Skip to main content

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி




பிள்ளையள் வணக்கம்,

எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்கை, நாங்களும் கேம்கேட்ட பரம்பரை கண்டியளோ. அதிலையும் நான் ஐஞ்சாம் வகுப்பு படிகேக்கை தமிழ் பாடப் புத்தகத்திலை சந்திரனும் முயலும் எண்ட பாட்டு வெண்பா வரிசையிலை வரும். எனக்கு அந்த பாட்டு சுட்டு போட்டாலும் வரேலை. என்ரை தமிழ் வாத்தி பெட்டையுளுக்கு முன்னாலை அடிச்ச அடி இண்டைக்கும் நினைச்சால் கண்ணாலை ரத்தம் வரும் கண்டியளோ.

என்னமொண்டையும் சொல்லவேணும் இப்பத்தையான் அமைச்சர் ,அப்பத்தையான் வாத்தியார் ஒருதரிட்டை டியூசனில படிச்சன் .அவர் எப்பவும் "அப்பன் " எண்டுதான் கூப்பிடுவர். அடி எண்டால் சொல்லி வேலையில்லை. மொழியிலயும் உள்ளங்கையிலையும் தான் நடக்கும். வெடிவால் முளைச்சு சிங்கங்கள் சிலுப்பி திரியிற நேரத்திலை பெட்டையளுக்கு முன்னாலை அடிச்சால் எப்பிடி இருக்கும்?? என்னோடை இருந்த ஒரு கூட்டாளி ஒருத்தன் எப்பவும் ஒரு ட்ரிக் வைச்சிருப்பான். அவர் உள்ளங்கையிலை அடிக்க முதலையே ஆஆஆஅ நோகுது சேர் எண்டு டிக்கியிலை கையை தேய்ப்பான். அந்த அமைச்சர் ஆரெண்டு சொல்லுங்கோ ?? 

அப்பத்தையான் வாத்திமார் கிட்ட முட்ட 90 வீதமான ஆக்களின்ரை தேசிய மொழி "வன்முறைதான்". இதுகளாலைதான் நாங்கள் வன்முறையிலை காதல் வைச்சமோ தெரியாது. சோதினை மூட்டதிலை இவங்கடை அடிஅகோரத்திலையே குலைப்பன் காச்சல் அடிச்சு எடுக்க வேண்டிய நல்ல மாக்ஸ்சுகளையும் எடுக்காமல் விட்டம். அன்பாய் ஆதரவாய் சொல்லி குடுக்க வேண்டிய பாடங்களை இந்த வாத்திமார் வன்முறையாலையே சொல்லி சொல்லி எங்களை வறுத்தெடுத்தாங்கள். அதுக்காக எல்லா வாத்திமாரையும் நான் குறை சொல்லேலை கண்டியளோ. அச்சா வாத்திமாரும் இருந்தவைதான்.

சின்ன வகுப்பிலை கூட பொம்பிளை ரீச்சர்மார் நல்லவையாய் இருந்தவை. ஆனால் அவையும் எங்களை டிசிப்பிளினாய் நடத்திறம் எண்டு வறுத்தெடுத்தவைதான். எப்பிடியும் தங்கடை பிள்ளையளை டபுள் புறமோசன் போட்டு எங்களை விட ஒருவகுப்பு கூட விடுவினம். "எங்களுக்கு ஒழுக்கம் நன்று வகுப்பேற்றப்படவில்லை" எண்டு ரிப்போர்ட்டிலை போட்டு வீட்டிலை அப்பரை சன்னதம் ஆட வைப்பினம். வகுப்பேற்றப் படவில்லையாம் பேந்தென்ன ஒழுக்கத்துக்கு நல்ல பேர் குடுக்கிறது?? இவையின்ரை இந்த கம்பசூத்திரம் எனக்கு இண்டைவரைக்கும் விளங்கேலை கண்டியளோ.

இந்த வாத்திமார் கெட்டு நொந்து இருந்த நேரம் நாங்கள் எட்டிகூட பாக்கேலை. இப்ப இருந்தாப்போலை நாங்கள் நல்ல பிள்ளையளுக்கு நடிக்கிறது அவ்வளவு நல்லாய் இல்லை பாருங்கோ. ஆனால் அப்ப அவையிட்டை வாங்கின அடியள்தான் இண்டைக்கும் எங்களை நெம்பிகொண்டு நிக்கச் செய்யுது எண்டதையும் மறக்க ஏலாதுதான். மொத்தத்திலை ரெண்டு பக்கமும் கணக்கு தீத்த பள்ளிக்கூடச் சிவியம் தான் எங்கடை காலத்திலை நடந்திது.



06 ஆவணி 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம