Skip to main content

உச்சமும் உச்சுக்கொட்டல்களும்- அனோஜன் பாலகிருஷ்ணனின் எதிர்வினைக்கு மறுவினை

இந்தக் கிழமை அம்ருதாவில் வெளியாகிய தெய்வீகனின் "உச்சம்" சிறுகதைக்கு அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமர்சனம் வாசிக்கக் கிடைத்தது. அதை வாசித்த பொழுது எனது மனம் கிரகித்துக் கொண்ட விடயங்களைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.   

"ஓடுவது எப்பெடியென்று சொல்லும் முடவன் தான் விமர்சகன்" என்று இலக்கியப்பழமான லெ முருகபூபதி ஐயா எனக்களித்த நேர்காணலில் சமகாலத்து  விமர்சன முறமையை வரையறை செய்கின்றார்.  அனோஜனின் விமர்சனத்தை நான் வாசித்த பொழுது மேற்கண்ட வரையறையே எனது நினைவுக்கு வந்தது. பிரதியைப் பிரதியாகப் பாராது எழுதியவரின் ஊடாகப்  பிரதியைப் பார்த்து தனது மன அரிப்புக்களை உச்சுக் கொட்டியிருக்கின்றார் அனோஜன். ஒரு ஆக்கத்தை யாரும் விமர்சிக்கலாம். அதுதான் முறையுங்கூட. ஆனால் அதற்கொரு நேர்மைத்தன்மையும் அதிஉயர் மனப்பக்குவமும் வரவேண்டும். ஜெயமோகனின் முகாமில் இருந்து பேதி போவதானாலும் அதில் ஒரு ஒழுக்கம் இருத்தல் வேண்டும் என்று பயங்கரமாக நம்புகிறவர் அனோஜன். "உச்சம் " சிறுகதையில் எந்தவொரு சரியான விடயங்களும் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே - 

'உச்சம்’ சிறுகதை(?) எந்த இலக்கியக் கூறுகளும் அற்ற வெற்றுக் குப்பை.சுத்த ஹம்பக்" - என்று முற்று முழுதாகப் பிரதியை  நிராகரித்து அறம் பாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான விமர்சனம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் நில்லாது எதையெதை பிரசுரிக்க வேண்டும் என்று 'அம்ருதா" ஆசிரியர் குழுமத்துக்கு வகுப்பு எடுத்திருப்பது அனோஜனது விமர்சனத்தில்(?) இன்னொரு சிறப்பம்சமாக இருக்கின்றது. 

அனோஜனுக்கும் எனக்கும் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும் அவரது சிறுகதைகளை ஆழமாக உற்று நோக்கியவன் என்ற வகையிலும் அவரது கடந்தகால கதைகள் பலவற்றில் பெண்களது மார்பகங்கள் மற்றும் அவர்களது இன்னோரன்ன அவயவங்களை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து உச்சம் கண்டு, ஒரு இந்திரிய எழுத்தாளராக வருவதற்கு தனது கதைகளில் முக்கோ முக்கென்று முக்கிய அனோஜன், தெய்வீகனது கதைகளில் தெய்வீகன் பெண்களைப்போட்டுத் தாக்குகின்றார் என்று சீற்றம் கொண்டு பெண்களைக் காக்க வந்த கிருஷ்ணராக சங்கூதுவது எந்தவிதத்தில் அறமாகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

சமகாலத்து இலக்கிய வெளியில் தான் மட்டும் மலம் கழிக்கும் பொழுது அது யாருக்குமே மூக்கைப்பிடிக்கும் அளவுக்கு நாறாது, மாறாக அது நறுமணத்தையே கொடுக்கும் என்ற அதிஉயர் நம்பிக்கையுடன் கணணியின் முன்னால் அமருகின்ற அனோஜன், எதுவித கூச்ச நாச்சமும்  இல்லாது அல்லதுவிடின்  குற்ற உணர்வுகளோ இல்லாது  பொதுவெளியில் விமர்சனம் என்ற போர்வையில் அறம் பாடித் தனது மன உளைச்சல்களையும் மன வெக்கைகளையும் வெப்பிராயங்களையும் வஞ்சகத்தனத்துடன் விசிறியடிப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. 

ஆரம்பகாலங்களில் எதுவித மாசுக்களும் அற்று எழுத்தை மட்டுமே நேசிக்கின்ற வேகத்தை மட்டுமே உள்ள படைப்பாளிகளிடம் 'ஆதர்சம்" என்ற போர்வையில் நஞ்சுகளைக் கலக்கின்ற மூத்த இலக்கியவாதிகளை( பருப்புகளை) பரிதாபத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் இந்த உச்ச வலைகளில் விழுந்து தமது மணங்களை முகர்ந்தறியாது பத்திரிகைகளுக்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் வகுப்பெடுக்கும், அறம் பாடும் - உச்சு கொட்டிகொண்டிருக்கும் - அனோஜன் போன்றவர்களும் பரிதாபத்துக்குரியவர்களே!    

பிற்குறிப்பு : அனோஜன் தன்னையும் கேள்விக்குட்படுத்தி தன்னை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த எதிர்வினை எழுத்தப்பட்டுள்ளது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை .




கோமகன்

02/09/2018



Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...