Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 06




இண்டைக்கு விடிய காத்தாலை புஸ்பமாய் குளிச்சு நெத்தி முட்ட திருநூத்தை அள்ளி பூசிகொண்டு ஒரு சாம்பிராணி குச்சியும் கொழுத்திப்போட்டு கொம்பியூட்டரை திறந்து அதிலை சுப்பிரபாத்தை மெதுவாய் போட்டுக்கொண்டு ( இங்கையும் பக்தி கமழ வேணுமாம் ) பேப்பருகளிலை பூராயம் பாக்கத் தொடங்கினன். எல்லா பேப்பருகளும் ஒரு உழுந்தை வித்தியாசம் வித்தியாசமாய் அரைச்சு பலகாரம் பலகாரமாய் சுடுறாங்கள்.ஆனால் பாருங்கோ பலகாரத்துக்கு உப்பு புளி காணுமோ எண்டு ஒருத்தரும் வாயை திறக்கிறாங்கள் இல்லை.இண்டைக்கு சுறுக்கர் என்ன குளிரிலை பினாத்திறார் எண்டு எல்லாரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது விளங்காமல் இல்லை. உதுகளுக்கெல்லாம் இந்த சுறுக்கர் மசியிற ஆள் இல்லை கண்டியளோ.

நாலு வரியத்துக்கு பிறகு ஐரோப்பிய நீதிமானுகள் புலியளின்ரை தடையை நீக்கி இருக்கினமாம் எண்டது தான் இண்டையான் ஹொற் ரொப்பிக் கண்டியளோ. இந்த நீதிமானுகள் தான் கிட்ட முட்ட ஏழு வரியத்துக்கு முன்னாலை சனமெல்லாம் றோட்டிலை நிண்டு குழற கையை கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்ட கோஸ்ரியள். ஒரு தமிழனாய் பிறந்த குற்றதுக்காய் டெய்லி சனங்களை வகைதொகையாய் போட்டுத்தள்ள அதிலை குளிர் காஞ்ச கனவானுகள்.சரி அதுகள்தான் போகட்டும், இந்த கேடுகெட்ட கொலையளை செய்தவங்களை சட்டத்துக்கு முன்னாலை கொண்டு வந்து கிலைசை கெடுத்துவம் எண்டு இல்லை. இப்ப வந்து சும்மா ரைம் பாசுக்கு தடையை எடுக்கிறம் எண்டால் என்ன கணக்கு பாருங்கோ?? அதுக்கு எங்கடை சனங்களும் எதோ தமிழ் ஈழம் கிடைச்ச மாதிரி ஆளாளுக்கு சவுண்டுகள் வுடுகினம். இந்த வழக்கை ஆடின அப்புக்காத்து ஒரு வெள்ளை எண்டு கொஞ்ச பேர் பெருமை படுகினம். முந்தி எல்லாம் வெள்ளையளுக்கு வழக்காடினவங்கள் எங்கடை அப்பன்மார். அப்பிடி ஒரு அப்புக்காத்தும் இங்கை இல்லையோ?? எண்ட கேள்வியும் என்ரை மண்டையுக்கை அடிக்குது. எல்லாம் முடிஞ்சு போய் , எல்லாரும் செத்து புல்லு முளைக்கிற நேரம் வந்து தடையை எடுக்கிறம் எண்டால் இதை வைச்சு என்ன நாக்கே வழிக்கிறது?? கதைக்கிற நேரம் பாத்து கதைக்காமல் இருந்து போட்டு எல்லாம் முடிய இப்ப ஓடியந்து, நீங்களும் ஒரு மனுசர் எண்டு சாட்டுக்கு அழுகிறது ஆரின்ரை நிகழ்ச்சி நிரலிலை நடக்குது ??

இதிலை என்னம் ஒண்டையும் சொல்லவேணும் கண்டியளோ , எங்கடை வித்துவானுகள் பால்குடி பபாக்கள்,விரல் சூப்பி கொண்டு நிண்ட அதுகளை அநியாயமாய் முடக்கி போட்டினம் எண்டு நான் சொல்லேலை. உப்பு திண்டவன் தண்ணியை குடிக்கவேணும். வினை விதச்சவன் தினை அறுக்கவேணும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம். எங்கடையாக்களும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிச்சினம். நல்லாய் பட்டு தெளிஞ்சிட்டினம். அனால் தீர்ப்பிலை வலு கட் அன்ற் றைற்ராய் ரெண்டு விசயத்தை சொல்லி இருக்கிறாங்கள். ஒண்டு, மூண்டு மாசத்துக்குள்ளை ஐரோப்பா பாளிமென்ற் எடுக்கிறதோ இல்லையோ எண்டு ஒரு முடிவுக்கு வரவேணும். ரெண்டாவதுதான் மெயின் மாற்றார் கண்டியளோ. எந்த வளத்தாலையும் காசு சேக்கப்படாது. இல்லை நாங்கள் பெரிய பிஸ்கோத்துகள், எங்கடை விலாசங்களை காட்டுவம் எண்டு வெளிக்கிட்டால் ஆராலையும் காப்பேத்தேலாது. இதோடை யாகம் வளக்கிறம், அடிக்கடி பாளிமென்ருக்கு லெக்சன் வைக்கிறம் ,ஸ்கைப்பில அரசாங்கம் நடத்திறம், உள்ளுக்கை போன அம்மாவுக்காக கவலைப்படுறம் எண்டு விலாசம் காட்டாமல், நாங்கள் எல்லாரும் ஒண்டாய் சேந்து இந்த கொலையள் செய்தவையை கிலிசை கெடுத்தவேணும் பாருங்கோ. ஒரு பதவியிலை இருக்கிற ஆளை எப்பிடி கோட்டுக்கு கொண்டுவாறது, உது லூசு வேலை எண்டு நினைக்கப்படாது. ஒரு பதவியிலை இருந்தவர் கொலையள் செய்யிற நேரம் ஒண்டும் செய்யாமல், இப்ப வந்து தமிழ் சனங்களே நீங்கள் பாவங்கள் எண்டு அழுகிற நீதிவானுகளாலை மனமிருந்தால் பதவியிலை இருக்கிறவரை கோடேத்தேலும் கண்டியளோ. அதுகளை செய்யாமல் விட்டு போட்டு பேந்தும் எங்கடையாக்கள் சன்னதம் ஆடினால் ஒருத்தராலையும் காப்பாத்தேலாது கண்டியளோ. அப்ப பிள்ளையள் பேந்து ஒரு இடத்திலை சந்திப்பம்.



Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...