Skip to main content

Posts

ரகசியத்தின் அரூப நிழல்கள் – டிலீப் டிடியே – ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்

‘மலைகள்’ இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற “பொறுப்புமிக்க சமூக காவலர்கள்” என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு. ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் – ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் – இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே ‘மலைகள்’ இணையத்தில் கடந்த வருடம் ‘இவளதிகாரம்” என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன். பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்

தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்துக்கு வருகை – பத்தி

“தமிழ் எழுத்துப்பரப்பில் ஒருவர் மீதுள்ள அபிமானம் என்பது வேறு அடிமைநிலை எனபது வேறு . எனக்கு எனது தோட்டத்து மல்லிகைகளே அதிக வாசம் கூடியவை.” கோமகன் 000000000000000000000000000 இன்று தமிழகத்தில் இருந்து எஸ் ரா வந்திருக்கின்றார். எல்லா ஈழத்து படைப்பாளிகளும் ஏதோ தேவதூதனை கண்டு பரவசப்படுவது போல் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போடுகின்றார்கள் . இது எனக்கு கவலையளிக்கின்றது . அதற்காக நான் எஸ் ராவுக்கு எதிரானவன் இல்லை . ஏன் நாளை ஜெ மோ, சாரு, மனுஷ்ய புத்திரன் போன்றோரும் ஈழத்துக்கு வரலாம். இதன் பின்னணியில் உள்ள நுண்ணரசியல்களை நாங்கள் விளங்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். எமது ஈழத்து மூத்த படைப்பாளிகள் அவர்கள் வாழுங் காலத்திலேயே கொண்டாடப்படல் வேண்டும் . இதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அத்துடன் எமது படைப்புக்களமும் தமிழகத்து படைப்புக்களமும் ஒன்றல்ல. இரண்டுமே வேறுபட்ட பாதைகளில் பயணிப்பவை . நாங்கள் நீண்ட நெடிய போரின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எமது அனைத்து வளங்களும் காயடிக்கப்பட்டன. காலம் இலக்கியத்துறையில் எமக்குரிய சந்தர்ப்பங்களை தருவதில் வஞ்சனை செய்தாலும் அது நல்லதையே செய்

மிருக பந்தம் – நாயர் – பத்தி

பெயர் : ஜூனியர் இனம் : ஜெர்மன் ஷெப்பேர்ட் வாழ்விடம் : லனி தொர்னே – Lagny – thorigny. எனது அண்ணை வடகோவை வரதராஜன் இயற்கை ஆர்வலராகவும் பிராணிகள் ஆர்வலராகவும் இருந்தமையால் எனது சிறிய வயதிலேயே மிருகங்கள் மீது கட்டற்ற பந்தம் ஆரம்பமாகியது. இதன் விழைவாகவே எனது ” றொனியன் ” மற்றும் “வெந்துர்டி திறைஸ்” சிறு கதை உருவானது. கோப்பாயில் இருந்த மரித்துப்போன றொனியன் ஆகட்டும் இப்பொழுது பருத்திதுறையில் இருக்கும் டைசன் டேவிட் ( கருப்பையா , சுப்பையா ) ஆகட்டும் , நேற்று நான் சந்தித்த இந்த ஜூனியர் ஆகட்டும் தங்கள் நடத்தைகள் மூலம் என் மனதை அள்ளியவர்கள். நேற்று அயல் நாட்டில் இருந்து என்னிடம் வந்திருந்த தோழி ஒருவரை அவரது தோழியான அல்விட் வசந்தராணியிடம் அழைத்து செல்ல வேண்டியிருந்தது. பாரீஸ்-இல் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் லனி தொர்னே என்ற இடத்தில் அவர்கள் இருந்தார்கள். தொடரூந்தில் அரை மணியில் அங்கு சென்று விடலாம். வேலைநாட்களில் நான் நண்பர்களை சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கின்றேன். அதற்கு காரணங்களும் உண்டு . எல்லோரும் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, எனது நாளானது அதிகாலை 3 மணிக்கே

நடு சஞ்சிகையின் “கிழக்கிலங்கை சிறப்பிதழ்” பற்றி இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்

தமிழில் வெளியாகும் இணைய இதழ்களில் வெளியாகும் எழுத்துகள் அனைத்தையும் வாசித்து முடிப்பதில்லை. ஆனால் பிரான்சிலிருந்து வரும் நடு இதழின் முக்கால்வாசியை வாசித்துவிடுவதுண்டு. லண்டனிலிருந்து வரும் எதுவரை இதழும் அப்படி வாசிக்கும் இதழ். தமிழ் இலக்கியத்தின் உலகப்பரப்பை அறியவிரும்பினால் இவற்றை வாசித்தே ஆகவேண்டும். ஆம் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டிலிருந்து கழண்டுபோய் வெகுகாலமாகிவிட்டது.இப்போது வந்திருக்கும் நடு-வின் விவரங்கள் இங்கே. 00000000000000000000000000000 இதழ் 05 கிழக்கிலங்ககை சிறப்பிதழ். இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள் ஓவியம் கட்டுரை கலைக்கூடம் கவிதை , குறுநாவல். சிறப்புக்கதை சொல்லி, சிறப்புக்கவிதை சொல்லி, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், பத்தி, புகைப்படம், மொழிபெயர்ப்பு, விமர்சனம். எழுத்தாளர்கள் : அனார் இசாத் றெஹானா, உமா வரதராஜன், உமையாழ் பெரிந்தேவி, எம் .ஏ . ஷகி, ஏ.நஸ்புள்ளாஹ், கோ நாதன், சாஜீத் அஹமட், சாம்சுடீன் நளீம், ஜிஃப்ரி ஹாஸன், ஜெம்சித் ஸமான், தேவகி கணேஷ், பரீட்சன், றஷ்மி, லறீனா அப்துல் ஹக், லலித கோபன், விஜய் எட்வின், ஸர்மிளா ஸெய்யித். நன்றி : பேராசிய

மகளிர் தினம் ஓர் நோக்கு – கட்டுரை

சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம் , எட்டு மணித்தியால வேலை , வாக்குரிமை , பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ் பிளாங்க் மூலம் பெண்களின் அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. இன்றய கால கட்டத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல் ,பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகள் உறுதி செய்துகொண்டுதான் இ

“துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன- வி. ரி. இளங்கோவன்

அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி ரி இளங்கோவன் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இடதுசாரிய சிந்தனையாளர், ஊடகவியலாளர், சித்த ஆயுர்வேத மருத்துவர் என்று பல்துறைசார் ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பாரிஸின் மூத்த இலக்கிய ஆளுமையாக எம்மிடையே இருக்கின்றார்.கே.டானியலின் பாசறையில் வளர்ந்த முதன்மைப் போராளி. இவர் தனது புனைபெயரை ‘அசலகேசரி‘ என்று வைத்துக்கொண்டாலும் தனது சொந்தப் பெயரிலேயே பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கின்றார்.இதுவரையில் கவிதைத்தொகுதிகளாக ‘கரும்பனைகள்‘, ‘சிகரம்‘, ‘இது ஒரு வாக்குமூலம்‘, ‘ஒளிக்கீற்று‘ என்பனவும், சிறுகதைத் தொகுப்புகளாக ‘இளங்கோவன் கதைகள்‘, ‘Tamil Stories frome France’ – இளங்கோவன் கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘இப்படியுமா..?’,’பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க்கதைகள்‘ – இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு என்பனவும், கட்டுரைத் தொகுப்புகளாக, கே. டானியல் வாழ்க்கைக் குறிப்புகள், மண்

குரலற்றவரின் குரல் ஒரு பார்வை – தனிமரம் நேசன்

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிகபங்களிப்பை வழங்கியிருக்கின்றது! தொடர்ந்தும்வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விடயம். அந்த வகையில் இவ்வாரம் பாரிசில் இன்னொரு இலக்கியமலரினை கைகளில் பெறும் வாய்ப்பு கிடைத்ததுமகிழ்ச்சி எனலாம். நேர்காணல்கள் இன்று ஊடகங்கள் எங்கும் இடம்பெறுகின்ற ஒரு விடயமாகிவிட்டது .என்றாலும்இலக்கிய ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யும்போது பல சொல்லப்படாத மூன்றாவது கோணத்தில்இருந்து சமூகத்திக்கு கருத்தாளம் மிக்க செய்திகள்வந்தடைகிறது. பாரிசில் வாழும் கோமகன் என்றுஇலக்கியவட்டத்தில் அறியப்படும் மூத்த படைப்பாளிதியாகராஜா ராஜ ராஜன் அவர்கள் பல்வேறுசஞ்சிகைகளுக்காக தான் நேர்கொண்டஈழத்துப்படைப்பாளிகள் /புலம்பெயர்படைப்பாளிகள் என 14 பேரிடம் தொடர்பைஏற்படுத்தி அவர்களிடம் பெற்ற பதில்களைதொகுத்து அச்சில் கொண்டுவந்து இருக்கின்றார்குரலற்றவன் குரலாக! இந்த நூல் இப்போது தாயகத்தில் பல இடங்களில்வெளியீட்டு விழாவைக்கண்டு கொண்டேவருக்கின்றது சிறப்பாக . இனி வரும் நாட்களில் பாரிசிலும் வெளியீட்டுவிழாநிகழும் என்ற நம்பிக்கையோடு! தனிமரமும் காத்துஇருக்கின்றேன் நேரம் ,காலம் கூடிவந்தால்வாச