Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 07 (ஒழிச்சு வை)


ஹாய் பெடியள்ஸ்!!!!!!!!!! 



வந்த விசையத்தை சுறுக்காய் சொல்லிப்போட்டு போறன். நேற்று பொழுது போகாமல் இருந்ததாலை ஒருக்கால் லாச்சப்பல் பக்கம் தலையை காட்டினன். போனதுதான் போனம் எண்டு நான் வழக்கமாய் போற புத்தகக்கடைக்கு போய் கொஞ்சம் லோ எடுப்பம் எண்டு அங்கை போனன். கடைக்காற மாத்தையா நிண்டதாலை பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டு பம்பலாய் பொழுது போச்சுது. நான் மாதையாவோடை லோ எடுத்துக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு லுக்கு விட்டு கொண்டு இருந்தன். அப்ப ஒரு பெடி வந்தான். ரெண்டு பேருக்கும் சுத்ததமிழிலை வணக்கம் சொல்லிப்போட்டு,

 "அண்ணை ஆயுத எழுத்து புத்தகம் இருக்கோ "?? எண்டான். என்ரை காது இதை கேட்டு கொஞ்சம் பொங்கீச்சுது. மாத்தையா , 

"உமக்கு ஆரையும் தெரியுமோ "? எண்டு ஒரு சேமணை கேள்வியை கேட்டார் .

வந்த பெடி உரு ஏறி,

 "உங்களிட்டை இருக்கோ இல்லையோ?? இல்லாட்டில் நான் வேறை கடை பாக்கிறன் " எண்டு புத்தக அலுமாரியளை பாத்தான். 

அங்கை புத்தகத்தை காணேலை .வந்த பெடி திரும்பி போக என்ரை மாத்தையா " நில்லு தம்பி புத்தகம் கிடக்கு" எண்டு உள்ளுக்கை போய் ஒழிச்சு வைச்சிருந்த ஆயுத எழுத்து புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து குடுத்தார். எனக்கெண்டால் நான் மெட்றாசிலை பாரிஸ் கோர்னர் , பாண்டி பஜாரிலை நிக்கிறமாதிரி ஒரு பீலிங் . ஏனெண்டால் அங்கைதான் உந்த மஜா புத்தகங்கள் , சீடி க்கள் ஒழிச்சு வைச்சு சனங்களுக்கு விப்பாங்கள் , அதுவும் வலுகலாதியாய் கறுப்பு சொப்பிங் பாக்கிலை குடுக்கிறவங்கள்.

மாத்தையாவும் ஒரு கறுப்பு பையிலை போட்டு பதினைஞ்சு யூறோ வாங்கி கொண்டு பெடியை அனுப்பிவிட்டார். எனக்கெண்டால் அண்டம் கிண்டமெல்லாம் பத்திபோட்டுது. நான் மாத்தையாவை பாத்து , 

"உதென்ன விசர் வேலை பாக்கிறாய் ?? வெளிலை வைச்சு மரியாதையாய் புத்தகத்தை வில்லன்" எண்டு மாத்தையாவோட ஏறினன். அதுக்கு அந்தாள் சொல்லுது,

"உங்களுக்கு விஷயம் தெரியாது சுறுக்கர். பேந்து நான் கடை வைச்சிருக்கிறேலையோ"?? எண்டு . நான் கேட்டன், "அதென்ன தமிழ்க்கவி குஞ்சி எழுதின ஊழிக்காலத்தை பப்ளிக்கிலை வைச்சு விக்கிறாய் . இதுக்கு மட்டும் வித்தாரம் பறையிறாய் " எண்டு .

சுறுக்கர் வீட்டை போங்கோ மனுசியெல்லொ தேடுவா எண்டு என்னை சமாளிச்சு வீட்டை அனுப்பிறதிலையே மாத்தையா பிறியப்பட்டார். நான் சொன்னன் "நீ என்ன மசிருக்கு புத்தகக்கடை வைச்சிருக்கிறாய்?? எழுதின ஆக்களை பாத்து பொன்னையங்கள் மாதிரி புத்தகம் விக்காதை . நீ வியாபாரி எண்டதையும் மறக்காதை" எண்டு நெவிள் பறக்க பேசிப்போட்டு வந்திட்டன் .அதென்ன பழக்கம் புத்தகத்தை ஒழிச்சு வைச்சு விக்கிறது?? அழுகல் பழக்கம் . அப்ப நான் வரட்டோ?

சுருக்கு சுறுக்கர்
06 மாசி 2015



Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில