Skip to main content

முரண் சிறுகதைத்தொகுப்பு பற்றிய நொயல் நடேசனின் வாசிப்பனுபவம்




மூன்று மாதங்கள் முன்பாக வெளிவந்த இந்த சிறுகதைத் தொகுப்பை உங்களுக்கு புலம்பெயர்ந்த இலக்கியத்தின் வடிவமாக நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன் .

அதற்கு முன்பாக ஒரு சிறிய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டும் . ஒரு விவசாயி ஒரு குரங்கை வளர்த்து வந்தான். அந்தக் குரங்கு அவனது விவசாய வேலைகளில் அனுமாராக பல உதவிகள் செய்தது .புராதன இலங்கையில் வாரத்தில் ஒரு நாள் இராஜகாரியம் செய்யவேண்டும். அதற்காக ஒரு வாரம் வெளியூர் சென்றபோது சமீபத்தில் ஏற்கனவே நட்ட மிளகாய் கன்றுகளுக்கு வேர் விடும்வரை ஒவ்வொரு நாளும் நீர் ஊற்றச் சொன்னான் . ஏற்கனவே குரங்கை இந்த வேலையில் பழக்கியிருந்ததால் நம்பிக்கையுடன் சென்றான். மீண்டும் ஒரு கிழமை கழிந்து வீடு திரும்பியபோது அந்த மிளகாய்ச் செடிகள் கருகியிருந்தன .

குரங்கிடம் கேட்டான் “என்ன நடந்தது? ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றவில்லையா”?

“ஊற்றினேன்”

“அப்ப உன்ன நடந்தது?” “

குரங்கு மனிதர்கள்போல் பொய் சொல்லாது

கன்றுகளின் அடியில் மண் குழம்பியிருந்து.

“ஏன் இப்படியிருக்கு? என மண்ணைக்காட்டிக் கேட்டான் அந்த விவசாயி.

“வேர் வருகிறதா என ஒவ்வொரு நாளும் பிடுங்கிப் பார்த்து விட்டு மீண்டும் நட்டு தண்ணீர் ஊற்றினேன் “ என்றது குரங்கு.

அப்பாவியாகச் சொன்ன குரங்கை அனுதாபத்துடன் பார்த்தான் அந்த விவசாயி.

அதேமாதிரி தமிழர்கள் மத்தியில் புத்தகம் வெளிவந்து சில நாளில் அறிமுகம் விழா நடக்கும்போது சிலரை வந்து புத்தகத்தைப் பேசும்படி அழைத்தால் நான்கு நாள் பட்டினி கிடந்த ஓநாய்கள் மணலில் புதைத்திருந்த அழுகிய சடலத்தை இழுத்துக் குதறுவதுபோல் குதறுவார்கள்

காரணம் பெரும்பாலும் புத்தகமாயிராது. எழுதியவரை- அரசியல் சமூக காரணங்களால் பிடிக்காது இருக்கலாம் அல்லது காழ்ப்புணர்வு காரணமாக இருக்கலாம். எழுதியவரை விட நான் பெரியவன் எனக்காட்ட நினைக்கலாம்.

இது இது நாவலே அல்ல

சிறுகதையே அல்ல எனக் கூவுவார்கள்.

கடந்த தைமாதத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படி எனக்கு நடந்தபோது ஜோர்ஜ் ஓவலின் விலங்குப் பண்ணை நினைவுக்கு வந்தது. அனிமல் பாமில், சினோபோல் என்ற பெயரிடப்பட்டு ஸ்ரொஸ்கியாகிக உருவகப்படுத்திய பன்றி காற்றாலையின் படம் வரைந்து இப்படி மின்சாரம் பெறலாம் என மற்றைய மிருகங்களின் முன்வைத்தது . அப்பொழுது நெப்போலியன் என்று என ஸ்ராலினாக உருவகப்படுத்திய பன்றி அந்த இடத்தில் தனது காலை தூக்கி சிறுநீர் அடித்தது .

இந்த நெப்போலின்கள் யாழ்பாணத்தில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கிறார்கள் .

100 வருடங்கள் பின்பாகவும் ஜோர்ஜ் ஓவலின் தீர்க்க தரிசனத்தை நினைத்து மெய்மறந்தேன். அழியாத இலக்கியமாக விலக்குப் பண்ணை இருப்பதன் காரணத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.

விமர்சனம், திறனாய்வு- புத்தகம் வெளிவந்து சிலரால் வாசித்த பின்பே செய்யமுடியும். இதை எப்பொழுது எமது சமூகம் புரிந்துகொள்ளுமோ அப்பொழுதே புத்த வாசிப்பு எம்மிடையே ஏற்படும் .

சிறுகதை என்பது காட்டுப்பிரதேசத்தில் இருட்டில் நடந்து செல்லும் ஒருவனிடம் திடீர் மின்னல் சுற்றுப்பிரதேசத்தில் எப்படியான காட்சியை உருவாக்கும் என்பது போன்றது .

பெரும்பாலான சிறுகதையாசிரியர்கள் அவர்களின் ஒரு கதையாலே கொண்டாடப்படுவார்கள் . கு ப ராவின் கதைகளில் நான்கு சிறுகதைகள் சிறந்தது என ஜெயமோகன் எழுதினார் . 695 பக்கங்கள் கொண்ட அவரது தொகுப்பில் “சிறிது வெளிச்சம்” என்ற கதை மட்டுமே எனக்குப்பிடித்தது . அந்தக் கதை மட்டுமே எனக்கு கு பா ராவை நினைக்கப் போதுமானது

“த லாட்டரி “ என்ற கதையை படித்தபின் ஷேர்ளி ஜாக்சன் எனது மனத்தில் இடம் பெற்று விட்டார். அதேபோல தமிழினியின் “ மழைக்கால இரவு “ என்ற கதையை வாசித்த பின்பு தமிழினியுடன் தொடர்பு கொண்டு எனது முகநூல் நண்பராகினேன்.இரண்டு கதைகளும் இறுதிவரையும் உணவுப்பண்டத்தை கைகளுக்குள் மறைத்து குழந்தையைத் தேடவைப்பதுபோல் கதையின் உச்சத்தை தேடவைத்தவை.

அதேபோல்ஜேம்ஸ் ஜெய்சின் “தடெத் “ என்ற கதையை வாசித்துவிட்டு அதைத் தழுவி நான் ஒரு கதை “அந்தரங்கம்” என்ற பெயரில் எழுதினேன் .

கோமகனின் முரண் சிறுகதைத்தொகுப்பில் அப்படி சுண்டி இழுத்த கதை ஒன்றிற்காக நான் அவரை கொண்டாடமுடியும்.

ஏறு தழுவுதல்

கதையின் ஆரம்பம் ஜோச் ஓர்வலின் விலங்கும்பண்ணையில் விலங்குகளின் புரட்சியாகத் தெரிந்தது .

அங்கு கறுப்பனின் பேச்சு ஏதென்சில் ,இளவரசர் பிலிப்புக்கு ( அலக்சாண்டரின் தந்தை) எதிராக பேசிய டெமொஸ்தனிஸ்யும்( Demosthenes) அல்லது ரோமரது அவையில் பேசிய சிசிரோவையும்( Cicero) நினைவுக்குக் கொண்டு வருகிறது

இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போன்ற ஒவ்வொரு மிருக வைத்தியரும் எப்படி மாடுகளிலிருந்து அதிக மாமிசத்தையும் பாலையும் எப்படிப் பெருக்குவது என்ற சிந்தனையில் வாழ்கிறோம். செய்கிறோம். நாம் எந்த ஒரு காலத்திலும் காளை பக்கத்திலோ இல்லை பசுமாட்டின் தரப்பிலோ சிந்திப்பதில்லை.

அவைகளுக்கு நலமடிப்பது – சூடு வைப்பது – மூக்கில் ஓட்டை போடுவது என எவ்வளவு வதைப்பான விடயங்களைச் செய்கிறோம்?

பெண் மிருகங்களுக்கு செயற்கையாகக் கருத்தரிக்கப்பண்ணும்போது எந்தத் தொடர்புமில்லாத காளையின் விந்தைத் திணிப்பது என்பது கொடுமை .

அது மட்டுமா ?இயற்கையாகப் படைக்கப்பட்ட புல், இலை,தழைகளை மறுத்து செயற்கையான உணவைத் தருவது.

மிருக வதையின் உச்சமாக இறுதியில் ஏறுதழுவுதலைக் காட்டுவது இந்த கதை .

நாம் மிருகங்களுக்கும் எமது பிள்ளைகள் போல் பெயர் சூட்டி வளர்ப்போம் . ஆனால் இறுதியில் ?

இங்கே இரண்டு பசுக்கள் லட்சுமி நந்தினி அழகான பெயர்கள்

பலருக்கு இந்தக் கதை சாதரணமாத் தெரியலாம் ஆனால் எனக்கு ஒருவித புரிதலை உருவாக்கியது.

என்னைப் பாதித்த இன்னுமொரு கதை ஆக்காட்டி . இது யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை காலத்தில் நடந்த உண்மைச் சம்பங்களின் பிரதிபலிப்பு . அந்தமாதிரியான சம்பவங்கள் பல கேள்விப்பட்டிருப்பதால் சிறுகதை என்பதற்கப்பால் நெஞ்சில் முள்ளாகத் தைத்தது.

கோமகனின் சில கதைகளின் சம்பவங்கள் சிறுகதைகளாக அப்படியே அந்தரத்தில் தொங்குகின்றன. அந்தக் குறையை மறந்து புத்தகத்தை ரசித்தபடி தொடர்நது படிக்க நம்மை கைபிடித்து அழைத்துச் செல்வது கோமகனின் புனைவு மொழி.

நொயல் நடேசன்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம