Skip to main content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


01 வஞ்சிரம்-king mackerel or kingfish-Scomberomorus cavalla


இந்த மீனின் தூயதமிழ் " வஞ்சிரம் " ஆகும் . எங்களிடையே " அறக்குளா " என்றே பெயர் பெற்றது. இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்.

http://en.wikipedia....c_king_mackerel

00000000000000000000000000000000

02 அகலை அல்லது கானாங்கெளுத்தி -indian mackerel- Rastrelliger kanagurta


இந்த மீனின் தூய தமிழ் " அகலை " ஆகும் . இது தமிழ் நாட்டில் " கானாங்கெளுத்தி " என்றே அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள்.

http://en.wikipedia....liger_kanagurta

000000000000000000000000000000

03 அயிரை அல்லது நொய்- LOACH- Cypriniformes


இந்த மீனுக்குரிய தூயதமிழ் " அயிரை மீன் " ஆகும் இதனை " நொய் மீன் " என்றும் சில இடங்களில் அழைக்கின்றார்கள் . மேலதிக தகவலுக்கு பின்வரும் இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia....i/Cypriniformes

00000000000000000000000000000000

04 அதல் மீன்- halibut -Hippoglossus hippoglossus 


இந்த மீனுக்கான தூய தமிழ் அதல் மீனாகும். பொதுவாக இந்தமீன் றோலர்களில் போயே பிடிப்பதுண்டு.அளவில் பெரியதும் எடையில் கூடிய மீன் அதல் மீன். இது ஏறத்தாள 2.5 மீற்றர் நீளமும் 14 கிலோ எடையையும் கொண்டது. அதல் மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Halibut

000000000000000000000000000000000

05 அரணை மீன் அல்லது தும்பிலி மீன் - lizard fish - Synodus binotatus 

இந்த மீனுக்கான சரியான தூயதமிழ் அரணை மீன் அல்லது தும்பிலி மீனாகும் . இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் .

http://en.wikipedia....iki/Lizard_fish

000000000000000000000000000000000

05 ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி Dolphin - Platanistidae


இந்த மீனுக்கான தூயதமிழ் ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி ஆகும். நன் இந்தப் பதிவைத் தொடங்கியதன் முக்கிய நோக்கம், தமிழையும் அதன் பொருளையும் இளையவர்கள் எல்லோருக்கும் போய்ச்சேரச்செய்ய வேண்டும் என்பதே. உண்மையில் ஓங்கில் மீன் என்று சொல்லப்பட்டாலும் இந்த மீனுக்கு இலக்கியத்தில் " ஓவாய் கடற்பன்றி " என்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. ஓவாய் என்பது ஓங்கில் மீனின் நீண்ட கூரிய மூக்கைக் குறிக்கும். கடற்பன்றி ஓங்கிலை ஒத்து இருந்தாலும் கூரிய மூக்கு அதாவது ஓவாய் இல்லை. எங்களால் " டொல்பின் மீன் " என்றே அறியப்பட்ட மீனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் கிடைத்தது மகிழ்ச்சி தானே. மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்புகளுக்குச் செல்லுங்கள் :

http://ta.wikipedia....rg/wiki/ஓங்கில்

http://ta.wikipedia..../wiki/கடற்பன்றி

00000000000000000000000000000

06 ஆரல் மீன்- Sand eel fish 

இதன் தூய தமிழ் " ஆரல் மீன் " ஆகும் .

இலக்கியத்தில் இதன் பங்கு :

யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.
கருத்து :

தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.

http://kavinthamil.b...2010/12/25.html

0000000000000000000000000000

07 ஆற்றிறால் அல்லது சிங்கறால் -scampi - Norway lobster- Nephrops norvegicus


இந்தமீனுக்கான தூயதமிழ் " ஆற்றிறால் அல்லது சிங்கறால் " ஆகும். மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் ....

http://en.wikipedia.org/wiki/Scampi

000000000000000000000000000000

08 இருங்கெளுத்தி அல்லது பூனை மீன் PLOTOSUS CANIUS - cat fish 


இந்த மீனுக்கான தூயதமிழ் "இருங்கெளுத்தி "அல்லது "பூனை மீன்" ஆகும். இந்த மீன்பற்றிய மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் இணைப்புகளுக்குச் செல்லுங்கள்.

http://en.wikipedia....Eeltail_catfish

http://en.wikipedia.org/wiki/Plotosus

http://en.wikipedia.org/wiki/Catfish

0000000000000000000000000

09 உணர்கொம்பு மீன் - சுரணைக்கொம்பு மீன்- tentacle or Octopus vulgaris

இந்த மீனுக்கான தூய தமிழ் "உணர்கொம்பு மீன் அல்லது சுரணைக்கொம்பு மீன் " ஆகும் . ஆனால் இது எம்மிடையே "கணவாய் மீன் " என்றே பிரபல்யமானது. இதில் பலவகையான கணவாய்கள் உள்ளன.
இந்த மீன்பற்றிய மேலதிக விபரங்களுங்கு இந்த இணைப்பில் நுழையுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Octopus

000000000000000000000000000000

10 ஊசிக்கவலை மீன் -deepbody sardine

இந்த மீனுக்கான தூயதமிழ் ஊசிகவலை மீன் Bigbody Sardine ) ஆகும் . இந்த மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .

http://parisaramahit...in/fish/m53.htm

http://en.wikipedia....wiki/Sardinella


March 20, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம