Skip to main content

அறத்துப்பால்- துறவறவியல்-கள்ளாமை-The Absence of Fraud -Ne pas voler- 281-290


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

பிறரிடம் பழிசொல் கேட்க்காமல் உலகில் வாழ விரும்புகின்றவன் பிறர்பொருளைக் கவரும் எண்ணம் உள்ளத்தில் தோன்றாதவாறு தன்னைக்காத்துக் கொள்ள வேண்டும்

எனது கருத்து :

இப்பிடிப் பட்ட ஆக்கள் இண்டைக்கு இல்லையெண்டே சொல்லலாம் உங்களை ஒருத்தர் பிழை சொல்லக்கூடாது எண்டு நீங்கள் விரும்பினால் மற்றவைக்கு சொந்தமான சாமானுகளை மனசாலையும் நீங்கள் களவெடுக்க கூடாது கண்டியளோ

Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pure.

Que celui qui est considéré de tous, comme désirant son salut et non comme le méprisant garde son cœur contre toute appropriation frauduleuse d’un objet quelconque!

உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல். 282

குற்றமான செயல்களை மனதால் நினைப்பதும் பாவம் ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது

எனது கருத்து :

எனக்கு தெரிஞ்சு சீதையில இராவணனுக்கு ஒரு இது வந்து அவாவைக் கடத்திக் கொண்டு போனதால அவற்றை மானம் மரியாதை எல்லாம் போய் கடைசியில பேராய் புகழாய் இருந்த மனுசன்ரை நாடும் இல்லாமல் போட்டுது.

'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.'

Penser au péché est un péché. Que l’on ne pense donc pas à s’approprier frauduleusement la propriété d’autrui. 

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும். 283

களவால் வரும் பிறர் செலவம் பெருகுவது போல் தோன்றி கடைசியில் உள்ளதையும் சேர்த்து அழித்து விடும்

எனது கருத்து :

மற்றவன்ரை வயித்திலை அடிச்சு தேடிற தேட்டங்கள் முதல் நல்லாய்த் தான் இருக்கும் ஆனால் கடைசியில ஒண்டும் இல்லாமல் நடுறோட்டில பிச்சைக்காறர் மாதிரி திரிவினம். இதுக்கு கனக்க உதாரணங்களை சொல்லலாம் குறிப்பாய் கள்ள மட்டை அடிக்கிற கோஸ்ரியள்.

The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go.

La fortune acquise par le vol semble prospérer, mais elle dépasse les limites et périt.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். 284

களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த விருப்பம் பயன் விளையும்போது அகலாத வருத்தத்தை அளிக்கும்

எனது கருத்து :

இதில எனக்கு ஒரு இடைஞ்சல் இருக்கு. ஐய்யன் சொன்ன இந்த குறள் அவற்றை காலத்தில சரியா இருக்கலாம். ஏனெண்டால் , அவற்றை காலம் ஒழுக்கத்தை மதிச்ச காலம் . இப்ப மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்குக்கும் தானே காலமாய் கிடக்கு. நேர்மையா மனச்சாட்சியா நடக்கிறவன் பிச்சைக்காறனை விடக் கேவலாமா அல்லோ இருக்கிறான் ...

The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain.

Le désir effréné du vol a pour effet de causer de cuisantes douleurs.

அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285

களவாடுவதற்கு தக்க காலத்தை எதிர்நோக்கி இருப்பவர்களிடம் அருளைக்கருதி அன்புடையவராக இருக்கும் நிலை உண்டாகாது

எனது கருத்து :

இராவணன் ஒழுங்குமுறயா ராமரோடை கேம் கேட்டு படையெடுத்து போய் சீதையை கொண்டுவந்தால் இண்டைக்கும் இராவணன்தான் ஹீரோ . ஆனால் ராமருக்கு அல்வா குடுத்து சீதையை ஆட்டையை போடேக்கை அவனுக்கு ஈன இரக்கமோ ஒண்டும் இருக்கேல . எவ்வளவு பேர் சொல்லி பாத்தினம் எப்பாவது அசைஞ்சு குடுத்தானா ?

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

Le désir d’aimer le prochain, parce qu’on connaît le prix de la miséricorde, ne germe pas dans le cœur de Ceux qui convoitent le bien d’autrui et épient son défaut de vigilance.

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். 286

பிறர்பொருளை அபகரித்தலில் கருத்துக் கொண்டவர்கள் தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே ஆவர்

எனது கருத்து :

மனுசனாய் பிறந்தவன் மற்றவனுக்காய் தன்ரை சீவியத்தை கொண்டுபோகாமல் இப்பிடித்தான் இருக்கவேணும் எண்டு கட்டுச்செட்டாய் இருக்கவேணும் பாருங்கோ .அப்பிடி இருக்கேலாத ஆக்கள்தான் மற்றவன்ரை சாமானுகளை ஆட்டையை போடுறதில வலு மும்மரமாய் இருப்பினம்.

They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found.

Ceux qui ont l’amour immodéré du vol n’ont pas sens de la mesure et ne se conduisent pas en conséquence. 

களவுஎன்னும் கார் அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். 287

களவென்னும் இருள்படர்ந்த அறியாமை அளவறிந்து வாழும் தன்மக்களிடத்தில் ஒருபோதும் இல்லாததாகும்

எனது கருத்து :

ஒருத்தன் உயிருகளில இரக்கம் காட்டி கட்டுச்செட்டாய் சீவியம் நடத்துவன் எண்டால் மற்றவன்ரை சாமானுகளை ஆட்டையை போடமாட்டான்.

Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' won.

Ne se rencontre pas chez ceux qui ont le sens de la mesure, l’ignorance crasse appelée vol.

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. 288

அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும் அறம்போல, களவுத் தொழில அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சகம் நிலைத்து நிற்கும்.

எனது கருத்து :

அடுத்தவன்ரை பொருளுகளை ஆட்டைய போடுறவன்ரை மனம் சுத்தபத்தமாய் இருக்காது எல்லாம் நச்சுக்கிருமியள். ஆனால் நீதி நேர்மை எண்டு கட்டுசெட்டாய் இருக்கிறவையின்ரை மனசு வெள்ளையா சுத்தபத்தமாய் இருக்கும். நீங்கள் எப்பிடி இருக்கவேணும் எண்டு நீங்கள்தான் முடிவு செய்யவேணும்.

As virtue dwells in heart that 'measured wisdom' gains;Deceit in hearts of fraudful men established reigns.

La fourberie a sa demeure fixe dans la cœur des professionnels du vol, comme la vertu a la sienne, dans le cœur de ceux qui ont le sens de la mesure.

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர். 289

களவைத் தவிர வேறு நல்ல வழிகளைத் தெரியாதவர்கள் அளவற்ற செலவுகளைச் செய்து அழிவர்

எனது கருத்து :

மற்றவன்ரை பொருளுகளை ஆட்டையை போடுறதே தொழிலாய் இருக்கிறவை கடைசியில அதமச் செலுவுகள் செஞ்சு சொறிநாயை விட கேவலமாய் போவினம்.

Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway die.

Ceux qui ne connaissent pas autre chose que le vol périssent instantanément, avec leurs mauvaises pensées démesurées. 

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. 290

களவு செய்வார்க்கு உயிர் வாழ்வதும் அரிதாய் விடும் களவு செய்யாதவர்க்கு தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது

எனது கருத்து :

களவெடுக்கிறவனை மற்றவை மதிக்கிறது மாதிரி வெளியில தெரிஞ்சாலும் அவன்ரை உயிரே மதிக்காது . களவே எடுக்காதவனை உலகமே கொண்டாடும் .

The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know.

Le corps des habituels du vol périt; le monde des dieux ne manque pas à ceux qui ne volent pas.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம