Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்-வாழ்க்கைத்துணைநலம்-The Goodness of the Help to Domestic Life-Bien fait de la Compagne 51-60




மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51


இரக்க குணம் பொருந்தி , கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள் .

எனது பார்வை:

விரலுக்கேத்த வீக்கம் வேணும் எண்டு சொல்லுவினம். சும்மா அடுத்த வீடு பீ எம் டபுள் யூ வாங்கினால் தானும் வாங்கவேணும். கூட்டாளி மங்களம் பவியோன் வீடு வாங்கினால் தானும் வாங்கவேணும். 50 பவுணில தாலி போடவேணும் எண்டு புரியன்காறனை அரையண்டம் பண்ணாமல் அவன் எடுக்கிற சம்பளத்தில கட்டுச்செட்டாய் குடும்பம் நடத்திறவள் அச்சா மனுசி.

As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

Est compagne, l'épouse qui, unit aux bonnes qualités et conduite inhérentes à la vie familiale, le talent de proportionner les dépenses aux revenus de son mari.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 52


இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

எனது பார்வை:

ஒருத்தனுக்கு ஊதாரித்தனமான நல்ல குணமில்லாத தறுமபத்தினி கிடைச்சால் அவன்ரை பாடு கஸ்ரம் தான் கண்டியளோ அதோடை அவன்ரை தலையிலை சனி நிரந்தரமாய் நிண்டு டிஸ்கோ ஆடுமாம்.

If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.

Si l'épouse n'a pas les qualités et conduite d'une bonne ménagère, la vie familiale quelque prospère qu'elle puisse être, n'est pas heureuse.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?. 53


மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயன்ற்தாகும் .

எனது பார்வை:

ஒருத்தனுக்கு நல்ல பண்புகளை உடைய மனுசி கிடைச்சால் அவன்ரை சீவியதில்லை சொர்கவாசல் அகலத் திறந்திருக்குமாம். இதுகளுக்கு எதிர்மாறாக மனுசிகாறி கிடைச்சால் அவனனை நரகவாசல் இறுக்கி ஒரு உம்மா குடுக்குமாம் .

There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.

Si l’épouse est vertueuse, que manque-t-il au mari? Et si elle ne l’est pas, que reste-t-il au mari.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 54


கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதைவிடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறு இல்லை .

என்பார்வை:

இதிலை ஓரவஞ்சனை செய்யிறார் ஐயன். கற்பு எண்டது மனுசிக்காறியிட்டை இருந்தால் அது பெரிய கியாதியாம் அப்ப ஆம்பிளையள் ? சுறுக்கருக்கு என்னத்தைச்சொல்லுறதெண்டு விளங்கேலை

If woman might of chastity retain, What choicer treasure doth the world contain?

Quel bien meilleur pour un homme, qu’une épouse, infailliblement chaste?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55


கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி , காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் ' பெய் ' என்றால் மழையும் பெய்யும்

எனது பார்வை:

உண்மையிலை இது பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே ஒழிய வேறை ஒண்டும் இல்லை. இப்பிடிப்பட்ட மனுசியள் இல்லாததால்தானோ செயற்கைமழை பொழியப்பண்ணீனம் ?

No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!

Que l’épouse qui, sans adorer Dieu, adore seulement son mari, dise à son réveil: ‘‘qu’il pleuve’’, il pleuvra.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56


கற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி , தகுதியமைத்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் வாழ்பவளே சிறந்த பெண்ணாவாள் .

எனது பார்வை:

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி என்றாலும் , ஆம்பிளையளும் இப்பிடி நடந்தாலே அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி என்னும் தென்றல் வீசும் . இல்லாட்டில் புயல் தான் கண்டியளோ..............

Who guards herself, for husband's comfort cares, her household's fame,In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

Celle qui se garde jalousement, qui prend soin de son mari et qui contribue à leur reputation commune, voilà la femme!

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57


மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் முறை என்ன பயனைச் செய்யும் ? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சாலச் சிறந்தது.

எனது பார்வை:

மனுசிமார் அப்படி இருக்கவேணும் இப்பிடி இருக்கவேணும் எண்டெல்லாம் சொல்லிப்போட்டு அந்த சட்டங்களை இயற்றின ஆம்பிளையளுக்கும் ஒரு அடி கொடுக்கிறார் ஐயன். இங்கைதான் ஐயன் நிக்கிறார் பாருங்கோ.

Of what avail is watch and ward? Honour's woman's safest guard.

A quoi sert la garde des femmes dans le gynécée? La vigilance gardienne de la chasteté de l’épouse est la meilleure.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58


பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செம்மையாகச் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர்.

எனது பார்வை:

அப்ப இந்த உலகிலை ஒண்டுமே கிடையாதா..? இப்பிடிச் சொன்னால் ஒருத்தியும் திருந்தமாட்டாட்டினம்..பிறதர். இப்ப பாருங்கோ எல்லாம் கெதீல நடக்கவேணும் எண்டு விரும்புகிற உலகம். தேவர்உலகம் போகும் வரைக்கும் இந்த மனிசிமார் வெயிற் பண்ணுவினமோ எண்டது ஐமிச்சம்தான் கண்டியளோ. திருவள்ளுவர் இப்ப இருந்திருந்தால் இதை மாத்தி புருசன் வீட்டில் மேன்மை பெறுவார்கள் எண்டு பாடியிருப்பார்.

If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.

Les épouses qui honorent leur mari seront fort honorées dans le ciel habité par les Dévas.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 59


கற்பில்லாத மனைவியைப் பெற்ற ஒருவனால் செருக்குடன் காளை போன்று நடை போட்டு, பகைவர்கள் முன்னால் செல்ல முடியாது.

எனது பார்வை:

நல்ல பண்புகளாலை ஒரு குடும்பத்துக்குப் கியாதி சேர்க்காத மனுசி கிடைச்சால் சிங்கம் சிங்கிளாயும் பூனையாத்தான் நடக்கவேணும் பிள்ளையள்.

Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.

A ceux dont les épouse ne désirent pas la bonne renommée, fait défaut la démarche haute du lion, devant leurs détracteurs.


மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60


மனைவியின் நற்பண்பே இல்வாழ்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும் .

எனது பார்வை:


எல்லாம் கிடைச்சும் சரியான மக்கள் அந்த குடும்பத்துக் கிடைக்காட்டி 70 பவுணில தாலிக்கொடி போடாதமாதிரித்தான் இருக்கும் கண்டியளோ.

The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.

Avoir une épouse vertueuse est, dit-on, un bien; avoir de bous enfants est l’ornement de ce bien.





Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம