Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340


நில்லாத வற்றை நிலையின என்று உணரும்
புல்லறி வாண்மை கடை. 331

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .

எனது கருத்து :

ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும். இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான். இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள்? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .

Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!

C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.

கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் துஅற்று. 332

பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது

எனது கருத்து :

குளங்குட்டையிலை தண்ணியும் மீனும் இருக்கும் வரைக்கும் தான் கொக்குகளும் இல்லாதபொல்லாத சொந்தங்களும் கொண்டாடும் எண்டும் , இது ரெண்டும் வத்திப்போனால் கொக்குகள் குளத்தை ஏன் நாயே எண்டும் கேக்காதுகள் எண்டு எங்கடை பெரிசுகள் வலு சிம்பிளாய் சொன்னவை. 

As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease.

La grande opulence vient, comme vient nombreuse la foule pour assister à une représentation théâtrale; elle s’en va comme la foule qui se dissipe, quand la représentation a pris fin.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். 333

செல்வம் நிலைக்காத இயல்புடையது . அத்தகைய செல்வத்தைப் பெற்றால் நிலையான அறங்களை அப்போதே செய்ய வேண்டும் .

எனது கருத்து :

காசு இண்டைக்கு வரும் நாளைக்குப் போகும். உங்களுக்காக ஆரும் நாலு சொட்டு கண்ணீர் விடமேணுமெண்டால் , காசு இருக்கேக்கை ஒரெப்பன்.............. கனக்கவேண்டாம் கபே குடிக்கிற காசு 2 யூறோ சேத்தால் மாசம் 60 யூறோ அதை ஊருக்கு அனுப்பினால் அங்கை ரெண்டு மாசத்துக்கு வயிறு முட்ட போராலை பாதிச்ச சனங்கள் சாப்பிடுங்கள் அல்லது படிக்கிங்கள் எல்லோ .

Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ.

L’opulence est, de sa nature, instable. L’obtient-t-on? Il faut s’empresser de faire de suite, les actes de charité qui s’accomplissent par son moyen. 

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். 334

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வினைப் பெற்றவர்க்கு, " நாள் " என்பது கால அளவைப் போலத் தன்னைக் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என்பது விளங்கும் .

எனது கருத்து :

நீங்கள் சிலபேரைப் பாத்திருப்பியள் ,ஒளவரு வரியமும் தங்கடை பிறந்தநாளை ஏதோ கோயில் திருவிழா கணக்காய் செய்து கொண்டிருப்பினம். உண்மையில அவைக்கு விளங்கிறேலே , தங்கடை ஆயுள் காலத்தில ஒருவரியம் போட்டுதெண்டு . ஆனால் பிறந்தநாளை சம்பெயின் உடைச்சு கொண்டாடிவினம் . எவ்வளவு விளப்பம் கெட்ட சனங்கள் பாத்தியளே? உண்மையிலை தன்னைப் பற்றி அறிஞ்சவன் இதுகளையெல்லாம் செய்யமாட்டான் கண்டியளோ.

As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life.

Le temps a l’apparence d’être mesuré par la jour. En réalité, pour ceux qui le connaissent, il est une scie, dont les dents coupent continuellement la vie. 

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். 335

மேல்மூச்சு நாக்குத் , தழுதழுத்தல் போன்ற மரண உபாதைகள் வருவதற்கு முன்னே வேகமாக நற்கதிபெற நல்லறம் செய்யவேண்டும்.

எனது கருத்து :

மனிசனாப் பிறந்தால் குறைஞ்சது ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் . சிலபேரை பாத்தியள் எண்டால் தானும் படுக்காமல் மற்றவனையும் படுக்கவிடாமல் புத்துக்கு மண்ணெடுத்துக் கொண்டிருப்பினம் . இவையளாலை ஆருக்கு என்னபிரையோசனம் ? எதுக்கும் ரிக்கற் எடுக்கிறதுக்கு முதல் ஒரு துரும்பையாவது எடுத்து போடுங்கோ,போறவழிக்குப் புண்ணியமாய் போகும் .

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death.

Les bonnes couvres, sont à être faites en hâte, avant que la langue soit paralysée et que le hoquet survienne. 

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. 336

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையாகிய தன்மையை உடையது இவ்வுலகம் .

எனது கருத்து :

வெண்டவன் தோத்தவனை பாத்து கெக்கிலி கொட்டிற நேரம் அவனுக்கு பின்னாலை பெரிய கிடங்கு ஒண்டு வெட்டுப்பட்டு கொண்டிருக்கு எண்டிறதை வெண்டவன் யோசிக்கிறேலை. 

Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world.

Ce monde est instable, tel que le font ressortir ces paroles:
‘‘ il fut hier, il n’est plus aujourd’hui’’.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 337

அறிவற்றவர் ஒருவேளியாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணில் எண்ணும் அளவோ ஒரு கோடியும் அல்ல; மிக்க பலவாகும் .

எனது கருத்து :

இந்த உடம்பும் உயிரும் ரெயில் பயணியள் மாதிரி, இறங்கிற இடம் வந்தவுடனை பயணி எண்ட உடம்பு ,உயிர் எண்ட ரயிலை விட்டு போய் கொண்டே இருக்கும் . இதுகள் தெரியாமல் சனங்கள் ஆயிரம் மனக்கோட்டையள் கட்டிக்கொண்டு இருப்பினம் எண்டு ஐயன் சொன்னாலும் , வேறை வழியாலையும் நாங்கள் யோசிக்கவேணும் கண்டியளோ . வாழ்க்கை நிலையில்லாதது எண்டு ஒவ்வருத்தனும் மூலையுக்கை குந்திக் கொண்டிருந்தால் , காட்டுக்கை மிருகத்தோடை மிருகமாய் இருந்த மனுசன் இண்டைக்கு சாம்சுங் கலக்ஸியோடையும் , சாம்சுங் ரபிலற்றோடையும் திரிவனோ?

Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours away!

On se sait pas si on vivra au moins un jour, on forme des projets,
plus nombreux que dix millions.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் துஅற்றே
உடம்பொடு உயிர்இடை நட்பு. 338

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது . கூட்டைத் தனியே விட்டுவிட்டுப் பறவை எந்த நேரத்திலும் பறந்து போய்விடும்.

எனது கருத்து :

இந்த குருவியள் எல்லாம் தாங்கள் முட்டை​ போட்டு குஞ்சு பொரிச்சு ஒரெப்பன் வளரும் வரைக்கும் தான் கூடு ஒண்டை கட்டி அதுக்குள்ளை இருப்பினம். குஞ்சுகள் கொஞ்சம் வளர இந்தக் குருவியள் எங்கையாவது பறந்து போடுங்கள். இதே மாதிரித்தான் எங்கடை உடம்புக்கும்  உயிருக்கும் பந்தங்கள் கண்டியளோ. ஆனால் எங்கடை சனங்கள் இதுக்குள்ளை எத்தினை ஆட்டங்களை  ஆடுதுகள் ?

Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share.

L’oisillon parvenu à maturité abandonne l’œuf dont il est sorti et s’envole: telle est l’amitié de l’âme pour le corps.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339

உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும் . மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு சா நித்திரையைப் போலை வரும் . தப்பி தவறி அவன் பிறக்க வேண்டி வந்தால் , அது அவனுக்கு நித்ரையாலை எழும்பிற மாதிரி . இதை கிட்டமுட்ட ஔவருநாளும்தான் நாங்கள் செய்யிறம் . ஆனால் இருந்தாப்போலை அப்பிடியே நித்திரையா போடுவம். இதுகள் தெரியாமல் எங்கடை சனங்கள் இடைப்பட்ட 16 மணித்தியாலத்தில எத்தினை கூத்துகளை ஆடுதுகள் ? தான்தான் பணக்காறன் எண்டும் , சாதிமான் எண்டும் , அறிவாளியெண்டும் , தனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவன் கைநாட்டுகள் எண்டும் , இவையள் ஆடிற ஆட்டம் சொல்லி வேலையில்லை கண்டியளோ

Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep.

La mort ressemble au sommeil. La naissance ressemble au réveil.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு நிலையாகத் தங்கியிருப்பதற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை

எனது கருத்து :

நாங்கள் எவ்வளவோ நல்லதுகளையும் கெட்டதுகளையும் செய்யிறம் . நாங்கள் ஏதோ சாகாவரம் எடுத்த ஆக்கள் மாதிரி. ஆனால் உண்மை அப்பிடி இல்லை கண்டியளோ . எங்கடை உயிருக்கு ஒழுங்கான வீடுவாசல் கிடையாது . ஒழுங்கான மனிசரெண்டால் இதுகளை மனசிலை வைச்சு மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் சீவிக்கிற வழியை பாக்கவேணும் பாருங்கோ .

he soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows?

La vie n’a pas de gîte permanent dans le corps, habité par toutes les maladies; elle ne l’habite qu’à titre de locataire.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம