Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்- புறம்கூறாமை- Not Backbiting-Ne pas calomnier-181-190


அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது. 181

அறநெறிகளைப் போற்றாதவனாகவும், அறச்செயல்களை செய்யாதவனாகவும் இருந்தாலும்புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது.

எனது கருத்து:

நீங்கள் ஒருத்ரிலை உண்மையான அன்பு வைச்சிருக்கிறியள் எண்டால், அவருக்கு ஒரு கஸ்ரம் எண்டால் உங்களை அறியாமல் கண்ணில தண்ணி வரவேணும். அவைதான் உண்மையான மனுசர்.

Though virtuous words his lips speak not, and all his deeds are ill. If neighbour he defame not, there's good within him still.
Il est doux à celui qui ne pratique pas la vertu et qui commet même des péchés; de s’entendre dire: “ce n’est pas un calomniateur ” 

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. 182

ஒருவனைக்க காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக், கண்ட இடத்து அன்புடையோர் போலப் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் அறத்தை அழித்துப் பாவச் செயல்களைச் செய்தலினும் தீமையானது.

எனது கருத்து:

இதை இப்பிடியும் சொல்லலாம் " கண்டால் கட்டாடி காணாட்டில் வண்ணான்". ஆனால் இப்பிடிப்பட்ட கோஸ்ரியள் தான் இப்ப எங்கைபாத்தாலும் இருக்கிதுகள்.

Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile.
il est certes mauvais de dire du mal de la vertu et même de commettre des péchés; il est pire de calomnier quelqu’un, en son absence et de lui témolgner une fausse joie, en sa présence.

புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கத் தரும். 183

ஒருவனைக் காணாத போது இழ்ந்து பேசி அவனைக்க் கண்ட போது அவனிடம் அன்புடையவன் போலப் பொய்யாக நடித்து வாழ்வதைக் காட்டிலும் இறத்தலே அறநூல் வழியாகும் .

எனது கருத்து:

சத்தியமாய் உண்மை. ஆனால் என்னசெய்யிறது? இப்பிடியான மொள்ளமாரியளுக்கும் முடிச்சவிக்கியளுக்கும் தான் காலம் கண்டியளோ .

'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh.
Plutôt mourir que calomnier quelqu’un en son absence et le louer en sa présence. Une telle mort lui procurera les mérites dont parlent les traités de la morale.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்நின்று பின்நோக்காச் சொல். 184

நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம். நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப்பழியையும் சொல்லக் கூடாது.

எனது கருத்து:

சிலபேரைப் பாத்தால் புறட்டணியம் படிக்காட்டில் அவைக்கு பத்தியப்படாது. ஆனா இப்பிடிப்பட்ட கோஸ்ரியளைப் பாத்து ஐயன் ரென்சன் ஆகி இப்பிடி சொல்லியிருக்கிறார் .

In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought.
Parle à quelqu’un, en fixant ses yeux et sans ménagement, mais garde-toi d’en dire du mal, en son absense.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். 185

புறங்கூறுபவன் அறத்தை நல்லதென்று அடுத்தவரிடத்தில் கூறினாலும் அவன் அதை மனதாரச் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனது கருத்து:

சிலபேர் வெளியல தாங்கள் வெள்ளை மாதிரிக்க கதச்சுக்கொண்டு மற்றவனுக்கு ஆப்படிக்கிறது தான் குடிசைத் தொழில். இப்பிடியான வேலையளை வைச்சே எவ்வளவு கேவலமான ஆக்கள் எண்டு அவையளை மதிக்கலாம் .

The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' 
Bien que le calomniateur célèbre la vertu, son penchant à la calomnie révèle qu’il ne parle pas sincèrement.

பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். 186

பிறரது குற்றத்தை அவனைக் காணாதவிடத்துச் சொல்லுபவன் , பிறரால் அவனுடைய குற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டு , பழிக்கப்படுவான் .

எனது கருத்து:

இது ஒரு செயின் சிஸ்ரம் கண்டியளோ எல்லாரும் கூடி ஒருத்தனைப்பற்றி ,அவன் இல்லாத நேரம் பாத்து கொசிப் அடிப்பினம். அதிலை ஒண்டிரண்டு கலைஞ்சு போக, போனவையப் பற்றி மற்றவை கொசிப் அடிப்பினம். உண்மையில இதுகளைத் திருத்தேலாது.

Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell.
Parmi les défauts de celui qui calomnie, les plus honteux seront découverts et divulgués.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 187

பிறர் , மகிழுமாறு இன்பாகப் பேசி அவரோடு நட்புச் செய்தலை அறியாதவர்கள் , நண்பராய் இருப்பவரைப் பற்றியும் புறங்கூறிப் பிரித்து விடுவர் .

எனது கருத்து:

சில பேர் இருப்பினம் அவைக்கு வேலையே ஆப்படிக்கிறது தான். நல்லாய் இருக்கிற நண்பர்களோடை இவையும் நட்பு எண்டு சேரந்து எல்லாரையும் பிரிக்கிறதுதான் வேலை . இப்பிடிச் செய்யாட்டிக்கு இவைக்கு நித்திரையே வராது எண்டால் பாருங்கோவன். இப்பிடிப்பட்ட ஆக்களைக் கண்டால் உடனையே காய் வெட்டிப்போடவேணும்.

With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away.
Ceux qui ne savent pas, par des paroles captivantes, se faire des amis, calomnient même les parents et les forcent à se séparer d’eux.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதுஇலார் மாட்டு. 188

தம்மோடு நெருங்கிய சுற்றத்தாரது குற்றத்தையும் அவரைக் காணாத இடத்துத் தூற்றும் இயல்பினையுடையோர் அயலாரிடத்து யாது தான் செய்யார் ?

எனது கருத்து:

நெருங்கிப் பழகிற ஆக்களையே அவையள் இல்லாத நேரம் பாத்து வெறும் வாய் மெல்லுகிற ஆக்கள் , தங்கடை அயலட்டையை சும்மாவிடுவினமோ ? சொல்லுங்கோ இவையள் கெட்ட கிரிமியள் தானே ?

Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name?
Que ne feront-ils aux étrangers ceux qui publient malicieusement les torts des proches?

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறம்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. 189

பிறரைப் பழித்துக் கூறுவோனது உடற்கமைய பூமியானது அறம் என்று நினைத்துச் சுமக்கிறது போலும் !

எனது கருத்து:

இப்புடிப்பட்ட கிரிமியளின்ரை உடம்புப் பாரத்தையும் இந்தப்பூமி, தான் தாங்கித்தரிக்கிறதும் ஒரு அறமெண்டு தாங்குதாம் எண்டு இதில ஐயன் செரியா நொந்துபோய் சொல்லியிருக்கிறார் .

'Tis charity, I ween, that makes the earth sustain their load. Who, neighbours' absence watching, tales or slander tell abroad.
La terre supporte par charité, le fardeau de l’homme qui guette le départ de quelqu’un pour le calomnier. 

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. 190

புறங்கூறுவோர் அயலாரது குற்றத்தைக் காண்பது போல் , தமது புறங்கூறும் குற்றத்தையும் காண்பாராயின் அவர்க்குத் துன்பம் உண்டாகாது .

எனது கருத்து:

மற்றவையைப் பாத்து கையை நீட்டிற நேரம் அதிலை ஒரு விரல் எங்களைப் பாக்கிது. இதைத் தெரிஞ்சு கொண்டால் மத்தவையைப்பத்தி புறட்டணியம் படிக்கமால் நல்ல பிள்ளையளாய் இருக்கலாம் எண்டு ஐயன் ஒரு பக்குவத்தை கடைசியா இந்தக் குறளிலை சொல்லியிருக்கிறார் . 

If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man?
Y a-t-il douleur pour celui qui reconnaît ses torts, de la même manière qu’il découvre ceux du prochain.







Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம