Skip to main content

உச்சமும் உச்சுக்கொட்டல்களும்- அனோஜன் பாலகிருஷ்ணனின் எதிர்வினைக்கு மறுவினை

இந்தக் கிழமை அம்ருதாவில் வெளியாகிய தெய்வீகனின் "உச்சம்" சிறுகதைக்கு அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமர்சனம் வாசிக்கக் கிடைத்தது. அதை வாசித்த பொழுது எனது மனம் கிரகித்துக் கொண்ட விடயங்களைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.   

"ஓடுவது எப்பெடியென்று சொல்லும் முடவன் தான் விமர்சகன்" என்று இலக்கியப்பழமான லெ முருகபூபதி ஐயா எனக்களித்த நேர்காணலில் சமகாலத்து  விமர்சன முறமையை வரையறை செய்கின்றார்.  அனோஜனின் விமர்சனத்தை நான் வாசித்த பொழுது மேற்கண்ட வரையறையே எனது நினைவுக்கு வந்தது. பிரதியைப் பிரதியாகப் பாராது எழுதியவரின் ஊடாகப்  பிரதியைப் பார்த்து தனது மன அரிப்புக்களை உச்சுக் கொட்டியிருக்கின்றார் அனோஜன். ஒரு ஆக்கத்தை யாரும் விமர்சிக்கலாம். அதுதான் முறையுங்கூட. ஆனால் அதற்கொரு நேர்மைத்தன்மையும் அதிஉயர் மனப்பக்குவமும் வரவேண்டும். ஜெயமோகனின் முகாமில் இருந்து பேதி போவதானாலும் அதில் ஒரு ஒழுக்கம் இருத்தல் வேண்டும் என்று பயங்கரமாக நம்புகிறவர் அனோஜன். "உச்சம் " சிறுகதையில் எந்தவொரு சரியான விடயங்களும் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே - 

'உச்சம்’ சிறுகதை(?) எந்த இலக்கியக் கூறுகளும் அற்ற வெற்றுக் குப்பை.சுத்த ஹம்பக்" - என்று முற்று முழுதாகப் பிரதியை  நிராகரித்து அறம் பாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான விமர்சனம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் நில்லாது எதையெதை பிரசுரிக்க வேண்டும் என்று 'அம்ருதா" ஆசிரியர் குழுமத்துக்கு வகுப்பு எடுத்திருப்பது அனோஜனது விமர்சனத்தில்(?) இன்னொரு சிறப்பம்சமாக இருக்கின்றது. 

அனோஜனுக்கும் எனக்கும் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும் அவரது சிறுகதைகளை ஆழமாக உற்று நோக்கியவன் என்ற வகையிலும் அவரது கடந்தகால கதைகள் பலவற்றில் பெண்களது மார்பகங்கள் மற்றும் அவர்களது இன்னோரன்ன அவயவங்களை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து உச்சம் கண்டு, ஒரு இந்திரிய எழுத்தாளராக வருவதற்கு தனது கதைகளில் முக்கோ முக்கென்று முக்கிய அனோஜன், தெய்வீகனது கதைகளில் தெய்வீகன் பெண்களைப்போட்டுத் தாக்குகின்றார் என்று சீற்றம் கொண்டு பெண்களைக் காக்க வந்த கிருஷ்ணராக சங்கூதுவது எந்தவிதத்தில் அறமாகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

சமகாலத்து இலக்கிய வெளியில் தான் மட்டும் மலம் கழிக்கும் பொழுது அது யாருக்குமே மூக்கைப்பிடிக்கும் அளவுக்கு நாறாது, மாறாக அது நறுமணத்தையே கொடுக்கும் என்ற அதிஉயர் நம்பிக்கையுடன் கணணியின் முன்னால் அமருகின்ற அனோஜன், எதுவித கூச்ச நாச்சமும்  இல்லாது அல்லதுவிடின்  குற்ற உணர்வுகளோ இல்லாது  பொதுவெளியில் விமர்சனம் என்ற போர்வையில் அறம் பாடித் தனது மன உளைச்சல்களையும் மன வெக்கைகளையும் வெப்பிராயங்களையும் வஞ்சகத்தனத்துடன் விசிறியடிப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. 

ஆரம்பகாலங்களில் எதுவித மாசுக்களும் அற்று எழுத்தை மட்டுமே நேசிக்கின்ற வேகத்தை மட்டுமே உள்ள படைப்பாளிகளிடம் 'ஆதர்சம்" என்ற போர்வையில் நஞ்சுகளைக் கலக்கின்ற மூத்த இலக்கியவாதிகளை( பருப்புகளை) பரிதாபத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் இந்த உச்ச வலைகளில் விழுந்து தமது மணங்களை முகர்ந்தறியாது பத்திரிகைகளுக்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் வகுப்பெடுக்கும், அறம் பாடும் - உச்சு கொட்டிகொண்டிருக்கும் - அனோஜன் போன்றவர்களும் பரிதாபத்துக்குரியவர்களே!    

பிற்குறிப்பு : அனோஜன் தன்னையும் கேள்விக்குட்படுத்தி தன்னை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த எதிர்வினை எழுத்தப்பட்டுள்ளது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை .




கோமகன்

02/09/2018



Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...