Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 07 (ஒழிச்சு வை)


ஹாய் பெடியள்ஸ்!!!!!!!!!! 



வந்த விசையத்தை சுறுக்காய் சொல்லிப்போட்டு போறன். நேற்று பொழுது போகாமல் இருந்ததாலை ஒருக்கால் லாச்சப்பல் பக்கம் தலையை காட்டினன். போனதுதான் போனம் எண்டு நான் வழக்கமாய் போற புத்தகக்கடைக்கு போய் கொஞ்சம் லோ எடுப்பம் எண்டு அங்கை போனன். கடைக்காற மாத்தையா நிண்டதாலை பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டு பம்பலாய் பொழுது போச்சுது. நான் மாதையாவோடை லோ எடுத்துக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு லுக்கு விட்டு கொண்டு இருந்தன். அப்ப ஒரு பெடி வந்தான். ரெண்டு பேருக்கும் சுத்ததமிழிலை வணக்கம் சொல்லிப்போட்டு,

 "அண்ணை ஆயுத எழுத்து புத்தகம் இருக்கோ "?? எண்டான். என்ரை காது இதை கேட்டு கொஞ்சம் பொங்கீச்சுது. மாத்தையா , 

"உமக்கு ஆரையும் தெரியுமோ "? எண்டு ஒரு சேமணை கேள்வியை கேட்டார் .

வந்த பெடி உரு ஏறி,

 "உங்களிட்டை இருக்கோ இல்லையோ?? இல்லாட்டில் நான் வேறை கடை பாக்கிறன் " எண்டு புத்தக அலுமாரியளை பாத்தான். 

அங்கை புத்தகத்தை காணேலை .வந்த பெடி திரும்பி போக என்ரை மாத்தையா " நில்லு தம்பி புத்தகம் கிடக்கு" எண்டு உள்ளுக்கை போய் ஒழிச்சு வைச்சிருந்த ஆயுத எழுத்து புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து குடுத்தார். எனக்கெண்டால் நான் மெட்றாசிலை பாரிஸ் கோர்னர் , பாண்டி பஜாரிலை நிக்கிறமாதிரி ஒரு பீலிங் . ஏனெண்டால் அங்கைதான் உந்த மஜா புத்தகங்கள் , சீடி க்கள் ஒழிச்சு வைச்சு சனங்களுக்கு விப்பாங்கள் , அதுவும் வலுகலாதியாய் கறுப்பு சொப்பிங் பாக்கிலை குடுக்கிறவங்கள்.

மாத்தையாவும் ஒரு கறுப்பு பையிலை போட்டு பதினைஞ்சு யூறோ வாங்கி கொண்டு பெடியை அனுப்பிவிட்டார். எனக்கெண்டால் அண்டம் கிண்டமெல்லாம் பத்திபோட்டுது. நான் மாத்தையாவை பாத்து , 

"உதென்ன விசர் வேலை பாக்கிறாய் ?? வெளிலை வைச்சு மரியாதையாய் புத்தகத்தை வில்லன்" எண்டு மாத்தையாவோட ஏறினன். அதுக்கு அந்தாள் சொல்லுது,

"உங்களுக்கு விஷயம் தெரியாது சுறுக்கர். பேந்து நான் கடை வைச்சிருக்கிறேலையோ"?? எண்டு . நான் கேட்டன், "அதென்ன தமிழ்க்கவி குஞ்சி எழுதின ஊழிக்காலத்தை பப்ளிக்கிலை வைச்சு விக்கிறாய் . இதுக்கு மட்டும் வித்தாரம் பறையிறாய் " எண்டு .

சுறுக்கர் வீட்டை போங்கோ மனுசியெல்லொ தேடுவா எண்டு என்னை சமாளிச்சு வீட்டை அனுப்பிறதிலையே மாத்தையா பிறியப்பட்டார். நான் சொன்னன் "நீ என்ன மசிருக்கு புத்தகக்கடை வைச்சிருக்கிறாய்?? எழுதின ஆக்களை பாத்து பொன்னையங்கள் மாதிரி புத்தகம் விக்காதை . நீ வியாபாரி எண்டதையும் மறக்காதை" எண்டு நெவிள் பறக்க பேசிப்போட்டு வந்திட்டன் .அதென்ன பழக்கம் புத்தகத்தை ஒழிச்சு வைச்சு விக்கிறது?? அழுகல் பழக்கம் . அப்ப நான் வரட்டோ?

சுருக்கு சுறுக்கர்
06 மாசி 2015



Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...