenir-271- 280

 

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 271

வஞ்சகனுடைய தீயொழுகத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்சபூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும் .

எனது கருத்து :

ஊரை அடிச்சு உலையிலபோடுறவை அந்த நேரத்திலை நினைக்கலாம் தாங்கள் வெண்டிட்டினம் எண்டு ஆனால் எண்டைக்காவது ஒருநாள் அவையின்ர உடம்பு பஞ்சபூதங்கள் அவையைப் பாத்து சிரிக்கும் .

Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within.

Les cinq sens se rient interieurement de la feinte moralité de l’hypocrite.

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றம் படின். 272

தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத் தோற்றம் என்ன செய்யும் ?

எனது கருத்து :

தனக்கு பிழை எண்டு தெரிஞ்சும் ஒருத்தர் பிழை விடுகிறார் எண்டால் அவர் எப்பிடியான தவக்கோலங்கள் போட்டும் வேலையள் இல்லை.

What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault?

De quelle utilité est l’apparence de pénitent sublime comme le ciel, à celui qui conscient de ses péchés, y persiste. 

வலிஇல் நிலைமையான் வல் உருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று.273

மனக்கட்டுப்பாடு என்னும் வலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம் பசு புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும் .

எனது கருத்து :

இதுக்கு எங்கடை இந்தியாவை சொல்லலாம். ஆன்மீகம் , இந்துமதக்கலாச்சாரத்தை கட்டயாழுகிறம் எண்டெல்லாம் சொல்லி ,ஒரு இனத்தையே வேரோடை அழிச்ச வேலை .அதாவது பசுத்தோல் போத்தின புலி .

As if a steer should graze wrapped round with tiger's skin,Is show of virtuous might when weakness lurks within.

Sans avoir le pouvoir de maitriser sa volonté, celui qui adopte l’apparence des pénitences (qui ont ce pouvoir) ressemble à la vache qui broute les cultures, recouverte d’une peau de tigre (pour n’être pas chassée par les cultivateurs). 

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் துஅற்று. 274

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாதவற்றை செய்ய விரும்புதல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிப்பதற்குச் சமமாகும் .

எனது கருத்து :

ஆனானப்பட்ட இந்திரனே கள்ளப்பூனைபோலை கௌசிகமுனிவற்ற வேசம் போட்டுத்தான் அகலிகையை தன்ரைபக்கம் எடுத்தவன் எண்டால் பாருங்கோ. இது எப்பிடி எண்டால் இந்தியாவும் அவையின்ரை கூட்டாளியளும் புலி பிடிச்ச கதையைப்போலை கிடக்கு.

'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.When, clad in stern ascetic garb, one secret evil works.

Commettre les actes non péniteuts, sous le masque de l’habit du pénitent est pareil à l’agissement de l’oiseleur qui prend les oiseaux, caché dans les brouissailles.

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும். 275

'பற்றுக்களைத் துறந்தோம் ' என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பத்தையே உண்டாக்கும் .

எனது கருத்து :

இதுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதியை உதாரணமாய் எடுக்கலாம். ஒருகாலத்தில காஞ்சி சங்கர மடம் ஒரு புண்ணியமான , ஒழுக்கசீலர்களாக இந்துக்களின்ரை மனசில இருந்திது. சிறீ ஜெயேந்திர் எண்ட மடபீடாதிபதி செய்த வேலையளாலை ,அவர் எப்பிடி நொந்தார்? அந்த மதபீடம் என்ன பாடு பட்டிது ? எண்டு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

Our souls are free,' who say, yet practise evil secretly,'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.

La conduite cachée de ceux qui crient: ‘‘Nous sommes détachés de ce monde’’ leur cause maintes douleurs, de nature à leur faire crier: ‘‘Qu’avons-nous fait? Qu’avons nous fait?’’

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். 276

மனதில் பற்றுக்களைத் துறக்காமல் , துறந்தவர் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போலக் கொடியவர் எவரும் இலர் .

எனது கருத்து :

மனசிலை எதையமே வைக்காமல் முகத்துக்கு நேராய் சண்டைபிடிக்கிறாக்கள் எவ்வளவோ திறம் . ஆனால் நெஞ்சுமுட்ட விசத்தைக்கொண்டு பல்லுக்காட்டிற ஆக்கள் இருக்கினமல்லோ ? கெட்ட கிருமியள்  இவையள் தரவளியைத்தான் மறந்தும் கிட்டவும் அடுக்கக்கூடாது எண்டு ஐயன் சொல்லுறார் .

In mind renouncing nought, in speech renouncing every tie,Who guileful live,- no men are found than these of 'harder eye'.

Il n’y a pas de plus durs de coeur que ceux qui n’ont pas renoncé dans leur for intérieur et qui vivent, à l’instar des pénitents, en trompant les hommes charitables. 

புறங்குன்றி கண்டுஅனைய ரேனும் அகம்குன்றி
முக்கில் கரியார் உடைத்து. 277

புறத்தோற்றத்தில் குன்றிமணியின் செம்மையான நிறம்போல் தோற்றம் உடையவர் என்றாலும் , உள்ளத்தில் குன்றி மணியின் மூக்குப் போலச் கருத்திருப்பவர் உலகில் பலர் .

எனது கருத்து :

நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் இந்தப்பூனையும் பால்குடிக்குமோ எண்ட கணக்காய் பக்கா ஜென்ரில்மன் ரைப்பில இருப்பினம். ஆனால் ,பழகிப் பாத்தியள் எண்டால் நாக்கிலையும் நெஞ்சிலையும் விசத்தை வைச்சிருப்பினம். இப்பிடிப்பட்ட குண்டுமணி ஆக்களின்ரை தொகை இப்ப கூடிக்கொண்டே போகுது .

Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night.

Le monde a des hommes qui, ont un brillant dehors, comme la graine à reglisse, mais dont le cœur est noir comme le bec de la graine à reglisse. 

மனத்தது மாசாக மாண்டார் நீ ர்ஆடி
மறைந்துஒழுகும் மாந்தர் பலர். 278

மனதில் மாசு இருக்கத் , தவத்தால் மாண்பு பெற்றவரப் போல் நீராடி மறைவாக வாழ்கை நடத்தும் வஞ்சனையாளர் பலர் உள்ளனர் .

எனது கருத்து :

இந்தக்காலத்தில ஆக்களை மட்டுக்கட்டுறதே பெரிய கஸ்ரம் .ஆரைப்பாத்தாலும் வெளியால நடைஉடைபாவனையில வெள்ளையாத் தான் இருப்பினம். ஆனால் மனம் முட்ட நஞ்சு. இவையள் கூட இருந்தால் கலி முத்தீட்டுது எண்டு அர்த்தம் .

Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame.

Nombreux sont ceux qui ont le coeur impur mais qui lavent seulement leur corps; comme ceux qui ont acquis les réputations de pénitents et qui vivent sous un faux dehors. 

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் குஅன்ன
வினைபடு பாலால் கொளல். 279

நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது ; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு இன்னிசை தரக்கூடியது ; ஆகவே , மக்களின் பண்புகளை செயல்வகையில் அறியவேண்டும் .

எனது கருத்து :

ஒருத்தரையும் வெளித்தோற்றத்தை வைச்சு மட்டுக்கட்டக்கூடாது . சிலபேரைப் பாத்தியள் எண்டால் எதையும் நேரை கதைக்கிறம் எண்டபேர்வழியிலை , மற்றவனை சொல்லாலை கொல்லுறதுதான் வேலை. இன்னும் சிலபேரைப் பாத்தியள் எண்டால் அவையோட எந்தநேரமும் கதைச்சுக் கொண்டிருக்கவேணும் போலை கிடக்கும். அவையின்ரை கதை தேனிலை குழைச்ச பிலாப்பழம் மாதிரி இருக்கும். அவை வழைஞ்ச யாழ் மாதிரி இருந்தாலும் இனிமையாய் இருந்து மற்றவனை கொல்லாமல் இருப்பினம். இந்த ரெண்டு வகையான பார்ட்டியளை அம்புக்கும் யாழுக்கும் ஐயன் உதாரணம் காட்டி அவயளின்ரை செயலைப் பாத்து பழகுங்கோ எண்டு சொல்லுறார் .

Cruel is the arrow straight, the crooked lute is sweet,Judge by their deeds the many forms of men you meet.

La flèche est cruelle (bien que droite), le luth est doux bien que courbe. Il faut donne juger les pénitents d’après leurs œuvres. 

மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின். 280

உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டுவிட்டால் , மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் .

எனது கருத்து :

இந்தக்குறளைப் பாத்த உடனை எனக்கு பிறேமானந்தா , ஜெயேந்திரர் ஆக்கள்தான் ஞாபகத்தில் வருகினம். இவையளைப்பாத்தால் முற்றும் துறந்த துறவியிளைப்போலை இருப்பினம். ஆனால் செய்தது முழுக்கசுத்துமாத்தும் ,மொள்ளமாரிவேலையளும் . மனசிலை ஊத்தையளை வைச்சுக்கொண்டு வெளியில வேசம்போடுறது , உலகத்தை ஏமாத்திற வேலை கண்டியளோ .

What's the worth of shaven head or tresses long, If you shun what all the world condemns as wrong?

Il n’est pas nécessaire d’avoir la tête rasée ou de laisser croitre les cheveux, si l’on s’abstient de ce que le monde condamne.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம