Skip to main content

Posts

வாடாமல்லிகை - குறுநாவல் - 04

தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது. வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது. அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.  அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர். அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள். அரேபிய ஷேக்குளின் ஷேக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது. மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் - இறுதிப்பாகம்

வணக்கம் வாசகர்களே ! இதுவரையில் ஏறத்தாள 40க்கு மேற்பட்ட குருவிகளையும் , ஒருசில அழியும் தறுவாயிலுள்ள பறவையினங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் . இவ்வளவு நாளும் எனது குருவிகள் எல்லாம் உங்கள் அன்பிலும் , பராமரிப்பிலும் திக்குமுக்காடினார்கள் . எனது குருவிகள் எல்லோரும் வலசை போகவிருப்பம் தெருவித்தமையால் இன்றுமுதல் இந்தக்குருவிக் கூட்டைக் கலைத்து வானத்தில் பறக்கவிடுகின்றேன் . கோமகன் 00000000000000000000000000000 41 நாகணவாய் புள் - மைனா - starling - oxpecker- Buphagus africanus. starlingகள் மற்றும் oxpecker களுடன் சேர்த்து, மைனாக்கள் ஸ்ட்டேண்டிடே குடும்பத்துள் அடங்குவன. பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியா]]வுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இ

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் - பாகம் 04

31 கடல்ப் புறா - Seagull மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துக http://en.wikipedia.org/wiki/Gull 00000000000000000000000000000 32 பாம்புத் தாரா - Darter - Anhinga- Anhinga anhinga பாம்புத் தாரா  நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமாகும். இப் பறவையை ஆங்கிலத்தில் டார்டர் (Darter) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே. மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை

“ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது” – ஔவை

ஈழத்தின் வடபுலமான அளவெட்டியில் பிறந்த ஔவை ஈழத்துக் கவிதைப் பரப்பில் குறிப்பிடத்தக்க கவிதாயினிகளில் ஒருவர்.பெண்கள் அவர்கள் பற்றிய பார்வைகளை கட்டுடைத்த “சொல்லாத சேதிகள் ” குழுமத்தில் ஔவை முக்கியமானவர்.ஈழத்தின் கவியாளுமையான மஹாகவியின் மகளும் ,கவிஞர் சேரனின் தங்கையுமான இவர் மகளிர் முன்னேற்றம் பெண்ணியம் கவிதை புனைதல் ,ஆசிரியத்தொழில் என்று தன்னைப் பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளார். ஈழத்தின் அரசியல் சூறாவழிகள் புரட்டியெடுத்த பொழுதிலும் ,ஆயுதங்கள் பேசியகாலகட்டங்களிலும் பல சிக்கல்களை எதிர்கொண்டவர். இவரது பேனை ஜனநாயகபண்புகளுக்கே தலைசாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் “எல்லை கடத்தல்” , மற்றும் “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை” என்ற இரு கவிதை தொகுதிகள் ஈழத்து இலக்கியப்பரப்புக்குக் கிடைத்துள்ளது . அண்மையில் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த ஔவையை பலகட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நடு வாசகர்களுக்காக நான் நடாத்திய நேர்காணல் இது .. கோமகன் 000000000000000000000000 ஔவையை வாசகர்கள் எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும் ? வாசகர்கள் என்னை எனது கவிதைகளால் தான் அறிந்து கொள்ள ம

"புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா"?- நிவேதா உதயராஜன்

ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகர் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எளிய சொல்லாடல்களும் அதிரடி கதை தலைப்புகளுக்கும் சொந்தக்காரியான இவர், தமிழ்இலக்கியப்பரப்புக்கு "நிறம்மாறும் உறவுகள் " என்ற சிறுகதைத்தொகுதியையும்," வரலாற்றைத் தொலைத்த தமிழர்கள் " என்ற வராலாற்று நூலையும் இதுவரையில் தந்துள்ளார்.  கோமகன்  00000000000000000000000000000  உங்களை நாங்கள் எப்படித்தெரிந்து கொள்ளமுடியும்?  என்னைக் கட்டாயமாக எல்லோரும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா என்ன? நான் பிறந்து வளர்ந்தது கலைகளுக்குப் பெயர் போன இணுவில் கிராமத்தில். ஐந்தாம் வகுப்புவரை இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்புவரை வேம்படி மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றேன். எண்பத்தைந்தாம் ஆண்டு யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து