Skip to main content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-இறுதி பாகம்




01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

தொல்காப்பியம்.

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

விஷ்ணுகோபன்.

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

சுமேரிய நாகரீகம்.

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

கௌதமபுத்தர்.

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

15 பகுதிகள்.

00000000000000000000000

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

3ஆம் நந்திவர்மன்.

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

19 ஆம் நூற்றாண்டு.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது?

74 கி .மீ.

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

14000 வகைகள்.

0000000000000000000000000000

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

பூரிக்கோ.

02 இலக்கியத்தில் “கவரி வீசியகாவலன் ” எனப் போற்றப்படும் மன்னன் யார்?

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒருவருக்கு “பிரச்னை ” என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து.

05தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

000000000000000000000000000

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

சிந்தாதேவி.

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

சடையப்பவள்ளல்.

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

நம்பியாண்டார் நம்பி.

04 சேக்கிழாரின் இயற்பெயர் என்ன ?

அருண்மொழித் தேவர்.

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

00000000000000000000000000000

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை?

இருபத்தாறு.

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை – 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

இந்திர பிரஸ்தம்.

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

வினாக்கள் ஆறுவகைப்படும் .
அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை ?

விடைகள் எட்டு வகைப்படும்.
கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.

00000000000000000000000

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

போர்.

02 எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

கலம்பகம்.

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

இரும்பு இல்லாததால்.

04 எந்த தாவரம் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

கிழாநெல்லி.

05 மனோதத்துவத்தில் “மனபிம்பம்” என்றால் என்ன ?

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

000000000000000000000000

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

மனப்போரட்டம்.

02 மனநலமுடையோர் என்றால் யார் ?

தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் .

03 தமிழ் இலக்கணத்தில் “பால் ” எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

ஐந்து வகைப்படும் . ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று சொல்லப்படும் .

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

சர்க்கரை வியாதி.

May 12, 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம