அரண்மனை அந்தப்புரத்தில் இளங்கோவை அவன் அன்னையார் ஆதித்த பிராட்டி அத்தையார் வீரமாதேவி, பாட்டியார் பெரிய குந்தவை இவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தங்களது ஆனந்தக் கண்ணீரால் குளிப்பாட்டினார்கள். அருள்மொழியின் தங்கை அம்மங்கையோ அவன் மீது தன் பரிகாசச் சொற்களைச் சரமாரியாகப் பொழியத் தொடங்கினாள். “ஒரே ஒரு போர்க்களத்துக்குச் சென்று ஒரே ஒரு விழுப்புண்ணோடு திரும்பியிருக்கிறார் இவர். இவரைப் போய் எல்லோரும் வீராதி வீரர், சூராதி சூரர் என்கிறார்கள். இவருக்குப் புகழ் தேடிக் கொள்ளவே தெரியவில்லை. சின்னஞ்சிறு விழுப்புண் தழும்புகள் ஐம்பது அறுபதாவது உடலில் இருக்கவேண்டாமா?’’ “நீ சற்று நேரம் சும்மா இருக்கமாட்டாயா?’’ என்று தமது மகளை அதட்டினார் வீரமாதேவி. “போங்களம்மா! கவசம் போட்டுக்கொள்ளாமல் இப்படியா போய்ப் பகைவன் கையில் அகப்பட்டுக் கொள்வது. ஒரு சாண் ஆழம், இரண்டு சாண் அகலத்துக்கு அவன் இவர் தோளைப் பிளந்து தள்ளியிருக்கிறானே! இதைப்போல் இரண்டாவது விழுப் புண்ணைத் தேடிக்கொண்டிருந்தால் இவர் கதிஎன்ன?’’ “உனக்குக் கவசம் போட்டுவிடுகிறேன். அதோடு சுனைக்குள் இறங்கி நீந்திச் செல்கிறாயா?’’ என்று கேட்டான் இளங்கோ. “எனக்கு நீந்தத் த
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்