Skip to main content

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி




பிள்ளையள் வணக்கம்,

எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்கை, நாங்களும் கேம்கேட்ட பரம்பரை கண்டியளோ. அதிலையும் நான் ஐஞ்சாம் வகுப்பு படிகேக்கை தமிழ் பாடப் புத்தகத்திலை சந்திரனும் முயலும் எண்ட பாட்டு வெண்பா வரிசையிலை வரும். எனக்கு அந்த பாட்டு சுட்டு போட்டாலும் வரேலை. என்ரை தமிழ் வாத்தி பெட்டையுளுக்கு முன்னாலை அடிச்ச அடி இண்டைக்கும் நினைச்சால் கண்ணாலை ரத்தம் வரும் கண்டியளோ.

என்னமொண்டையும் சொல்லவேணும் இப்பத்தையான் அமைச்சர் ,அப்பத்தையான் வாத்தியார் ஒருதரிட்டை டியூசனில படிச்சன் .அவர் எப்பவும் "அப்பன் " எண்டுதான் கூப்பிடுவர். அடி எண்டால் சொல்லி வேலையில்லை. மொழியிலயும் உள்ளங்கையிலையும் தான் நடக்கும். வெடிவால் முளைச்சு சிங்கங்கள் சிலுப்பி திரியிற நேரத்திலை பெட்டையளுக்கு முன்னாலை அடிச்சால் எப்பிடி இருக்கும்?? என்னோடை இருந்த ஒரு கூட்டாளி ஒருத்தன் எப்பவும் ஒரு ட்ரிக் வைச்சிருப்பான். அவர் உள்ளங்கையிலை அடிக்க முதலையே ஆஆஆஅ நோகுது சேர் எண்டு டிக்கியிலை கையை தேய்ப்பான். அந்த அமைச்சர் ஆரெண்டு சொல்லுங்கோ ?? 

அப்பத்தையான் வாத்திமார் கிட்ட முட்ட 90 வீதமான ஆக்களின்ரை தேசிய மொழி "வன்முறைதான்". இதுகளாலைதான் நாங்கள் வன்முறையிலை காதல் வைச்சமோ தெரியாது. சோதினை மூட்டதிலை இவங்கடை அடிஅகோரத்திலையே குலைப்பன் காச்சல் அடிச்சு எடுக்க வேண்டிய நல்ல மாக்ஸ்சுகளையும் எடுக்காமல் விட்டம். அன்பாய் ஆதரவாய் சொல்லி குடுக்க வேண்டிய பாடங்களை இந்த வாத்திமார் வன்முறையாலையே சொல்லி சொல்லி எங்களை வறுத்தெடுத்தாங்கள். அதுக்காக எல்லா வாத்திமாரையும் நான் குறை சொல்லேலை கண்டியளோ. அச்சா வாத்திமாரும் இருந்தவைதான்.

சின்ன வகுப்பிலை கூட பொம்பிளை ரீச்சர்மார் நல்லவையாய் இருந்தவை. ஆனால் அவையும் எங்களை டிசிப்பிளினாய் நடத்திறம் எண்டு வறுத்தெடுத்தவைதான். எப்பிடியும் தங்கடை பிள்ளையளை டபுள் புறமோசன் போட்டு எங்களை விட ஒருவகுப்பு கூட விடுவினம். "எங்களுக்கு ஒழுக்கம் நன்று வகுப்பேற்றப்படவில்லை" எண்டு ரிப்போர்ட்டிலை போட்டு வீட்டிலை அப்பரை சன்னதம் ஆட வைப்பினம். வகுப்பேற்றப் படவில்லையாம் பேந்தென்ன ஒழுக்கத்துக்கு நல்ல பேர் குடுக்கிறது?? இவையின்ரை இந்த கம்பசூத்திரம் எனக்கு இண்டைவரைக்கும் விளங்கேலை கண்டியளோ.

இந்த வாத்திமார் கெட்டு நொந்து இருந்த நேரம் நாங்கள் எட்டிகூட பாக்கேலை. இப்ப இருந்தாப்போலை நாங்கள் நல்ல பிள்ளையளுக்கு நடிக்கிறது அவ்வளவு நல்லாய் இல்லை பாருங்கோ. ஆனால் அப்ப அவையிட்டை வாங்கின அடியள்தான் இண்டைக்கும் எங்களை நெம்பிகொண்டு நிக்கச் செய்யுது எண்டதையும் மறக்க ஏலாதுதான். மொத்தத்திலை ரெண்டு பக்கமும் கணக்கு தீத்த பள்ளிக்கூடச் சிவியம் தான் எங்கடை காலத்திலை நடந்திது.



06 ஆவணி 2014

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...