Skip to main content

Posts

Showing posts with the label திருக்குறள் இலக்கியம்

அறத்துப்பால்-துறவறவியல்-அவா அறுத்தல் -The Extirpation of Desire-L'extirpation du désir- 361 - 370

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து. 361 எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து அவா என்று கூறுவர் . என்கருத்து : வயசானவை உயிர் போறநேரத்திலை சேடம் இழுத்துக் கொண்டு இருப்பினம் . ஏதாவது முடியாத ஆசையள் இருக்கும் பாலை ஊத்திவிடுங்கோ எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். மனிசனிலை இருக்குற ஆசையள் எண்ட விதை தானாம் திரும்பவும் ஒருத்தரை பிறக்கப்பண்ணும் எண்டு படிச்ச பெரியாக்கள் சொல்லுவினம். The wise declare, through all the days, to every living thing. That ceaseless round of birth from seed of strong desire doth spring. La cause génératrice de la naissance, pour tous les êtres, en tous les temps, est le désir. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது வேண்டாமை வேண்ட வரும். 362 ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்பவேண்டும் . அது ஆசை அற்ற நிலையை (விரும்பாமை) விரும்பினால்த்தான் உண்டாகும் . என்கருத்து : ஒருத்தர் திரும்பி பிறக்க வேண்டாம் எண்ட நிலமைக்கு வாறதெண்டால் ஆசையை இல்லாமல் பண்ணவேணும். ஆனானப்பட்ட மு

அறத்துப்பால்-துறவறவியல்- மெய் உணர்தல்-Knowledge of the True- Perception du vrai -351- 360

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருள்ஆம் மாணாப் பிறப்பு. 351 மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும் . எனது கருத்து : சிலபேரைப் பாத்தியள் எண்டால் கிழமையிலை ரெண்டு மூண்டுதரமாவது குதிரைக்கு காசு கட்டிக்கொண்டும் , லொட்டோ சுறண்டியும் வெட்டிக்கொண்டும் நிப்பினம். இவையளை ஏன் இப்பிடி காசை சிலவளிக்கிறியள் ?? எண்டு கேட்டால் , " விட்ட காசை இப்ப எடுக்கிறன் பார் " எண்டு சொல்லுவினம் . ஆனால் வாழ்கையிலை விட்டதை எடுக்கமாட்டினம் . இவைக்கு குதிரையை ஓட்டிறது மனுசன் எண்டும் , லொட்டோ மெசின்தான் நிகழ்தகவு லை முடிவு செய்யும் எண்டு தெரியாமல் இல்லை . இப்பிடிப் பட்ட காயளை எளிய பிறப்புகள் எண்டு சொல்லலாம் . Of things devoid of truth as real things men deem;- Cause of degraded birth the fond delusive dream!  L’illusion qui fait prendre la chimère pour la réalité, engendre la naissance sans gloire. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. 352 மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு அவ்வுணர்வு அறியாம

அறத்துப்பால்- துறவறவியல்- துறவு-Renunciation-Du renouncement-341-350

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341 ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ ,அந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை எனது கருத்து : ஒருத்தனுக்குப் பிடிச்ச சனியள் மூண்டு மண் , பொன் , பெண் . இந்த மூண்டு சனியும் ஒருத்தனை உண்டு இல்லை எண்டு ஆக்கிப்போடும். இதுகளிலை பற்றை வைக்காமல் விட்டால் அவனுக்கு துன்பம் வராது எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்திலை முற்றுந்துறந்த துறவியளாலேயே இந்தப் பெண் எண்ட பற்றை விடேலாமல் கிடக்கு. நம்ம காஞ்சி பெரியவாளும் , பிரேம்ஸ்சும் , நித்தியும் படுகிற பாடுகளைப் பாக்கிறியள் தானே? From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he! Si l’on renonce à un objet quelconque, celui-ci ne cause aucune douleur au renonçant. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. 342 துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால் , ஆசைகளையெல்லாம் விட்டுவிடவேண்டும் . அப்படி விட்டுவிட்டபின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பங்கள் பலவாகும் . எனது கருத்து : சிவசத்தியமாய் எனக்கு இந்தக் குறளின்ரை லொஜிக் விளங்கேலை

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340

நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331 நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் . எனது கருத்து : ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும். இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான். இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள்? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் . Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure! C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable. கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332 பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது எனது கருத்து : குளங்குட்டையிலை தண்ணியும் மீனும் இருக்கும் வரைக்கும் தான் கொக்குக

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321 அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும். எனது கருத்து: நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும்.  What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill.  Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés.  பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322 கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் . எனது கருத்து: மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்சு இழுப்பினம் சாப்பிட . ஆனால் குசினீக்கை அடுப்பு எரியாது . தாங்களும் ஆனவாயில சாப்பிடாமல் , அப்பப்ப வெந்ததும் வேகாதத

அறத்துப்பால்-துறவறவியல்- இன்னா செய்யாமை- Not doing Evil-Ne pas faire de mal-311-320

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 311 சிறப்பத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும் எனது கருத்து : நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் இப்ப உள்ள நிலமையில இப்பிடிபட்ட ஆக்களை தேடிப் பிடிக்கிறது கஸ்ரம் . செல்வந்தனாய் வருகினமோ இல்லையோ தனக்கு சகுனப்பிழையெண்டாலும் பறவாயில்லை மற்றவனுக்கு மூக்கு உடைஞ்சால் சரி எண்ட நிமையள்தான் இப்ப இருக்கிற சனத்திட்டை . Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure. Certes, on peut acquérir la richesse qui procure les honneurs en faisant du mal au prochain. Ne jamais faire de mal au prochain est la qualité des hommes sans tâche. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 312 பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல் , நல்லோர்களின் பண்பாகும் . எனது கருத்து : இதைத்தானே நாங்களும் சிங்களத்துக்கு செய்தம் ஆனால் உலகம் எங்களுக்கு என்ன அலாத்தி

அறத்துப்பால்- துறவறவியல்-வெகுளாமை-The not being Angry- Ne pas s’emporter-301-310

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.301 மெலியார் இடத்து சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன் . பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? எனது கருத்து: ஒருத்தனை விட குறைஞ்ச தகுதி தராதரத்தில இருக்கிறவையிட்டை கோபப் படமால் இருக்கிறவன் தான் கண்டியளோ உண்மையில கோபத்தை அடக்கிறவன். பருப்பு அவியாத இடத்தில் கோபப்பட்டாலும் ஒண்டுதான் கோபப்படாட்டிலும் ஒண்டுதான் . Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein? Se garder de la colère, là où elle peut produire effet est méritoire. Qu’importe de prendre ou de perde patience, là où la colère doit échouer? செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும் இல்அதனின் தீய பிற.302 வலியாரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும் . மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் பயக்கும் எனது கருத்து: உங்கடை பருப்பு அவியாத இடத்திலை உங்கடை கோபத்தை காட்டினியள் எண்டால் சேதாரம் உங்களுக்குத்தான்.  Where power is none to wreak thy

அறத்துப்பால்-துறவறவியல் வாய்மை-Veracity- La Véracité - 291- 300

வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும் தீமை இலாத சொலல். 291 உண்மையென்று கூறப்படுவது எது என்றால், மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை தராத சொற்களைக் கூறுதலேயாகும் எனது கருத்து: மற்றவைக்கு ஒரெப்பனும் தீமை செயாத மாதிரி ஒரு சொல்லை சொல்லுறது தான் உண்மையான உண்மையாம் . இது இந்தக்காலத்தில நடக்கிற காரியமோ? மற்ற ஆக்களுக்கு தீமை வராத சொல்லை சொல்லிறது தான் உண்மையெண்டால் ஊமையாத்தான் இருக்கவேணும் . You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free. Qu’est ce que la véracité? C’est proférer des paroles qui ne puissent causer aucun mal. பொய்ம்மையும் வாய்மை யிடத்த; புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். 292 பொய்மைச் சொற்களும் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்குத் தருமாயின்,வாய்மைச் சொற்கள் நல்வழி பெறும் எனது கருத்து: எனக்கு இதில உடன்பாடில்லை . ஒருகதைக்கு ஆளாளுக்கு தான் சொல்லுற பொய்யால நன்மை வரும் எண்டு பொய்சொல்ல வெளிக்கிட்டால் என்ன செய்யிறது?? Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford. S’il a pour effet de causer du bien

அறத்துப்பால்- துறவறவியல்-கள்ளாமை-The Absence of Fraud -Ne pas voler- 281-290

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281 பிறரிடம் பழிசொல் கேட்க்காமல் உலகில் வாழ விரும்புகின்றவன் பிறர்பொருளைக் கவரும் எண்ணம் உள்ளத்தில் தோன்றாதவாறு தன்னைக்காத்துக் கொள்ள வேண்டும் எனது கருத்து : இப்பிடிப் பட்ட ஆக்கள் இண்டைக்கு இல்லையெண்டே சொல்லலாம் உங்களை ஒருத்தர் பிழை சொல்லக்கூடாது எண்டு நீங்கள் விரும்பினால் மற்றவைக்கு சொந்தமான சாமானுகளை மனசாலையும் நீங்கள் களவெடுக்க கூடாது கண்டியளோ Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pure. Que celui qui est considéré de tous, comme désirant son salut et non comme le méprisant garde son cœur contre toute appropriation frauduleuse d’un objet quelconque! உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளை கள்ளத்தால் கள்வேம் எனல். 282 குற்றமான செயல்களை மனதால் நினைப்பதும் பாவம் ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது எனது கருத்து : எனக்கு தெரிஞ்சு சீதையில இராவணனுக்கு ஒரு இது வந்து அவாவைக் கடத்திக் கொண்டு போனதால அவற்றை மான

அறத்துப்பால்-துறவறவியல் கூடாவொழுக்கம்-Inconsistent Conduct-Bonne conduite-De la conduite qu’on de doit pas tenir-271- 280

  வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 271 வஞ்சகனுடைய தீயொழுகத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்சபூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும் . எனது கருத்து : ஊரை அடிச்சு உலையிலபோடுறவை அந்த நேரத்திலை நினைக்கலாம் தாங்கள் வெண்டிட்டினம் எண்டு ஆனால் எண்டைக்காவது ஒருநாள் அவையின்ர உடம்பு பஞ்சபூதங்கள் அவையைப் பாத்து சிரிக்கும் . Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within. Les cinq sens se rient interieurement de la feinte moralité de l’hypocrite. வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றம் படின். 272 தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத் தோற்றம் என்ன செய்யும் ? எனது கருத்து : தனக்கு பிழை எண்டு தெரிஞ்சும் ஒருத்தர் பிழை விடுகிறார் எண்டால் அவர் எப்பிடியான தவக்கோலங்கள் போட்டும் வேலையள் இல்லை. What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault? De quelle utilité est l’a

அறத்துப்பால்-துறவறவியல் தவம்-Penance-La penitence- 261-270

  உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை  அற்றே தவத்திற்கு உரு.261 தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிருக்கு துன்பம் செய்யாதிருத்தலும், ஆகிய இவையே தவத்திற்கு இலக்கணமாகும் . எனது கருத்து: ஒருத்தர் தனக்கு வாற எந்தக்கஸ்ரத்தையும் தாங்கித்தரிக்கிற குணமும் , முக்கியமாய் மற்றவனுக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கிறது தான் உண்மையான தவம் எண்டு ஐய்யன் சொன்னாலும் , ஒருத்தன் எவ்வளவு தூரத்துக்கு துன்பத்தை தாங்கலாம் எண்டதையும் சொன்னால் நல்லாயிருக்கும் . To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'. Le propre de la pénitence, c’est de supporter ses propres douleurs et de ne pas faire souffrir un autre être doué de vie. தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அவம் அதனை அஃதுஇலார் மேற்கொள் வது. 262 தவநெறிக்கு ஏற்ற வாய்ப்பு உடையவர்க்கே தவமும் கை கூடும்.தவப்பயன் இல்லாதவர்கள் அதனை மேற்கொள்வது வீண் முயற்சியாகும் . எனது கருத்து: மனம் ஒரு குரங்கு பாருங்கோ. அதை கட்டுக்குள்ளை கொண்டுவந்து , எதிலையும் இரும்பு மாதிரி உறுதியா இருக்கிறவைக்குத்தானாம் தவத்தின்றை பெ