Skip to main content

வாடாமல்லிகை - பாகம் 03


தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால் வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும், வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள். இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. மேற்கு நாடுகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் இவர்கள் தங்கள் மண்ணை மிதிக்கும் பொழுது மட்டும் சட்டங்களினால் கட்டாயப்படுதப்பட்ட வாழ்வுநிலையை ஏற்றது எனது மனதை நெருடவே செய்தது. எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்தனர். ஆனாலும் அத்தனை சுலபமாக அவர்களால் இறங்க முடியவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் வெளியே போகும் பொழுது தான் அறிந்து கொண்டோம். விமானம் , விமானநிலயத்துடன் இணைக்காது தொலை தூரத்தில் நின்றது. அதில் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. அதன் வழியே உடல் பெருத்த அரேபியர்கள் இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விமான நிலையத்துக்கு குளிரூட்டிய பேரூந்துகள் பயணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தன. எல்லோருமே குழந்தயை கிணத்துக்கட்டில் விட்டு விட்டு வந்த மன நிலையிலேயே இருந்தார்கள். நாங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக விடுப்பு பார்த்துக்கொண்டு இறங்கினோம். நான் ஜெட்டா எப்படி இருக்கப் போகின்றது என்ற மிதப்பில் விமான நிலையத்தில் நுழைந்தேன்.

நாங்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை முடித்துக்கொண்டு பயணிகள் மாறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தோம். கண்ணுக்கெட்டிய தூரதிலேயே அந்த மண்டபம் சுங்கத் தீர்வைகள் அற்ற ஒரேயொரு கடையுடன் காணப்பட்டது. அங்கேதான் எனக்குப் பல அதிர்சிகள் காத்திருந்தன. எங்களுக்கு உடனடி தேவையாக கழிப்பிடம் செல்ல வேண்டி இருந்தது. அங்கே இரண்டு கழிப்பிடங்களே இருந்தன. ஒன்று பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் இடத்திலும், இரண்டாவது பயணிகள் தங்கும் இடத்திலும் காணப்பட்டன. நான் மனைவியை முதல் விட்டு விட்டு காத்திருக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் வந்த மனைவியின் முகத்தில் ஈ ஆடவில்லை. எனக்கு கேள்விகள் கேட்க நேரம் இல்லாததால் உடனடியாகவே ஆண்கள் " பிஸ் " அடிக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கே " பிஸ் " அடிக்கும் இடம் மக்களால் நிரம்பி வழிந்தது. கீழே தண்ணிக்காடாக இருந்தது. பலர் தங்கள் கால்களை ஒன்றுமாறி ஒன்றாக முகம் கழுவும் தொட்டியினுள் வைத்து கழுவி அதனுள்ளேயே முகமும் கழுவிக்கொண்டனர். ஒரு சிலர் வாயுக்குள் தண்ணியை விட்டு விரல்களினால் கிடாவி பெரும் சத்தத்துடன் ஓங்காளித்து துப்பினார்கள். குடலைப் புரட்டும் நாற்றம் அங்கே பரவி இருந்தது. தரையில் கீழே இருந்த தண்ணி வெள்ளத்தை நீக்க ஒரு இந்தியர் தண்ணி வாரும் துடைப்பக்கட்டையுடன் நின்று கொண்டார். எனக்கு வந்த மூத்திரம் எதிர் திசையில் ஒடியது. அனாலும் எனக்கு முட்டிய மூத்திரத்தால் விதைப்பை வலி எடுத்தது. நான் எனது விதியை எண்ணியவாறு மூச்சை அடக்கியவாறு எதிரே ஓடிய மூத்திரத்தை நேரே எடுக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். இறுதியில் வெற்றிக்கனி என்பக்கம் விழுந்தது. வெற்றியை எனதாக்கி கழிப்பிடம் தந்த மன உளைச்சலில் கடுப்புடன் வெளியே வந்த என்னை எனது மனைவி ஒருவிதமான நமுட்டுச் சிரிப்புடன் எதிர் கொண்டா. அவாவின் சிரிப்பு என்னைக் மேலும் கடுகடுக்க வைத்தது.

எங்களை சுங்கதீர்வையற்ற கடைகள் பெரிதாக கவரவில்லை. ஆனால் விதம் விதமான பேரீந்துகளை அடுக்கி இருந்தார்கள். அத்துடன் இருக்கும் ஆறு மணி நேரத்தை போக்காட்டுவதற்கு அவைகளை விடுப்பு பார்தோம் . ஜெட்டா விமான நிலையம் எனக்கு தின்னவேலி சந்தையையே நினைவுக்கு கொண்டடு வந்தது. அருகிலே இருக்கும் மெக்கா புனித ஸ்தலத்துக்கு இந்த விமான நிலையத்திலே தான் விமானம் மாறவேண்டும். உலகின் பல பாகங்களிலும் இருந்து யாத்திரீகர்கள் குவிந்து கொண்டு இருந்தார்கள். அதற்கேற்ப போதிய இடவசதிகளோ அடிப்படை சுகாதார வசதிகளோ அங்கு இல்லாதது எனக்கு பெரும் வியப்பையே தந்தது. நேரம் தனது கடமையை செய்துகொண்டிருந்தது. பல யாத்திரீர்கள் இடம் இல்லாததால் நிலத்திலேயே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தார்கள். தாங்கள் உணவுப் பொட்டலங்களை அங்கேயே பிரித்து உண்டார்கள். இந்த நிகழ்வானது கழிப்பிடத்திற்கு முன்பாகவும் நடந்தது. அதில் அவர்கள் அருவருப்பு நிலையை அடைந்ததாக தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணிகள் புகைப்பதற்கு புகைக்கும் அறை அங்கு இருக்கவில்லை. இது எனக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது. அத்துடன் இரண்டே இரண்டு உணவுசாலைகள் தான் இருந்தன. அதில் இருந்த உணவுகள் சாப்பிடும் படியாக இருக்கவில்லை. எமக்கு பசி வயிற்ரை புடுங்கியது. இருவரும் தேநீரை குடித்தபடியே எமது விதியை நொந்து கொண்டோம். வாழ்க்கையில் அனுபவங்கள் எப்பொழுதுமே அலாதியானதும் இனிமையான பல படிப்பினைகளை தந்திருக்கின்றன. இந்த ஜெட்டா விமான நிலையமும் எனக்கு பலவித புதுமையான மக்களையும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தந்தது. நான் கஸ்ரமான நிலமையையும் இனிமையாக்க முயன்றுகொண்டிருந்தேன். ஒருவழியாக நேரம் ஒன்பது மணியை நெருங்கி கொண்டிருந்தது. எமது விமானம் புறப்படுவற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது. எங்களை ஏற்றிக்கொண்டு அந்த இயந்திரப்பறவை மீண்டும் தனது கால்களை இலங்கை நோக்கி எக்கியது.

தொடரும்

கோமகன் 

07 சித்திரை 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம