Skip to main content

Posts

மற(றை)க்கப்பட்ட லெனின் சின்னத்தம்பி

தாயகத்தில் குடும்பம் சுற்றம் சூழல் என்று உன்னதமான வாழ்வைக் கொண்ட ஓர் இனக்குழுமம் தங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் கோரப்பிடியால் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள விருப்பமின்றிப் புலம்பெயர்கின்றது. அதன் இறுதி இலக்கானது, எதிலி என்ற முத்திரையும், தங்கள் வாழ்நாளில் எண்ணியே பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் கோலங்களையும்  இந்த எதிலிகளை எதிர்கொண்டன. வாழ்வியலிலும் சரி சொல்லாடலிலும் சரி மிகவும் கொடுமையான உளவியல் தாக்கத்தைக் கொண்டு வருவது இந்த எதிலி என்ற இருப்பு ஆகும். ஈழத்தவர்களது புலப்பெயர்வையும் அவர்களது வாழ்வியில் விழுமியங்களையிட்டுப் பல படைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு  கோணத்தில் கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் கொண்டுள்ளன. அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் ஜீவமுரளியின் "லெனின் சின்னத்தம்பி " நாவல் உயிர்மை வெளியீடாக கடந்த ஆண்டு வெளியாகியது. ஆனாலும் இந்த நாவல் புலம்பெயர் இலக்கிய உலகில் மறக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம். பனியும் அதன் வீரியமும் ஐரோப்பா கண்டத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுபவன. அப்பொழுது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற மனஅ

மகிழடி வைரவரும் அப்பாகுட்டியரும்

வைரவர் உக்கிர மூர்த்தி. முந்தி வைரவருக்கு ஒரு தகர கொட்டகையும் இடைக்கிடை மடையும் விளக்கும் ஏத்தினால் காணும்.உப்பிடித்தான் கோப்பாயிலை மகிழடி வைரவர் எண்டு இருந்தார் .அவற்றை அட்ரஸ் வந்து குறிப்பாய் சொல்லுறதெண்டால் கோப்பாய் ஏ ஜி ஏ ஒபிசுக்கு பக்கத்தில் ஒழுங்கையிலை இருக்கிறார் .முந்தி ஆள் வலு சிம்பிளான ஆள். நான் ஊருக்கு போகேக்கை ஒருக்கால் மகிழடி வைரவரை ஒரு எட்டு பாத்திட்டு போவம் எண்டு போனன். இப்பத்தையான் மகிழடி வைரவர் றிச்மான். கோபுரம் என்ன. இப்பீக்கர் என்ன. டெய்லி அய்யர் என்ன. எண்டு சொல்லி வேலையில்லை . அந்த நேரம் ஊரிலை அப்பாக்குட்டியர் எண்டு ஒருத்தர் இருந்தவர் அவர் கொஞ்சம் கைவைத்தியமும் பாப்பார். அதோடை என்னமொருத்தர் குளறி சின்னத்தம்பியர் எண்டும் ஒருத்தர் இருந்தவர்; ஆள் கொஞ்சம் கைப்பார்ட் பார்ட்டி .இவரை ஏன் குளறி எண்டு சொல்லுறதெண்டால் செத்தவீடு, நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முன்னுக்கு நிக்கிற அருமையான சீவன் .என்ன எந்தநேரமும் மெல்லமாய் கதைச்சு நான் பாக்கேலை . கதைக்க தொடங்கினால் காதுகன்னம் எல்லாம் வெடிக்கும் அனால் கருட்டு சுருட்டு இல்லாத சீவன் . இவை தண்ணியிலைதான் கூட்டாளிமார். மத்தும்

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 13

கிலிசை கெட்ட காசை வாங்கப்படாது   ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ் , காலங் காத்தாலை எழும்பி குளிரிலை நடுங்கின உடம்புக்கு சுடுதண்ணியாலை சுளுக்கெடுத்து திருனூத்தை அள்ளி பூசிக்கொண்டு ஒரு தேத்தண்ணியோடை பெட்டியை துறந்தன். ஐ மீன் கொம்பியூட்டரை . அட ஹப்பியாய் லீவு நாளிலை இருப்பமெண்டு பெட்டியை திறந்தால் அங்கை சனி நிண்டு தைய்யா தக்கா போடுது. சுறுக்கருக்கு ஒரு கூட்டாளி பெடி ஒருத்தன் முகனூலிலை இருக்கிறான். பெடி கவிதையள் எழுதிறதிலை ஆள் விச்சுழியன் கண்டியளோ. அவன் ஒரு பதிவை போட்டிருந்தான். நானும் என்ன ஏது எண்டு ஒருக்கால் எட்டிப் பாத்தன். பெடிக்கு என்ன கிரகமாற்றமோ தெரியேலை அப்பிடியொரு பதிவு. அவன்ரை பதிவை பாத்து எனக்கு மண்டை விறைச்சுப்போச்சுது. பிரச்சனை என்னவெண்டால் டில்லியிலை இருந்து பாலியல் தொழிலாளியள் காசு செத்து குடுத்தது பெடிக்கு குடைச்சலாய் போச்சுது. அது துடக்கு காசு. அவை எப்பிடி குடுக்கேலும்? அதோடை அவை விபச்சாரியள் ( நாங்கள் ஊரிலை சொல்லுவம் சைவேயள் , டிமூக்கள் ) எண்டு பெடி கொதிக்குது. அப்ப நான் சொன்னன், மோனை ஒருக்காலும் செய்யற வேலையை கிலிசை கெடுத்தாதை. எல்லாருக்குமே செய்யிற வேலை கடவு

"இவர்களிடம் பேனையும் அவர்களிடம் துப்பாக்கியும் இருந்தன"

ஈழத்து இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி ஓர் சிறந்த சமூகச்செயற்பாட்டாளராக, தன்னை இன்று வரை அடையாளப்படுத்தி வருகின்றார். அதில் முக்கியமாக, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும் , பின்னர் . 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைப்பதும், 2011 ஆம் ஆண்டில் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கன. இதுவரை - சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள், 1975) ,சமாந்தரங்கள் (சிறுகதைகள், 1986), சமதர்ம பூங்காவில் (பயண இலக்கியம்,1990),நெஞ்சில் நிலைத்த