Skip to main content

மரணத்திற்கு பின்னால் - கட்டுரை



பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். எவ்வளவோ அறிவியல் வளர்ந்திருக்கிறது. பல தொழில் நுட்பங்களை கண்டறிந்து விட்டோம். ஆனால் மரணத்திற்கு பின்னர் மனிதன் என்ன ஆகிறான் என்பதை மட்டும் எவராலும் அறிய முடியவில்லை. இது பிரபஞ்சத்தின் உண்மையாகக் கூட இருக்கலாம். "சாகின்ற நாள் தெரிந்து விட்டால் வாழுகின்ற நாள் நரகமாகிவிடும் என்பார்கள்". அது உண்மை தான். வாழும் வரை நாம் மகிழ்ச்சியாக ஒவ்வொரு நொடியையும் வாழக் கற்றுக் கொள்வோம். நாம் ஏழையோ, பணக்காரனோ எப்படி இருந்தாலும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தீர்வு காண முடியாத பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும். சிலர் பிரச்சனைகளின் மேலே ஏறி ஓடிக்கொண்டிருப்பர். இன்னும் சிலர் மூளையிலே முடங்கி எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல் சோதனை என இடிந்து விடுவர். இவர்களைப் போன்றவர்களுக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்தப் பிறவி , இந்த உடல் எதுவுமே நமக்கு நிரந்தரம் இல்லாதவை, நமது பிரச்சனைகளும் கூட அப்படித்தான் நமக்கு நிரந்தமானவை அல்ல. நீங்கள் அளவுக்கதிகமான பிரச்சனையில் சிக்கித் தவிப்பதாக நினைத்தால் அதற்கு ஒரே தீர்வுகாக உங்கள் மரணத்திற்கு பின்னால் எதுவுமே இல்லை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஏழையோ, பணக்காரனோ அல்லது அறிவாளியோ, முட்டாளோ எப்படி இருந்தாலும் மரணத்திற்குப் பின் ஒரு வெற்றிடமே. பலர் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள முடியாமலோ, வேறு செயல்களில் ஈடுபாடு செலுத்த முடியாமலோ இருப்பார்கள். நீங்கள் அந்த வேளையில் அதை மறப்பதற்கு உங்கள் மரணத்திற்கு பின்னால் உள்ள ஒரு யூகிக்க முடியாத வாழ்க்கையை யோசித்து பாருங்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, போராடி பல பிரச்சனைகளை கடந்து இறுதியில் மரணத்திற்கு பின்னால் நாம் அனைவரும் மாயமாய் மறைந்துவிடத்தானே போகிறோம். ஆகவே எதையும் பெரிதென நினைக்காமல் வாழ்க்கை செல்லும் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

 http://ennavazhkai.b...og-post_18.html

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...