Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல் இனியவைகூறல்- The Utterance of Pleasant Words- Douceur de language- 91- 100



இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் , இனிய சொற்களாய் , அன்பு கலந்ததாய் , வஞ்சம் இல்லாததாய் இருக்கும் .

எனது கருத்து :

இனிய சொல்லு எண்டால் என்ன ? ஒருத்தர் கதைக்கிற கதை , வஞ்கமில்லாததாயும் , உண்மையானதாகவும் , அன்பாய் , பண்பாய் இருந்தால் , அதுதான் இனியசொல்லு எண்டு வடிவாய் ஐயன் விளக்கம் தாறார் ஆனால் , இப்பிடியெல்லாம் கதைச்சுத் தானே எங்களைக் கவுட்டுக் கொட்டினவங்கள் .

Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern.

Les paroles douces sont celles des hommes qui abordent affablement et qui pratiquent la vertu de parler sans dissimulation.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். 92

முகமலர்ந்து இன்சொல் உடையவனாய் இருக்கப் பெற்றால் , மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும் .

எனது கருத்து :

நீங்கள் எந்தநேரமும் சிரிச்சமுகத்தோடை அன்பாய் பண்பாய் கதைப்பிங்கள் எண்டால் ( ஒருத்தர் உங்களிட்டைக் கடன் கேட்டாலும் ) , மனங்குளிர்ந்து ஒரு சமானைக் குடுக்கிறவரைவிட நீங்கள் மேலான ஆளாம் .

A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred.

Il vaut mieux recevoir, le visage souriant et avec des paroles obligeantes, que donner généreusement à quelqu’un (tout ce qu’il lui faut.)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். 93

முகம் மலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளங் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்

எனது கருத்து :

எங்களைப் பாத்து  முகத்தாலை விரும்பி  இனிமையாப்பாத்து உள்ளத்தாலை தான் நோர்வேயில இருந்து ஒருத்தர் வந்து சாமாதானம் பேசுவம் எண்டு சொன்னார். கடைசீல என்ன நடந்திது ? இதை எப்படி அறமாக எடுக்கமுடியும்?

With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity.

La vertu consiste à avoir (lorsque la rencontre se fait) l’air avenant, le regard gracieux, puis à dire du fond du cœur, des paroles agréables.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94

யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.

எனது கருத்து :

அப்ப ஏன் பாரதியாருக்கு வறுமை வந்தது?? எல்லோரையும் இன்புறுவிக்கிற தமிழ்க் கவிதையைத் தானே தந்தான் . இந்தக் குறளில எனக்கு உடன்பாடில்லை .

the men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found.

La misère qui engendre les souffrances n’atteint jamais ceux dont les paroles douces rejouissent tout le monde.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல மற்றுப் பிற. 95

வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.

எனது கருத்து :

நீங்கள் உங்களுக்கு கீழை வேலை செய்யிற ஆக்களிட்டையும் , அன்பாய் பண்பாய் கதைச்சியளெண்டால் அவை உங்களுக்கு தாற மரியாதையும் அன்பும் சொல்லிவேலையில்லை . அதுதான் உங்கடை உண்மையான உள் உடுப்புகள் ( அணிகலன்கள் ).

Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth.

Respecter, parler avec douceur: voilà la parure de l’homme; il n’en est pas d’autre.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். 96

ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும் .

எனது கருத்து :

ஒருத்தர் நல்ல விசையங்களை மனசால கதைச்சுக்கொண்டு வந்தால் , அவருக்கும் நாட்டுக்கும் நல்லவிசயங்கள் நடக்கும் . அக்கிரமங்கள் குறையும் என்று ஐயன் சொன்னாலும் , இப்ப உள்ள நிலமையிலை காசுக்கும் சண்டியனுக்கும் தானே மரியாதை !

Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow.

Les péchés diminuent et la vertu augments chez celui qui, cherchant les mots qui fassent du bien aux autres, parle avec douceur.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

பிறர்க்கு நல்ல பயனைத் தந்து ,நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்பவனுக்கு இன்பமும் தந்து நன்மையும் பயக்கும் .

எனது கருத்து :

நல்ல பண்பாய்க் கதைச்சு (காந்தீயம்) அதில இருந்து விலத்தாமல் அதால நல்ல பயனையும் மற்றவைக்குத் தந்த காந்திக்கு கடைசீல அது இன்பத்தையும் பயனையும் தந்திதா எண்ட கேள்வியும் எனக்கு வருகின்றது

The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere.

Les paroles serviables et douces procurent la justice et la vertu. 

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். 98

துன்பத்தைத் தரும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் சொல்பவனுக்கு இன்பத்தைத் தரும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தால் நல்ல வசதியாய் இருப்பினம் ஆனால் எப்பவும் சின்னத்தனமான கதையள் கதைப்பினம் இந்தக்கதையள் இவைக்கு இருக்கேக்கையும் புகழ் சேர்க்காது இல்லாட்டிலும் புகழ் சேர்க்காது பகைவர்களைத்தான் கூடக் குடுக்கும்

Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart.

Les paroles douces et à l’abri de toute bassesse, procurent le bonheur en ce monde et dans l’autre. 

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. 99

இனிய சொல் இன்பம் உண்டாக்குவதை அறிந்தவன் கடுஞ்சொற்களைச் சொல்வது என்ன பயன் கருதியோ தெரியவில்லையே!

எனது கருத்து :

சிலபேரை பாத்தால் எந்தநேரமும் " நாயே , பேயே " எண்டுதான் சொல்லிக்கொண்டிருப்பினம். ஆக்களைப்பாத்தால் நல்ல படிச்சவையாய் இருப்பினம். ஆனால் வாய்குள்ளால வாறது கூவமாய்த் தான் இருக்கும் . முக்கியமாய் எங்கடை வாத்திமார், வீட்டில மனிசிமாரோடை ஏத்தம் எண்டால் அண்டைக்கு வகுப்புப் பெடியள்பாடு கதைகந்தல் தான். இவையெல்லாம் நல்லாய் படிச்சிருந்தும்  ஏன் கடுமையான வார்த்தையளைப் பாவிச்சவை எண்டு இண்டைக்கும் எனக்கு விளங்கேலை.

Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words?

Quel est l’avantage escompté par celui qui voit les douces paroles causer du charme et qui emploie cependant des paroles dures?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் துஅற்று. 100

இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனிகள் இருக்கும்போது காய்களைத் தின்பதைப் போன்றது.

எனது கருத்து :

இதுக்குச் சுருக்கமாய் சொன்னால், பிலாப்பழத்தைச் சாப்பிடவைச்சுக்கொண்டு அலரிக்காயைச் சாப்பிடிற மாதிரி .

When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

Se servir de paroles dures, alors que l’on sait employer des paroles douces, c’est manger des fruits verts, quand on en a de mûrs.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம