Skip to main content

கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமில்லை!-வாசிப்பு அனுபவம்-மதுசுதன் ராஜ்கமல்


புலம்பெயர் வாழ்வின் ஆழ அகலங்களை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கும் ஈழ இலக்கிய வரிசையில் முரண் சிறுகதை தொகுப்பு வித்தியாசமானதொரு கூறாக அமைந்திருக்கிறது.வடிவநேர்த்தியிலும் சொல் உத்தியிலும் சில முயற்ச்சிகளை இக்கதைகளில் கோமகன் கையாண்டு பார்த்திருக்கிறார்.அப்படியான முயற்ச்சிகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று சொல்வதற்கில்லை ஆனால் சில கதைகளில் அது சாத்தியப்பட்டும் இருக்கிறது.நிஜத்தின் புற உருவை புனைவின் வழி பிரதிபலிக்க முயல்வதில்,அகத்தேடல் வாழ்வியல் போராட்டத்தைப் போலவே ஒரு முடிவில்லாத தொடர் போராட்டத்தை போன்றது,அந்த வகையில் சுறுக்கர் இன்னும் கூட பல உத்திகளை கையாளவேண்டும்.பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்வலைச்சலின் கணங்கள் எப்படி ஒவ்வொருவருக்கும் பன்முகப்பட்டதோ அதுபோல எழுத்தும் அதனை வெளிப்படுத்தும் வகைமாதிரிகளும் பன்முகத்தன்மையானது தான்.அந்தவகையில் சுறுக்கர் ஒரு நெகிழ்வான போராளி என்பது நமது அசுவாசமாய் இருக்கிறது.

இத்தொகுப்பின் பதினோரு கதைகளும் புலம்பெயர் வாழ்வை மையமாகக்கொண்டு நகர்பவைதான் எனினும் ஒவ்வொன்றும் அதன் தன்னியல்பில் தன்னிகரான கதைகளாக மிளிர்கிறது.அனேகமாக இத்தொகுப்பின் சில கதைகளை நடு ஆன்லைன் இதழில் அவ்வப்போது படித்திருக்கிற நியாபகங்கள் மீளவந்தாலும்,இத்தொகுப்பின் வழி மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் மேலும் சில புதிய கோணங்களில் சில புதிய தரிசனங்கள் காணக்கிடைப்பதை மறுப்பதற்கில்லை.எழுத்து எல்லா காலத்துக்கும் தன்னைத்தானே செப்பனிட்டுக் கொள்வதில்லை என்றாலும் எழுத்தின் ஆழமும் அவை எழுதப்படும் சூழலும்,காலமுமே கதையை நூற்றாண்டுகள் கடந்தும் புத்துயிர்ப்புடன் இருக்கச்செய்வதாக அமைகிறது.அந்தவகையில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 'அகதி மற்றும் மாதுமை' ஆகிய மிகப்பிரதானமான இரண்டு கதைகளும் கிளாசிக் என்று சொல்லலாம்.

பெரும்பாலன கதைகள் வல்லினம், மலைகள்,ஜீவநதி,எதுவரை,முகடு ஆகிய ஆன்லைன் இதழ்களிலும் இலக்கிய சஞ்சிகைகளிலும் புலத்திலும் இனைய வெளிகளிலுமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கதைகளின் களங்களும் அவை படரும் வெளிகளும் நுட்பமானவையாக இருப்பதால் தான் முரண்,தகனம்,டிலீப் டிடியே,ஏறுதழுவுதல்,பருப்பு கதைகள் ஒரு புதிய முயற்சிகளாகவும் ஆக்காட்டி,வெடிப்பு,சுந்தரி ஆகியவை வேறுவகை மாதிரிகளாகவும் அமையப்பெற்றிருக்கிறது.ஒரு கதை அதன் வழமையான பாடுகளில் இருந்து முற்றிலுமாக சமன்குலைந்து விதம்விதமான வகைகளில் கோர்க்கப்படுவதுதான் படைப்பாளனுக்கு அழகு.அதுதான் படைப்பு நேர்த்தியும் கூட.

கதைக்களங்கள் அதன் காலங்களை கொண்டு இறந்தகாலத்தின் துயரத்தை,நிகழ்காலத்தில் மீளாய்வதற்கும் அதன்வழி எதிர்காலத்தை கூடுமானவரை குறைந்தபட்ச சுபிட்சத்திற்காகவேனும் தயார் படுத்திக்கொள்வதற்கான சில வழிவகைகளை,காலச்சக்கரம் நிகழ்த்திக்காட்டும் என்றாலும் கூட அதன் நொடிமுட்கள் எல்லாநேரத்திலும் தன்னியல்பு போக்கிலேயும் சுழலுவதில்லை என்பதால்,ஒவ்வொருவரும் அதன் இனம்புரியாத ஏதோவொரு அனுபவத்தை தன்வாசிப்பின் வழி கண்டடைவதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் புனைவுகள் உருவகப்படுத்தி தரும் என்பதால்,கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமல்ல காலத்தை அதன் முன்னும் பின்னுமான இயல்பின் வழியே புரிந்துகொள்வதற்கும் தான் என்பதை முரண் தொகுப்பு மிககச்சிதமாக சாத்தியப்படுத்தி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம