Skip to main content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-இறுதி பாகம்




01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

தொல்காப்பியம்.

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

விஷ்ணுகோபன்.

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

சுமேரிய நாகரீகம்.

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

கௌதமபுத்தர்.

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

15 பகுதிகள்.

00000000000000000000000

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

3ஆம் நந்திவர்மன்.

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

19 ஆம் நூற்றாண்டு.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது?

74 கி .மீ.

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

14000 வகைகள்.

0000000000000000000000000000

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

பூரிக்கோ.

02 இலக்கியத்தில் “கவரி வீசியகாவலன் ” எனப் போற்றப்படும் மன்னன் யார்?

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒருவருக்கு “பிரச்னை ” என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து.

05தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

000000000000000000000000000

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

சிந்தாதேவி.

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

சடையப்பவள்ளல்.

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

நம்பியாண்டார் நம்பி.

04 சேக்கிழாரின் இயற்பெயர் என்ன ?

அருண்மொழித் தேவர்.

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

00000000000000000000000000000

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை?

இருபத்தாறு.

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை – 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

இந்திர பிரஸ்தம்.

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

வினாக்கள் ஆறுவகைப்படும் .
அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை ?

விடைகள் எட்டு வகைப்படும்.
கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.

00000000000000000000000

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

போர்.

02 எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

கலம்பகம்.

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

இரும்பு இல்லாததால்.

04 எந்த தாவரம் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

கிழாநெல்லி.

05 மனோதத்துவத்தில் “மனபிம்பம்” என்றால் என்ன ?

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

000000000000000000000000

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

மனப்போரட்டம்.

02 மனநலமுடையோர் என்றால் யார் ?

தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் .

03 தமிழ் இலக்கணத்தில் “பால் ” எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

ஐந்து வகைப்படும் . ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று சொல்லப்படும் .

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

சர்க்கரை வியாதி.

May 12, 2014

Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...