Skip to main content

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் – அறிவியல் – பாகம் 03 , 21 – 30





21 ஆனை நெருஞ்சி அல்லது பெரு நெருஞ்சி-Pedalium murex


இது பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள்:

http://en.wikipedia…./Pedalium_murex

00000000000000000000000000

22 இலந்தை – jujube – Ziziphus jujuba



இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு மற்றும் சீனா ஆகும் . வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி

74% மாவுப் பொருள்

17 %, புரதம்

0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

http://ta.wikipedia….org/wiki/இலந்தை

http://en.wikipedia….ziphus_zizyphus

000000000000000000000000000000000

23 இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் – The Great Kapok Tree -Ceiba pentandra


இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும் பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும் . இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

இலவ மரத்தின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். இது ஆப்பிரிக்காவில் இயற்கையாகவே வளர்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் இது தோட்டப் பயிராக பயிரிடப்படுகிறது. காயிலிருந்து பஞ்சு எடுக்கப்படுகிறது. இலவம் பஞ்சு உறுதியற்றது. எனவே, இவை நூல்நூற்க பயன்படுவதில்லை. மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறைகள் தயாரிக்க மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய விதையிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு சோப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. காயின் மேலோடு எரிபொருளாக பயன்படுகிறது. இதனுடைய மிருதுவான பகுதியிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

இலவ மரத்தில் நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என பல வகைகள் உள்ளன. இம்மரத்தினைச் சாலையின் இருபுறங்களிலும் வளர்ப்பதால் ஒரு கம்பீரமான அழகினைக் கொடுக்கிறது. இம்மரம் எல்லா நிலங்களிலும் குறிப்பாக தரிசு நிலங்கள், சாலை ஓரங்களில் நன்கு வளரும். இது வறட்சியைத் தாங்கவல்லது.

நவம்பர் டிசம்பரில் மரங்களில் பூக்க ஆரம்பிக்கும். அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதன் மலர்கள் காயாகி பழுக்காமல் நார் போன்று மாறி பஞ்சாகி பின் வெடிக்கிறது. 15 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களிலிருந்து விதைகள் எடுப்பது நல்லது. விதைகளை மேடை பாத்திகளில் நேரடியாகவோ அல்லது பாலித்தின் பைகளிலோ விதைக்கலாம். நாற்றுக்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் நடவுக்கு தயாராகி விடும். நன்கு வளர்ந்த மரங்கள் 2 முதல் 3 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்து விடும். இருப்பினும் 6 ஆண்டுகள் ஆன பின் தான் மிகுதியாகவும், ஒரே சீராகவும் காய்க்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை காய்களை அறுவடை செய்யலாம்.

நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.

அகநானூறு 11, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!

http://treesinsangam…lk-cotton-tree/

http://ta.wikipedia….a.org/wiki/இலவு

http://en.wikipedia….Ceiba_pentandra

00000000000000000000000000000000

24 இண்டு , காட்டுசிகை அல்லது சீயாக்காய் மரம்- Climbing wattle tree – Acacia concinna


இண்டு , காட்டுசிகை அல்லது சீயாக்காய் மரம் ஏறு/பற்றுக் கொடி வகையைச்சார்ந்ததாகும். இவை புதர் போன்று வளரும் தன்மையது. இதன் இலை இரட்டைச்சிறகிலை யமைப்பையும், பூ மஞ்சள் நிறத்திலும் கோளகவடிவிலும் காணப்படும். காய் பழுப்பு வண்ணத்திலும், காய்ந்த நிலையில் சுருக்கம் மற்றும் துண்டிட்டதுப் போலவும் காட்சியளிக்கும். இதன்காய்களில் 6-10 விதைகள் காணப்படும்.

இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இத்தாவரத்திலிருந்துப் பெறப்படும் காய்களில் இருந்து உருவாக்கப்படும் தூள் சிகையை அலசவும் கழுவவும் பயன்பட்டுவருகிறது. ஆகையால் இதைச் சிகைக்காய்த் தூள் என விளிக்கிறோம். அதன் சிறப்பாலேயே இது சிகைக்காய்ச் செடி என அழைக்கப்படுகிறது.

இச்செடியின் சிறப்பே இதன் காய்களால் என்றுச் சொன்னால் மிகையல்ல. இதன் காய்களைப் பொடித்து பெறப்படும் தூளைப் பல நூற்றாண்டுகளாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன் படுத்தி வந்துள்ளனர்.

பெரும்பாலான செயற்கை முடிப்பராமரிப்புப் பொருட்களில் இவை கலக்கப்படுகின்றன.

இதற்கு பூஞ்சான் எதிர்ப்பு பண்பு, சரும மற்றும் தோல் நோய்களுக்குச் சிறப்பான மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. இது ஒரு மலமிலக்கியாகவும் இருமல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தவல்லது .

இதன் மரப்பட்டைகளில் இருந்து சேப்போனின் என்னும் பொருள் பிரித்து எடுக்கப் படுகிறது. இதன் இலைகளில் டானின், அமினோக் காடிகள் மற்றும் புரதங்கள் நிறைந்துக் காணப்படுகிறது. இதன் இலைகளில் புளிமத்தன்மைக் கூடுதலாகக் காணப்படுவதால் இதை சட்டினி தயாரிக்கவும் பயன் படுத்துகின்றனர்.

இதன் காய்களில் இருந்து உருவாக்கப்படும் பொடியில் உள்ள அமில மற்றும் கார நெறித்தன்மை முடியின் பாதுகாப்பிற்கும் அதனில் உள்ள நுரைக்கும் தன்மை மயிரைச் சுத்தம் செய்யப்பயன்படுகிறது.

http://ta.wikipedia….கைக்காய்ச்_செடி

http://en.wikipedia….Acacia_concinna

000000000000000000000000000000

25 இலைக்கள்ளி – EUPHORBIBA


வளரியல்பு :-

இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்ட டி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மர வகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன் படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன் படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

மருத்துவப் பயன்கள் :-

இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி, மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.
இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழு கழியும்.

இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இரக்கி ஆரவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.

இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்துவார்கள்.

இலைச் சாற்றை அல்லது பாலைப்பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச்சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.

இலையை வதக்கி அடிவயிற்றில் கட்டதேங்கிய சிறுநீர் வெளிப்படும்

இலையை வாட்டிச் சாறு பிழிந்துஇளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

இலைச்சாறு அல்லது பாலைவேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துமேற்ப்பூச்சாகதேய்த்துவர மூட்டுப் பிடிப்பு,வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை தீரும்.

இலையை வாட்டிப் பிழிந்து 7,8 துளிச்சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்துகுழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவுதேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒருதேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்றுவேளையும் கொடுத்துவர ஈளை,இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சிவைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டிகாலை மாலை கொடுத்துவரக் கக்குவான்,சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலைஆகியவை தீரும்.

10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம்இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள்உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம்வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும்.இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாதபுண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள்ஆகியவை தீரும்.

https://www.facebook…122834401198406

00000000000000000000000000000000000000

26 இறப்பர் மரம் rubber tree – Pará rubber tree- sharinga tree – Hevea brasiliensis


இறப்பர் மரத்தின் இறப்பர் , மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் மரம் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.

இயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.

இறப்பர்ப்பால் இறப்பர் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தோட்டங்களிலுள்ள இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.

இறப்பரின் சிறப்பான வளர்ச்சிக்கு பின்வரும் காலநிலை நிலைமைகள் காணப்படவேண்டும்.

250செ.மீ. மழைவீழ்ச்சி

வெப்பநிலை வீச்சு 200C-340C

80% வளிமண்டல ஈரப்பதன்

நல்ல சூரியஓளி

கடும் காற்று வீசாத பகுதி

http://ta.wikipedia…./இயற்கை_மீள்மம்

http://en.wikipedia….ea_brasiliensis

0000000000000000000000000000

27 செந்தாழை அல்லது அன்னாசி மரம் – pineapple – Ananas comosus


செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது.

http://ta.wikipedia….rg/wiki/அன்னாசி

http://en.wikipedia…./Ananas_comosus

0000000000000000000000000000000000000

28 இரம்புட்டான் அல்லது இறம்புட்டான் – rambutan – Nephelium lappaceum


இரம்புட்டான் அல்லது இறம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

ரம்புத்தானை 12–20 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரம்[2]. இலைகள் மாற்றொழுங்கானவை,10–30 செ.மீ நீளம், 3-11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. சிற்றிலைகள் 5–15 செ.மீ நீளமும் 3-10 செ.மீ அகலமும் கொண்டது. ரம்புத்தான் ஓர் ஈரில்லத்தாவரமாகும். ரம்புத்தானை விதை மற்றும் ஒட்டுக்கன்று போன்ற முறைகள் வழி வளர்க்கப்படுகின்றன .ரம்புத்தான் விதைகள் என்பது கடிதோல் விதைகள் வகையை சேர்ந்தது .இவ்வகை விதைகளை அதிக காலத்திற்கு சேமித்துவைக்க முடியாது. இவ்வகை விதைகளை சிறிது காலத்திற்கு சேமித்து வைப்பதற்கு வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஈரநிலை சேமிப்பு முறை கையாளப்படுகின்றது . கடிதொல் வகை விதைகள் எளிதில் உயிப்பு திறனை இழந்துவிடும் என்பதால் பெரும்பாலான ரம்புத்தான் பழ விதைகள் சேகரிப்பட்டவுடனே போலிபெக் என்கின்ற விதைப்பையில் நடப்படுகின்றன. ரம்புத்தான் நடவாளர்கள் பெரும்பாலோர் ஒட்டுக்கட்டுதல் முறையை இம்மர வளர்ப்பில் பயன்படுத்துகின்றனர். இலைக் கைய்ப்புத் திறன் பெற்று எழுதுக்கோல் (பென்சில்) அளவு வளர்ச்சியடைந்த மரத்திலே ஒட்டுக்கட்டுதல் முறை பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும். புதுதாக பறித்தப் பழங்களை கூடைகளில் போட்டு வைப்பது நல்லது. அதே நேரத்தில் அதிகமான பழங்களை ஒரு கூடையில் மிகவும் நெருக்கியப் படி போட்டுவைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்வதனால் பழங்கள் விரைவிலே காய்ந்து விடும் .

ரம்புட்டான் அயனமண்டல சூட்டுக் காலநிலைக்குப் பொருத்தமானது. ஆயினும் 22–30° சதம அளவு வெப்பநிலை வீச்சு பொருத்தமானது. கடற்காற்றினால் பாதிக்கப்படும் ஆதலால் கடற்கரைக்கு அண்மையில் செய்கை பண்ண முடியாது. ஆண்டு முழுவதும் பரவலாகப் பெய்கின்ற 1500-2000 மி.மீ மழைவீழ்ச்சி சிறந்தது.சாரீரப்பதன் 75-80 சதவீமாக இருக்க வேண்டும்.

இரம்புட்டான்,பொதியிடப்பட்ட பானம்

100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து

ஆற்றல் 80 kcal 340 kJ

மாப்பொருள் 20.87
நார்ப்பொருள் 0.9

கொழுப்பு 0.21

புரதம் 0.65

நீர் 78.04கி

உயிர்ச்சத்து ஏ 0 μg 0%

தயமின் 0.013 mg 1%

ரிபோஃபிளாவின் 0.022 mg 1%

நியாசின் 1.352 mg 9%

பான்டோதெனிக் அமிலம் 0.018 mg 0%

உயிர்ச்சத்து பி6 0.020 mg 2%

இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 8 μg 2%

உயிர்ச்சத்து பி12 0.00 μg 0%

உயிர்ச்சத்து சி 4.9 mg 8%

கால்சியம் 22 mg 2%

இரும்பு 0.35 mg 3%

மக்னீசியம் 7 mg 2%

பாசுபரசு 9 mg 1%

பொட்டாசியம் 42 mg 1%

சோடியம் 11 mg 1%

Nutrient values and weights are for edible portion

Percentages are relative to US

recommendations for adults.

Source: USDA Nutrient database

http://ta.wikipedia….g/wiki/இறம்புட%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

http://en.wikipedia….elium_lappaceum

0000000000000000000000000000000000000000

29 ஈர வெங்காயம் அல்லது வெங்காயம் -The onion – Allium cepa


வெங்காயம் இந்தியா, பாக்கிஸ்த்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் முதல் பத்து வெங்காய உற்பத்தியாளர்கள் — 2008 (டன்கள்)

சீன மக்கள் குடியரசு 20,817,295

இந்தியா 8,178,300

ஆஸ்திரேலியா 4,003,491

ஐக்கிய அமெரிக்கா 3,349,170

பாக்கிஸ்த்தான் 2,015,200

துருக்கி 2,007,120

ஈரான் 1,849,275

எகிப்தின் கொடி எகிப்து 1,728,

உருசியா 1,712,500

பிரேசில் 1,299,815

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின் ஸல்பினிக் அமிலமாக மாறுகிறது.இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது.அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.

http://ta.wikipedia…./wiki/வெங்காயம்

http://en.wikipedia….iki/Allium_cepa

00000000000000000000000000000000

30 உதிரவேங்கை அல்லது வேங்கை மரம் – Indian kino – Pterocarpus marsupium


வேங்கை மரமானது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இது 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.

வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வேங்கை இலைகள்:

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்து பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் . கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.

கட்டிகள் கரைய :

உடம்பில் உண்டாகும் கட்டிகளைக் கரைப்பதில் வேங்கை மரம் முன்னோடியாய்த் திகழ் கிறது. வேங்கை இலையு டன் சமஅளவு ஆளி விதை, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்கு விழுதாய் அரைத்து கட்டிகளின்மீது பூசிவர, கட்டிகள் மறையும்.

கொழுப்புக் கட்டிகள் கரைய :

சிலருக்கு உடம்பு முழுவதும் கொழுப்புக் கட்டிகள் இருப்பதைப் பார்த்திருப்போம். நவீன மருத்துவர்கள் வயதானால் இது கரைந்துவிடும் என பக்குவமாய் பதில் சொல் வார்கள். வேண்டுமா னால் ஆபரேஷன் செய்து அகற்றிவிடலாம் என்பார் கள். ஒன்றா இரண்டா… உடம்பெல்லாம் கட்டிக்கு எங்கெல்லாம் ஆபரேஷன் செய்வது? வேங்கை இலை, வேங்கைப் பூ, மகிழம்பூ, ஆவாரம்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாகக் கலந்து நன்கு பொடியாய் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து உடம்பெல்லாம் பூசி தொடர்ந்து குளித்துவர கொழுப்புக் கட்டிகள் கொஞ்சங் கொஞ்சமாய்க் கரைந்துவிடும்.

ஆறாத புண்களை ஆற்ற :

வேங்கைப்பட்டை 100 கிராம் அளவில் எடுத்து, அத்துடன் 10 கிராம் மஞ்சள் சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கச் செய்து பாதியாய் சுண்ட வைக்கவும். இதில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து, புண்களின்மீது ஒற்றித் துடைத்துவர ஆறாத புண்ணும் ஆறும். சர்க்கரை நோயில் உண்டாகும் புண்ணை ஆற்ற இதைவிடச் சிறந்த மருந் தொன்றுமில்லை.

சகல தோல் நோய்களும் தீர :

வேங்கைப்பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், மருதம்பட்டை, ஆவாரம்பூ, தாமரைப்பூ, செம்பருத்திப்பூ, மகிழம்பூ, கடுக்காய்பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். உடலைப் பேணவும் அழகைப் பேணவும் ஒப்பற்ற மருந்து இதுவாகும்.

இதனைப் பூசிக் குளித்துவர, படை, சொறி, படர்தாமரை, தேமல், கருந்தேமல், வெண்புள்ளி நோய், தொடை இடுக்குகளில்- அக்குள் பகுதிகளில் உண் டாகும் படை நோய்கள், கட்டிகள் மற்றும் உலகையே அச்சுறுத்தும் தோல் சார்ந்த நோயான “சோரியாஸிஸ்’ போன்ற நோய்களுக்கு இதனை வெளி மருந்தாய்ப் பாவித்து வியத்தகு பலன் பெறலாம்.

சீதபேதி குணமாக :

வேங்கைப் பட்டை யைத் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, இதனை குடிநீராய்ப் பருகி னால், சீதபேதி, சீதக்கழிச்சல், உஷ்ணபேதி போன்றவை உடனே தீரும்.

உடலை இரும்பைப் போல் உறுதியாக்க :

மரங்களில் வேங்கையும் கருங்காலியும் மிகவும் வலுவான மரங்களாகும். இவற்றில் வைரம் பாய்ந்த மரங்களைக் கீற கோடாரி முனையும் வளைந்துவிடும். அத்தகைய உறுதி வாய்ந்த மரங்களாகும். உறுதித்தன்மை (Strength) உள்ள ஒரு பொருள்தான் நமது உடம்பையும் இரும்பாக்க முடியும்.

சித்தர்களின் மருந்து கண்டறியும் விதமே, ஒரு பொருளின் தன்மையை மனித உடம்பில் ஒப்பிட்டுப் பார்த்து தேர்வு செய்துவதுதான். வேங்கைப்பட்டை, கருங்காலிப் பட்டை, ஆவாரம்பட்டை, மருதம்பட்டை, கடுக்காய், ஏலக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துத் தூள் செய்து, தினமும் காலை- மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வர, பல்லியாய்- ஒல்லியாய் உள்ள இளைத்த உடலும் தேறும்; உடல் இரும்பைப் போல் உறுதி பெறும். நமது உடம்பின் எலும்பு மண்டலம் மற்றும் நரம்புமண்டலங்கள் வலுவடையும். உடம்பைப் பீடித்துள்ள எந்த நோயும் கட்டுப்படும்.

சர்க்கரை நோய்க்கு மாமருந்து:

வடஇந்தியாவில் இதன் பட்டையை இரவில் வெந்நீரில் ஊறவைத்து விடுவார்கள். அதிகாலையில் தண்ணீரை வடிகட்டிக் குடித்துவிடுவார்கள். இதனைப் பருகிப் பார்த்தவர்கள் சர்க்கரை நோய் கட்டுப்படுவதை உணர்வார்கள். சர்க்கரை வியாதியில் உண்டாகும் அதிமூத்திரம் உடனே கட்டுப்படும். வேங்கைப்பட்டை, நாவல் கொட்டை, சிறுகுறிஞ்சான், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஆவாரம்பட்டை ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும். சர்க்கரை வியாதிகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளிலிருந்தும் உடனே மீண்டு விடலாம்.

வேங்கை இன்னும் பல்வேறு வகைகளில், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிக் கொண்டு தான் இருக்கிறது. பித்தவாந்தி, செரியாமை, சீதபேதி, வெள்ளைப்படுதல், இருமல், உஷ்ண இருமல் போன்ற நோய்களுக்கும் அதியற்புதப் பலன்களை வேங்கை தன்னகத்தே கொண்டுள்ளது.

வேங்கை மரம் உஷ்ணத்தை ஈர்க்கும் வல்லமை பெற்றது. காற்றிலுள்ள மாசுகளைத் தூய்மை செய்வதற்கான பாங்கு வேங்கையில் அபரிமிதமாய் உள்ளது. வேங்கை மரத்திலிருந்து மிக அதிக அளவில் பிராண வாயு வெளி யேறுகிறது. இதனை வீட்டிற்கு ஒரு மரமாய் வளர்த்தால் காற்று தூய்மையாகும். தூய்மை யான காற்றால் மேகம் திரளும். பருவ மழையும் தவறாது பொழியும். பொழிந்த மழையும் நிலத்தைப் பண்படுத்தி, நீரை வளப்படுத்தும்.

http://ta.wikipedia….i/வேங்கை_(மரம்)

http://en.wikipedia….arpus_marsupium

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம