Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்-பயனில சொல்லாமை-The Not Speaking Profitless Words- Ne pas proférer de vaines paroles-191- 200





பல்லார் முனியப் பயன்இல 
சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 191

பலரும் கேட்டு வெறுக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்பவன் எல்லோராலும் இகழப்படுவான்.

எனது கருத்து:


சிலபேர் இருக்கினம் , தாங்கள் ஏதோ மெத்தப்படிச்ச அறிவாளியள் மாதிரி எல்லாரையும் பாத்து வெட்டிவிழுத்துவினம் . ஆனால் அவைக்குத் தெரியாது , அவையின்ரை எறிசொறிக் கதையளைக் கேக்கிறவை எவ்வளவு நாய்பேய்க் கடுப்பிலை இருப்பினம் எண்டு .

Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise.

Celui qui indispose plusieurs par des paroles inutiles, est méprisé de tous.

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது. 192

பயனில்லாத சொற்களைப் பலர் முன் சொல்லுதல் , நண்பரிடத்து வெறுக்கப்படும் செயல்களைச் செய்தலினும் தீயதாகும்.

எனது கருத்து:

ஐஞ்சுசதத்திற்கும் பிரையோசனமில்லாத கதையளை மற்றைவைக்கு முன்னால கதைக்கிறவையைப் பாத்து ஐய்யன் சொல்லிறார் , ஒரு நட்புக்கு செய்யிற துரோகத்தைவிட உங்கடை கதையள் டேஞ்சரான கதையள் எண்டு .

Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more.

Tenir devant plusieurs, des discours dont on ne peut tirer profit, est pire que se livrer à des actes indésirables vis-à-vis des amis.

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை. 193

ஒருவன் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவன் நீதியில்லாதவன் என்பதை அறிவிக்கும்.

எனது கருத்து:


உங்களுக்கு முன்னால ஒருத்தர் சும்மா விழல் கதையள் கதைச்சு கொண்டு நிக்கிறார் எண்டால் , ஆள் ஒரு ஒழுங்கு முறையில்லாத ஆள் எண்ட முடிவுக்கு நீங்கள் வரலாம் பாருங்கோ .

Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains.

Développer des sujets dont on ne peut tirer profit, indique que l’orateur n’a pas la notion de la justice.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து. 194

பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடத்துச் சொல்லுவானாயின் அவனிடத்து நீதியோடு பொருந்தாதனவாகி நற்குணங்களினின்றும் அவனை நீங்கச் செய்யும்.

எனது கருத்து:

ஒருத்தன் தொடர்ந்தும் ஊத்தைக்கதையளையும் பயனில்லாத சொல்லுகளையும் கண்டவையோடையும் கதைச்சுக் கொண்டிருந்தால் அவனைச் சுத்தி கெட்ட குணங்களும் , கெட்ட கூட்டுகளும் தானாம் சேரும் .

Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good.

Les paroles inutiles font disparaître les bonnes qualités de l’orateur.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின். 195

நற்குணமுணமுடையார் பயனற்ற சொற்களைச் சொல்லுவாராயின், அதனால் அவரது மேன்மையும் நன்மதிப்பும் அவரை விட்டு நீங்கும்.

எனது கருத்து:

"படிசவனுக்கு ஏத்த மாதிரி கதைச்சுப் பழகு " எண்டு எங்கடை பெரிசுகள் எங்களை பேசுவினம் கண்டியளோ . ஒரு படிச்சவன் விழல் கதையள் கதைச்சால் அவனை ஒருத்தரும் மதிக்கமாட்டினம் .

Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.

Même les hommes de qualité perdent leur grandeur et leur grandeur et leur célébrité, par de vains propos.

பயன்இல்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல். 196

பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும் பல தரமும் சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க,மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

எனது கருத்து:

நெடுகலும் பிரையோசனமில்லாத வழவழா கொழகொழா கதையளைக்க் கதைச்சுக்கொண்டிருக்கிறவையை தெரு நாய் எண்டு சொல்லுறது தான் சரி எண்டு இந்தக்குறளில ஐயன் ரென்சானாகிப்போய் சொல்லியிருக்கிறார் .

Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity!

N’appelle pas homme celui qui repète d’inutiles discours ; appelle-le “grain sans substance” de l’humanité.

நயன்இல சொல்லினும் சொல்லுக; சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று. 197

சான்றோர் நீதியோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாராயினும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாராக .

எனது கருத்து:

படிச்சவன் பண்பானவன் அளாப்பிக் கதைக்கலாமாம் ஆனால் , விழல் கதையளை ஒருக்காலுமே கதைக்கக் கூடாதாம் எண்டு பாருங்கோ இதில ஐயன் ஒரு போடு போடிறார் .

Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word.

Que le Sage tienne même des propos qui ne sont pas justes. Il est bon qu’il ne dise pas d’inutiles paroles.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். 198

சிறந்த பயன்களை ஆராயும் அறிவுடையவர் , பெரிய பயன் தருதல் இல்லாத சொற்களைப் பேசவே மாட்டார்கள்.

எனது கருத்து:


"பெரிய விஞ்ஞானியள் மேதையள் எல்லாம் ஒருக்காலுமே பிரையோசனமில்லாத கதையள் கதைக்கமாட்டினம் " . எண்டு ஐயன் இதில சொன்னாலும் இப்ப அப்பிடியா நடக்குது ? காசுக்காக நரம்பிலாத நாக்கால எப்பிடியும் கதைக்கலாம் எண்டிறவங்களைத்தானே இப்ப பாக்கிறம்.

The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance.

Les savants qui ont la capacité d’étudier les matières d’une rare utilité, n’emploient pas de mots qui ne soient pas d’une utilité effective.

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசுஅறு காட்சி யவர். 199

குற்றமற்ற அறிவினையுடையவர் பயனில்லாத வெறுஞ் சொற்களை மறந்துஞ் சொல்ல மாட்டார்.

எனது கருத்து:

ஒரு உண்மையான அறிவாளி படிச்சவன் எண்டால் தேவையில்லாத கதையள் கதைக்க மாட்டானாம். அவனாலை சனங்கள் எப்பவுமே பயனடைஞ்சு கொண்டிருக்குமாம்.

The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity.

Les sages innocents ne profèrent pas des paroles inutiles, même par oubli.

சொல்லுக சொல்லின் பயன்உடைய ; சொல்லற்க
சொல்லின் பயன்இலாச் சொல். 200

ஒருவன்தனக்கும் பிறர்க்கும் பயன்தரத்தக்க சொற்களையே பேசவேண்டும் , பயன்தராத சொற்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் .

எனது கருத்து:

எப்பவுமே நீங்கள் மற்றவையோடை கதைக்கிறபோது எப்பவும் பிரையோசனமான சொல்லுகள்தான் வெளியில வரவேணும் லூசுக் கதையள் வராமல் பாத்துக்கொள்ளுங்கோ.

If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word.

Que l’on tienne des discours utiles et que l’on s’abstienne de vains propos.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம