Skip to main content

உச்சமும் உச்சுக்கொட்டல்களும்- அனோஜன் பாலகிருஷ்ணனின் எதிர்வினைக்கு மறுவினை

இந்தக் கிழமை அம்ருதாவில் வெளியாகிய தெய்வீகனின் "உச்சம்" சிறுகதைக்கு அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமர்சனம் வாசிக்கக் கிடைத்தது. அதை வாசித்த பொழுது எனது மனம் கிரகித்துக் கொண்ட விடயங்களைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.   

"ஓடுவது எப்பெடியென்று சொல்லும் முடவன் தான் விமர்சகன்" என்று இலக்கியப்பழமான லெ முருகபூபதி ஐயா எனக்களித்த நேர்காணலில் சமகாலத்து  விமர்சன முறமையை வரையறை செய்கின்றார்.  அனோஜனின் விமர்சனத்தை நான் வாசித்த பொழுது மேற்கண்ட வரையறையே எனது நினைவுக்கு வந்தது. பிரதியைப் பிரதியாகப் பாராது எழுதியவரின் ஊடாகப்  பிரதியைப் பார்த்து தனது மன அரிப்புக்களை உச்சுக் கொட்டியிருக்கின்றார் அனோஜன். ஒரு ஆக்கத்தை யாரும் விமர்சிக்கலாம். அதுதான் முறையுங்கூட. ஆனால் அதற்கொரு நேர்மைத்தன்மையும் அதிஉயர் மனப்பக்குவமும் வரவேண்டும். ஜெயமோகனின் முகாமில் இருந்து பேதி போவதானாலும் அதில் ஒரு ஒழுக்கம் இருத்தல் வேண்டும் என்று பயங்கரமாக நம்புகிறவர் அனோஜன். "உச்சம் " சிறுகதையில் எந்தவொரு சரியான விடயங்களும் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே - 

'உச்சம்’ சிறுகதை(?) எந்த இலக்கியக் கூறுகளும் அற்ற வெற்றுக் குப்பை.சுத்த ஹம்பக்" - என்று முற்று முழுதாகப் பிரதியை  நிராகரித்து அறம் பாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான விமர்சனம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் நில்லாது எதையெதை பிரசுரிக்க வேண்டும் என்று 'அம்ருதா" ஆசிரியர் குழுமத்துக்கு வகுப்பு எடுத்திருப்பது அனோஜனது விமர்சனத்தில்(?) இன்னொரு சிறப்பம்சமாக இருக்கின்றது. 

அனோஜனுக்கும் எனக்கும் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும் அவரது சிறுகதைகளை ஆழமாக உற்று நோக்கியவன் என்ற வகையிலும் அவரது கடந்தகால கதைகள் பலவற்றில் பெண்களது மார்பகங்கள் மற்றும் அவர்களது இன்னோரன்ன அவயவங்களை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து உச்சம் கண்டு, ஒரு இந்திரிய எழுத்தாளராக வருவதற்கு தனது கதைகளில் முக்கோ முக்கென்று முக்கிய அனோஜன், தெய்வீகனது கதைகளில் தெய்வீகன் பெண்களைப்போட்டுத் தாக்குகின்றார் என்று சீற்றம் கொண்டு பெண்களைக் காக்க வந்த கிருஷ்ணராக சங்கூதுவது எந்தவிதத்தில் அறமாகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

சமகாலத்து இலக்கிய வெளியில் தான் மட்டும் மலம் கழிக்கும் பொழுது அது யாருக்குமே மூக்கைப்பிடிக்கும் அளவுக்கு நாறாது, மாறாக அது நறுமணத்தையே கொடுக்கும் என்ற அதிஉயர் நம்பிக்கையுடன் கணணியின் முன்னால் அமருகின்ற அனோஜன், எதுவித கூச்ச நாச்சமும்  இல்லாது அல்லதுவிடின்  குற்ற உணர்வுகளோ இல்லாது  பொதுவெளியில் விமர்சனம் என்ற போர்வையில் அறம் பாடித் தனது மன உளைச்சல்களையும் மன வெக்கைகளையும் வெப்பிராயங்களையும் வஞ்சகத்தனத்துடன் விசிறியடிப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. 

ஆரம்பகாலங்களில் எதுவித மாசுக்களும் அற்று எழுத்தை மட்டுமே நேசிக்கின்ற வேகத்தை மட்டுமே உள்ள படைப்பாளிகளிடம் 'ஆதர்சம்" என்ற போர்வையில் நஞ்சுகளைக் கலக்கின்ற மூத்த இலக்கியவாதிகளை( பருப்புகளை) பரிதாபத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் இந்த உச்ச வலைகளில் விழுந்து தமது மணங்களை முகர்ந்தறியாது பத்திரிகைகளுக்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் வகுப்பெடுக்கும், அறம் பாடும் - உச்சு கொட்டிகொண்டிருக்கும் - அனோஜன் போன்றவர்களும் பரிதாபத்துக்குரியவர்களே!    

பிற்குறிப்பு : அனோஜன் தன்னையும் கேள்விக்குட்படுத்தி தன்னை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த எதிர்வினை எழுத்தப்பட்டுள்ளது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை .




கோமகன்

02/09/2018



Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம