தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள் சாதியைச் சுட்டுகின்றன. சமயம் குறித்தும் பெயர்கள் அமைவதுண்டு. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறிய பொழுது, தமது தாழ்வுநிலையை சுட்டி நிற்கும் சாதிப் பெயர்களை விடுத்து மேற்குநாட்டு பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் சாதியைச் சுட்டாத தமிழ் பெயர்களுடன் மேறுகுநாட்டு பெயரையும் இணைத்துக் கொண்டார்கள். தமிழ் இஸ்லாமியர்களும் தமது சமயத்தை சுட்டும் வண்ணமே பெரும்பாலும் பெயர்களைக் கொண்டிருக்கின்றார்கள். பிற மக்களுடான தொடர்புகள் விரிவடையும் பொழுது ஒரு
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்