Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல் அடக்கமுடைமை- The Possession of Self-restraint-La modestie-121-130



அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும். 121

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் ஒருவனாகச் சேர்க்கும்.அடக்கம் இல்லாதிருத்தல் பேரிருள் ஆகிய நரகத்தில் சேர்த்து விடும் .

எனது கருத்து:

இந்த அதிகாரம் உண்மையிலேயே இன்றைய காலத்தில் சர்ச்சைக்குரிய விடையமாகும். இந்தக் குறளைப் பாத்தால் பண்பாட்டு ரீதியா பாத்தால் சரியே . இன்னுமொரு வழியால் பாத்தால் , சமரசம் செய்வதால் ஏற்படுகின்ற அடக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?? இந்தவழியால பாத்தால் , உலகம் அமைதிப் பூங்காவாக அல்லவா இருக்கவண்டும் ?

Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there.

La modestie conduit à l’habitation des dêvas. La fatuité précipite dans le lieu inhabitable des ténèbres.

காக்க பொருளா அடக்கத்தை ; ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. 122

அடக்கத்தை உறுதிப்பொருளாக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம்தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை .

எனது கருத்து:

ஆறாவது அறிவு மனிதனாகப் பிறந்தவனுக்கு கிடைச்ச வரப்பிரசாதம் .அதில் ஒருவன் எவ்வளவு தான் அறிவால் வல்லவனாலும் அவையடக்கம் , நாவடக்கம் இல்லாவிட்டால் தூசிக்குச் சமன் . இந்த அடக்கம் தான் ஒருத்தற்ரை உண்மையான செல்வம் .

Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul!

Il n’y a pas de bien plus précieux à la vie, que la modestie. Qu’on la converse comme un bien précieux à garder !

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123

அறியவேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால் அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு அதனால் மேன்மை உண்டாகும் .

எனது கருத்து :

மற்றவர்கள் பாராட்டவேணும் என்பதற்காக ஒருவரை அறியவேண்டியதெல்லாம் அறிந்து அடக்கமாய் இருக்கவேணும் எண்டு ஐயன் சொன்னாலும் , ஒருவிடையத்தை அறியவேணுமெண்டால் கேள்வி கேக்கவேணும் . இதே பாராட்டப்போறாக்கள்தான் சொல்லுவினம் அடக்கமில்லாதவன் எண்டு .

if versed in wisdom's lore by virtue's law you self restrain.Your self-repression known will yield you glory's gain.

Quand quelqu’un acquiert la modestie, sachant que celle-ci est l’intelligence même. les grands (de ce monde) s’en aperçoivent et sa modestie lui donne la grandeur.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124

எத்தகைய சூழ்நிலையிலும் அறநெறியிலிருந்து மாறுபடாமல் அடக்கமுடையவனாய் வாழ்பவனது உயர்வு மலையைவிட மேலானது .

எனது கருத்து :

தன்னரை நேர்மையான வழியைக் கடைசிவரையும் விட்டு விலத்தாமல் அடக்கத்துடன் ஒருத்தர் இருந்தால் , அவரைப்பத்தின மற்றாக்களின்ரை மனத்தோற்றம் மலையைவிட பெரிசு. ஆனால் , இப்பிடிப்பட்டாக்களை உலகத்துக்குப் பிடிக்காது .

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view.

La grandeur de l’homme qui, se maintenant dans la vie familiale, est modeste, est plus imposante que celle da montagne.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவர்உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125

பணிவோடு நடத்தல் எல்லோர்க்கும் நல்லதாகும் . அந்தப் பணிவு செல்வருக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும் .

எனது கருத்து :

காசுபணத்துக்கும் அடக்கத்துக்கு எட்டாப்பொருத்தம் . அது ஒரேநேர்கோட்டில வாறது மகாகஸ்ரம் . ஆனால் , பணக்காறனுக்கு அடக்கமும் இருந்தால் அது அவனுக்கு இரட்டிப்பு பணக்காறனாக்கும் எண்டு ஐயன் சொல்லுறார் .

To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diadem.

La modestie est bonne à tous; mais elle est de plus, une richesse pour les riches.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. 126

ஒரு பிறப்பில், ஒருவன் ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்வதைப் போல பாவம் சேராமல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆளவல்லவனாயின் அது அவனுக்கு ஏழு பிறப்புகளுக்கும் காவலாய் உதவும் .

எனது கருத்து :

இதை ஐயன் எழுத்தில சொன்னாலும் இப்படி இருக்கிறதைவிட அப்படி ஒரு பிறப்பே தேள்வையில்லை . ஆறாவது அறிவின்ரை வேலையே ஐம்பொறிகளை உள்வாங்கிறது தான் .

Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains.

Si quelqu’un a, dans une vie, la puissance de dompter ses cinq sens, comme la tortue, cette puissance sera sa gardienne dans ses sept autres naissances.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 127

ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாளவேண்டும் அங்கனம் அடக்கியாளாவிட்டால் பேசும்போது சொற்குற்றத்துக்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர்

எனது கருத்து :

தம்பி அடிக்கடி ஒரு வசனம் சொல்லுவர் தான் சொல்லுக்கு குடுக்கிற முக்கியத்துவத்தைவிட செயலுக்குத்தான் கனக்க குடுக்கிறன் எண்டு இதின்ர அர்த்தம் இந்தகுறளுக்குச் சரியாப் பொருந்தும் .

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep.

Ne peut-on maîtriser tous les sens? Que l’on garde au moins sa langue. Sinon, on souffrira tous les malheurs causés par l’intempérance du langage.

ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும். 128

தீய சொல்லைச் சொல்லி பிறர் மனதைப் புண்படுத்துபவன் செய்யும் நல்ல காரியங்கள் கூட மாறுபட்ட பயனைத் தரும்.

எனது கருத்து :

ஒருத்தர் வாயாலை ஒருக்கா லூசுக்கதை கதைச்சு அது மற்றவையைப் பாதிச்சுது எண்டால் , பேந்து அவர் எனதான் நல்லவிதமாய் சொன்னாலும் அது கெட்டதாய் தான் தெரியும் .

Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing.

Si par une seule parole blessante, quelqu’un cause de la peine à un autre, il perd tout le bénéfice de ses autres vertus.

தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. 129

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒருபோதும் மறையாது

எனது கருத்து:

என்னைக்கேட்டால் உலகத்திலை கெட்ட ஆயுதம் நாக்குத் தான். அது வாய்க்குள்ளை இருக்கிறவரைக்கும்தான் அதுக்கு பெறுமதி. தப்பித்தவறி கோபத்திலை என்ன கதைக்கிறிங்கள் எண்டு தெரியாமல் கதைச்சு மற்றவன்ரை மனசைக் காயப்படுத்தினியள் எண்டால் அது அவன்ரை மனசிலை ஆறாரணமாய்ப் பதிஞ்சுபோயிருக்கும். எப்பவும் இடம் , பொருள் , ஏவல் பாத்து கதைக்கவேணும்.

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;In soul by tongue inflamed, the ulcer healeth never more.

L’ulcère de la brûlure du feu guérite radicalement mais la plaie d’une brûlure de la langue ne guérit pas.

கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

சினத்தைக் காத்து , கல்வி கற்று , அடங்கி வாழும் சிறப்பைப் பெற்றுள்ளவனை அறம் அவன் வழியில் சென்று காத்திருக்கும்.

எனது கருத்து:

நல்ல கல்விமானாய், கோபங்கொள்ளாமல், அடக்கமாய் வாழுறவைக்கு அறம் அவைன்ரை வழியிலை காத்திருக்கும் எண்டு ஐயன் சொன்னாலும் இதுகளையே உயிர்மூச்சாய் கொண்ட எங்கடை இனத்துக்கு எந்தவழியிலை அறம் வந்து காப்பாத்தி விட்டது ?

Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his path.

Voici un homme qui continent sa colère et est versé dans les arts et les sciences. La vertu guette le moment d’entrer dans son cœur.




Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம