Skip to main content

அறத்துப்பால் - பாயிரவியல்- கடவுள்வாழ்த்து - 01 - 10




அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு . 01

எழுத்துகளுக்கெல்லாம் முதன்மையானது அ , அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள் .

A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.

Toutes les lettres ont pour principe ‘A’ ; l’univers a pour principe l’Etre Primitif.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின். 02

கடவுளின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை .

No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.

A quoi sert le savoir, si l’on n’adore pas les pieds
de Celui qui a la vraie Connaissance parfaite.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 03

அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருஅடிகளைத் , தம் மனதால் துதிக்கின்றவர் எந்தக்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர் .

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.

Ceux qui se réfugient aux pieds glorieux de Celui qui est descendu dans la fleur vivront éternellement au ciel bienheureux, supérieur à tous les mondes.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 04

விருப்பும் வெறுப்பும் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளைத் , தம் மனத்தால் நினைப்பவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது .

His foot, 'Whom want affects not, irks not grief,' who gain Shall not, through every time, of any woes complain.

Ceux qui se sont unis aux pieds de Celui qui n’a ni désir, ni aversion, ne souffriront jamais des douleurs inhérentes à la naissance.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு . 05

இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துபவரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை , தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை.

The men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well.

Les deux fruits de l’illusion (le bien et le mal) n’approchent pas ceux qui célèbrent la vraie gloire du Seigneur.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் . 06

ஐம்புலன் ஆசைகளையும் ஒழித்த , இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாமல் நிலைத்து வாழ்வர் .

Long live they blest, who 've stood in path from falsehood freed;His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.

Vivront éternellement ceux qui se tiennent dans la vraie ligne de conduite de Celui qui a consumé les cinq passions, procurées par les sens.

தனக்குஉவமை இல்லாதான்தாள்சேர்ந்தார்க்குஅல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது ". 07

தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனதில் நிகழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ளல் இயலாது.

Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.

Autres que ceux qui se sont réfugiés aux pieds de Celui qui n’a pas d’égal, ne peuvent éviter les inquiétudes de l’esprit.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது ".08

அறக்கடலாக விளங்கும் ஆண்டவனின் திருவடிகளை எண்ணாதவர், அறத்திற் எதிரான வேறு எந்தக் கடலையும் நீந்திக் கரை சேர முடியாது .

Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain.

Autres que ceux qui se sont attachés aux pieds du Sage qui est l’océan de la vertu ne peuvent traverser les mers orageuses distinctes de ce dernier (richesses et plaisirs des sens).

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 09

பார்க்க முடியாத கண் ,கேடக்கமுடியாத காதுபோல எட்டுக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காதவரின் தலை இருந்தும் பயனில்லாததே .

Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead.

Tout comme les organes des sens sans virtualité, la tête qui ne s’est pas inclinée aux pieds de Celui qui est doué des huit attributs’ est sans valeur.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்". 10

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main.

Ceux qui se sont réfugié aux pieds du Seigneur franchissent le grand océan des naissances; les autres ne peuvent le franchir.




























Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம