Skip to main content

குப்பியும் ப தெய்வீகனும்





சற்று முன்னர்தான் ப தெய்வீகன் எழுதிய "சயனைடு" சிறுகதை வாசித்திருந்தேன். முதலில் அங்கு இங்கு என்று அலைய விடாத தெளிவான கதை நடைக்கு வாழ்த்துகள். சாதாரண வாழ்வில் தற்கொலைகளைப் பொலிடோல் குடித்தல், தூங்கி சாதல், என்ற குறியீடுகளிலேயே ஈழத்துச் சமுதாயம் இதுவரைக்கும் பார்த்து வந்துள்ளது. ஆனால் சயனைடு மூலமும் ஒரு சாதாரண வாழ்வில் இருப்பவர் தற்கொலை செய்யலாம் என்பதை சொல்லிநிற்கின்றது இந்த சிறுகதை. தற்கொலைகளுக்கான உத்திகளில் இதுவும் ஒன்று, இதில் என்ன புதுமை இருக்கின்றது என்று மேம்போக்காக யோசிக்கலாம்.

நாங்கள் கடந்துவந்த விடுதலைப் போராட்டத்தில் இந்த "சயனைடு"-வின் பார்வையும் அர்த்தப்படுத்தலும் வேறுவிதமாகவே ஒரு தற்கொலையை நியாயப்படுத்தி இருந்தன. ஏன் அந்த வேளையில் அது சரியாகவும் கூட இருந்தது. இந்த கலாச்சாரம் பொன் சிவகுமாரன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை சனங்களிடம் கொடுத்தது. ஆனால் அதே குறியீடு சாதாரண வாழ்வில் பிரயோகிக்கும் பொழுது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கொண்டு வருகின்றது. சிறுகதையின் இயல்பே தனிய ஒரு தளத்தில் சுழராது பல்வேறு தளத்தில் சென்று வாசகர்களிடையே பன்முக ஊகங்களை கிளப்புவதுதானே. ஆக இந்தக்கதையானது அதை சிறப்பாகவே செய்திருக்கின்றது ஆனால் தேசியர்களுக்கு இந்தக்கதை ஒருபோதும் உவப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. துரோகிகள் சங்கப் பட்டியலில் புதிய துரோகியாக ப தெய்வீகனும் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. சமகாலத்து சிறுகதைப்பரப்பில் மாற்றங்கள் வரவேண்டுமானால் இப்படியான காய்த்தல் உவத்தல்களுக்கப்பாலான கேள்விக்குட்படுத்தல்களே அவசியமாகின்றது. அத்துடன் இந்த சிறுகதையானது ஈழத்தின் / புலத்து எந்த சஞ்சிகையில் வந்திருந்தாலும் இதே அதிர்வினைத்தான் கொடுத்திருக்கும்.

கோமகன்
04/07/2018

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம